இரண்டு எட்டு வைத்தவள் நின்று, பின் மீண்டும் திரும்பி சொன்னாள். நடந்த விஷயங்கள், உன்னை எந்தளவு பாதிச்சிருக்கும்னு எனக்கும் புரியுது. ஆனா, இதுனால நீ மட்டும்தான் பாதிப்படைஞ்சிருக்கன்னு நீயா நினைச்சுகிட்டீன்னா, அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. உனக்குனாச்சும், தாத்தான்னு ஒருத்தர் இருக்காரு, ஆனா எனக்கு என்று சொல்லியவள், ஒரு பெரு மூச்சு விட்டு, எப்படியிருந்தாலும் உன் திறமைக்கு, நீ வாங்கியிருக்கிற மார்க்குக்கு, என் வாழ்த்துக்கள்.
எந்தக் காலத்துலியும், இந்தத் திறமையை, உன் படிப்பை நீ விட்டுடாம, இன்னும் மேல வளரனும் என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்று விட்டாள்!
அவளது அன்றைய பேச்சு, எனக்கு மட்டுமல்ல, என் தாத்தாவிற்கும் அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. ஆனால், தாத்தா, அவளுடனும் பாசம் காட்ட ஆரம்பித்தார். நாங்கள் கவனித்த வரை, அவளும் பாசத்துக்காக ஏங்குவதும், அவளது பெற்றோர்களின் மேல் வெறுப்பாய் இருப்பதும், சுயமாக படிப்பு, இன்ன பிற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும், மிக முக்கியமாக, முடிந்தவரை அந்த வீட்டின் பணத்தையும், வசதிகளையும் அனுபவிக்காமல் இருப்பதும் புரிந்தது.
இவை யாவும், அவள் மேலுள்ள என் நல்ல அபிப்ராயத்தை அதிகப்படுத்தியது என்றால், தாத்தாவிற்கு அவள் மேல் மிகுந்த பாசத்தை ஏற்படுத்தியது. ஒரு வகையில், தாத்தாவும் பாசத்திற்கு ஏங்குபவரே. மனைவியும் சரியில்லை, பெற்ற பெண்ணும் சரியில்லாமல் தற்கொலை செய்து கொண்டாள். நானோ, உணர்ச்சிகளைக் காட்டுவதில்லை. இந்த நிலையில், இவள் காட்டிய அன்பு, என் தாத்தாவிற்க்கும் மிகுந்த தேவையாய் இருந்தது.
அவள் எவ்வளவு பாசம் தாத்தாவிடம் காட்டினாலும், தாத்தாவிடம் இருந்து கூட, எந்த பணத்தையும், நகையையும், வசதியையும் பெற மறுத்து விட்டாள். வற்புறுத்திய தாத்தாவையும், இதை வாங்கினால், எனக்கும், என் பெற்றோர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று சொல்லி வாயை அடைத்து விட்டாள்.
போகப் போக, அவளிடம் நான் பேசா விட்டாலும், அவள் உண்மையானவள், மிக நல்லவள் என்பது இயல்பாகி விட்டது. பல சமயம், அவள் தாத்தாவிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் போது, நான் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன். அவள் என்னைக் கூடச் சீண்டுவாள். ஆனாலும் நான் அமைதியாக இருந்தாலும், அதை ரசிப்பேன். நாங்கள் இருவருமே பேசிக் கொள்ளாமலே, ஒருவர் மேல் ஒருவர் அன்பும், அக்கறையும், புரிதலும் கொண்டிருந்தோம்.
எப்போதாவது ஏதாவது எனக்கு ஆலோசனை சொல்ல வேண்டியிருப்பின், அவள் தாத்தாவுடன் இருக்கும் போது ஜாடையாக சொல்லிவிடுவாள்.
Next part
Super next part upload pannunga