காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

என் தந்தை மிக அழகானவர். நல்ல வாட்டசாட்டமானவர். என் அம்மா, மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். பார்க்கச் சுமாராகத்தான் இருப்பார். ஏகப்பட்டச் சொத்து, ஏகப்பட்ட பிசினஸ்கள்!

பணம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல, பல தலைமுறைக்குச் சேரும்!

என் அம்மாவின் அப்பா (தாத்தா), பணத்தை பெருக்கும் வேளையில் பிசினசில் தொடர்ந்து ஈடுபடுகையில், என் அம்மாவை ஒழுங்காக வளர்க்க வேண்டிய என் பாட்டியோ, தன் இஷ்டம் போல் ஆட, விளைவு, என் அம்மா, சுய சிந்தனையற்ற, பிடிவாதம் கொண்ட ஒரு முட்டாளாகவே வளர்ந்தார்.

அப்படிப்பட்ட முட்டாளை, தன் அழகை வைத்து, காதல் என்ற வலையில் என் தந்தை வீழ்த்தினார். பிடிவாதம் கொண்ட என் அம்மாவும், மணந்தால் என் தந்தையைத்தான் மணப்பேன் என்றூ சாதித்தார். அவர் அப்போது, எங்கள் நிறுவனத்திலேயே, ஒரு மேனேஜராக இருந்தார். என் தந்தை அழகு மட்டுமல்ல, மிகுந்த புத்திசாலியும் கூட. ஆனால், அது குறுக்குபுத்தியாக மட்டுமே வேலை செய்யும்!

அது என் தாத்தாவிற்கு நன்கு தெரியும். ஆகையால் அவர் திருமணத்தை முடிந்த வரை எதிர்த்தார். ஆனால் பலனில்லை. இறுதியில், முட்டாளான என் அம்மாவிடம், பாசத்தின் காரணமாக, புத்திசாலியான என் தாத்தா தோற்றார்.

அந்தக் கல்யாணத்தின் விளைவு நான் பிறந்தேன். என் அப்பா, எங்கள் நிறுவனத்தின் எம் டி ஆனார். என் தந்தைக்கு காசு வேண்டும். என் அம்மாவிற்கு, என் தந்தையின் அழகை அடைந்தால் போதும். இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை இருந்தது. என் அப்பா, பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார். பிசினஸ் விஷயமாக வெளியூர் அடிக்கடி சென்று வருவார்.

நான் பெரும்பாலும் வேலைக்காரர்கள் கையில்தான் வளர்ந்தேன். என் பாட்டியைப் போலே, என் அம்மாவும், என்னிடம் பெரிதாக பாச காட்டவில்லை. சின்ன வயதிலிருந்து நான் கேட்டதெல்லாம் கிடைக்கும், பாசம் ஒன்றைத் தவிர. என் தாத்தா மட்டுமே, எனக்காக மிகவும் வருந்துவார். அந்தச் சின்ன வயதில், நான் பாசத்திற்க்காக ஏங்குவதும், அது கிடைக்காமல் நான் தவிப்பதும், அவருக்கு பெரும் துயரத்தைத் தந்தது. இருந்தும் அவராலும், ஒரு அளவிற்கு மேல் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை. அவர் ஆரம்பத்திலிருந்தே என் தந்தையை நம்பவில்லை.

நான் பத்தாவது படிக்கும் சமயம், இன்னும் 10 நாட்களில் எனக்கு பொதுத் தேர்வு வருகின்ற சமயம். அந்தச் சமயத்தில்தான் அந்த உண்மை எங்களுக்கு தெரியவந்தது.

அதாவது, என் தந்தைக்கு, என் அம்மாவைத் திருமணம் செய்யும் முன்பே, இன்னொரு திருமணம் ஆகி இருந்தது. அவருடைய முதல் மனைவிக்கும் கூட, காசிற்க்காக என் அம்மாவை, என் அப்பா மணப்பது சம்மதம் என்கிற உண்மை.

அந்த உண்மை தெரிந்த அடுத்த நாள், என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்.

அன்னையின் தற்கொலை எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை மட்டுமல்ல, சில மனச் சிக்கல்களையும் எனக்கு தந்தது.

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.