அதில், நான், அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அவளுக்கு தேவைப்படும் சமயத்திலோ அல்லது எப்போது கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளோ, அப்போது ஒப்படைக்கச் சொல்லியும் இருந்தது. அது அவரது கடைசி ஆசை என்றும் இருந்தது.
அவளுக்கு தாத்தாவின் அன்பைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கியது. பின் என்னைப் பார்த்தாள்.
நான் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தேன். ஆனா, தாத்தாவே, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு எல்லாமே சொல்லிட்டாரு. இந்தப் பணம், உன்னோட ஷேர் படி, உனக்கு வர வேண்டிய க்வாட்டர்லி ப்ராஃபிட். இன்னிக்கு இதை உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு!
ஆனா, எனக்கு பணம் முக்கியமில்லைன்னு உனக்கு தெரியாதா?! இப்போதும் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதில் வேகம் குறைந்திருந்தது.
நீ நல்லவ. பணம் முக்கியமில்லைன்னு நினைக்கிறவ.
ஆனா, நீ இருக்கிற உலகம் அப்படி கிடையாது. அதிலும் பணம் அதிகம் இருக்கிர இடத்துல, வக்கிரம் பிடித்த ஆட்களும் அதிகம். நீ உன்னைக் காப்பாதிக்கனும்னா, இது இருக்குறது நல்லது.
ஆக, திறமை மேல நம்பிக்கை வைக்காத, பணத்து மேல வைன்னு சொல்லுற இல்ல?
பைத்தியம் மாதிரி பேசாத? வெறும் திறமையோ, பணமோ யாரையும் காப்பாத்தாது. எல்லாமே, எப்படி உபயோகப்படுத்துரதுங்கிறதுலதான் இருக்கு. கராத்தே கத்துக்கோன்னு சொல்ற மாதிரிதான் இதுவும்! இல்லாதவங்கன்னா ஓகே. உனக்கு இருக்குங்கிறப்ப எதுக்கு இந்த பிடிவாதம்?
ஓ, காசு கேட்ட ஆளுங்க மூஞ்சில, இந்தப் பணத்தைக் காமிச்சு, என் வாழ்க்கையை காப்பாத்திக்கச் சொல்ற? அப்படித்தானே?!
அவளையே பார்த்தேன். கோபத்தில் அவள் பெருமூச்சு வாங்கினாள்!
கோபத்துல வார்த்தையை விடாத! அமைதியா இரு! அவிங்க சாதாரண மாமனார், மாமியார் மாதிரி கொஞ்சம் சீர் எதிர்பார்த்திருந்தா, நானே இதைக் கொடுக்கச் சொல்லியிருந்திருப்பேன். ஆனா, அவிங்க நடந்துகிட்ட விதம், நீ அனுபவிச்ச கொடுமையை, நான் அவ்வளவு சாதாரணமா விட்டுட மாட்டேன்! இதை சொன்ன போது என் கண்களில் தெரிந்த கோப வெறியைப் பார்த்து அவளே தடுமாறினாள்.
மெல்ல என் கையைப் பிடித்தாள், சாரி என்றாள்!
Next part
Super next part upload pannunga