காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

கேவலம், இந்தத் தருணத்தில் கூட, எனக்காக வாழ வேண்டும் என்கிற எண்ணம் வரவில்லையா? இவர் ஆசைப்பட்டால், தந்தை வேண்டும். தந்தை ஏமாற்றி விட்டார் என்றால் தற்கொலை செய்து கொள்வார். அவ்வளவு சுயநலம், பிடிவாதம். அப்புறம் ஏன் என்னைப் பெற்றெடுக்க வேண்டும்?

ஏனோ, எனக்கு என் தந்தையை விட, என் தாயின் மேல் கடும் வெறுப்பு வந்தது.

அந்த முகம் தெரியாத அந்த முதல் மனைவியின் மேலும் கடும் வெறுப்பு வந்தது! எந்த மாதிரி பெண்ணாக இருந்தால், காசுக்காக, தன் கணவனை விட்டு, இன்னொரு பெண்ணை ஏமாற்றச் சொல்லுவாள்? இந்த துரோகமும், ஏமாற்றமும், சின்ன வயதிலிருந்தே கிடைக்காத பாசமும், என்னை ஒரு உணர்வற்ற, பெரிதாக எதற்க்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு மனிதனாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. நான் ஒரு இரும்பு மனிதனானேன்.

பொதுத் தேர்வு ஆரம்பிப்பதற்க்கு இரண்டு நாட்கள் முன்பு, என் தாய் இறந்த ஒரு வாரத்திற்க்குள், என் தந்தை, அவர் முதல் மனைவியையும் என் வீட்டிற்க்கே கூட்டி வந்தார். அதற்க்கு என் தாத்தா பெரிய எதிர்ப்பு தெரிவிக்கையில், தன் பையனான என்னை அழைத்துக் கொண்டு தான் வெளியேறி விடுவதாகவும், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்றும் என் தந்தை பயமுறுத்த, வேறு வழியின்றி என் தாத்தாவும், எனக்காக அதைச் சகித்துக் கொண்டார்.

அப்பேர்பட்ட என் தந்தைக்கும், அவர் முதல் மனைவிக்கும் பிறந்தவள்தான், இவள். என் அக்கா!

என்னை விட மூன்று வருடங்கள் மூத்தவள். இந்தச் சம்பவம் நடக்கும் போது அவள் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

என் தந்தை, சித்தியுடனும், இவளுடனும் என் வீட்டுக்குள் நுழையும் போதுதான் இவளை முதலில் பார்த்தேன். அப்போது, அவள் கண்களில் மிரட்சி இருந்தது. அவளது தந்தை மேலும், தாயின் மேலும், வெறுப்பு இருந்தது. என்னைப் பார்த்த போது கொஞ்சம் பரிதாபம் கூட இருந்தது.

நானோ, எந்த உணர்வையும் காட்டாமல், கல்லைப் போல் முகத்தை வைத்திருந்தேன்.

அதன் பின்னும் இதே நிலை நீடித்தது. எப்போதும் போல் என் தந்தை என்னை கண்டு கொள்வதில்லை. சித்தியும் அப்படியே. என் தாத்தா மட்டுமே, என்னிடம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்.

நான் எதையும் வெளியே காட்டாமல், படித்து தேர்வு எழுதினேன். 2 மாதம் கழித்து தேர்வு முடிவு வெளிவந்த போது, நான் பள்ளியிலேயே முதலிடம் வாங்கியிருந்தேன். அது என் தாத்தாவிற்கு மிகப் பெரிய சந்தோஷம் கொடுத்தது. என் தாத்தா, என்னைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்ட போதுதான், என் அக்கா என்னிடம் தயங்கித் தயங்கி வந்தாள்.

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.