காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

அவன் என்னை இன்னும் இறுக்கி அணைத்தான்!

என்னமோ பெருசா சொன்ன, கல்யாணம் ஆன புதுசுல! இனிமே, நான் எப்பியும் சந்தோசமாத்தான் இருக்கனும்னு?! நான் இவ்ளோ வலியை, என்னிக்கும் அனுபவிச்சதில்லை தெரியுமா?

அவன் கைகள் என் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தது! அவன் உதடுகள், சாரிம்மா, ப்ளீஸ் மா என்று தொடர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தது!

போடா! இப்ப எதுக்கு வந்த? போ! நான் அடிப்பதை நிறுத்தியிருந்தேன், என் கைகள் அவனை இறுக்கி அணைத்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக பேச்சையும் நிறுத்தியிருந்தேன். எனது அழுகை, விசும்பல்களாக குறைந்திருந்தது! அவன் கைகள் இன்னமும் என் முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தன. அவன் இன்னும் சாரி சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.

திடீரென்றுதான் உணர்ந்தேன், எனது தோளில் விழுந்த துளி கண்ணீரை!

அவசரமாக விலகி, ஹரீசைப் பார்த்தேன். எவ்வளவு நேரம் அழுகிறானோ தெரியவில்லை, ஆனால், அவனது கண்களில் இருந்தும் கண்ணீர். நான் பயந்த மாதிரியே ஆயிற்று.

நான் அவனை மன்னித்தாலும், அவன் அவனை மன்னிக்க மாட்டான்! அவ்வளவு நல்லவன்!

ஹரீஸ்!

என்னை மன்னிச்சிடுவில்ல?

ஹரீஸ், அழாதீங்க ப்ளீஸ்! நான் பதறினேன்.

நீ…..நீ, என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லு!

பெண்ணிடம், தன் தவறுக்காக, ஆண் விடும் கண்ணீருக்கு இணை எதுவும் இல்லை. அந்த அன்பு ஈடு இணையற்றது! அந்த அன்பை புரிந்து கொள்ளும் பெண் மிகுந்த புத்திசாலி.

அப்போதுதான் உணர்ந்தேன்! இது என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகும் ஒரு முக்கிய தருணம் என்று. இப்போது, நான் எடுக்கும் முடிவு, நான் சொல்லும் என்னுடைய வார்த்தைகள், வாழ்நாள் முழுமைக்கும் வர வாய்ப்புண்டு!

நான் முடிவெடுத்தேன்! என் கண்களைத் துடைத்துக் கொண்டேன்! ஹரீஸை இழுத்து, என் மார்போடு அணைத்துக் கொண்டேன்! ஹரீஸீன் கண்ணீரைத் துடைத்து விட்டேன். என் கன்னத்தை அவனது தலை மேல் வைத்து, என் கையை, அவனது கன்னத்தில் வைத்து, அவனை இறுக்க அணைத்துக் கொண்டேன்!

ஹரீஸும், தாயின் மடி சேரும் குழந்தை போல், என்னிடம் சரண் புகுந்தான். அவன் கைகள் மீண்டும் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டன. நான் அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தேன்.

மெல்ல, அவன் தலைமேலாகவே என் முத்தங்களை வழங்கினேன். அவனது தலையைக் கோதிக் கொடுத்தேன். எனது செய்கைகள் அவனுக்கான ஆறுதலை மட்டும் தரவில்லை! அவனுக்கான செய்தியையும் தந்தது. நான் அவனை மன்னித்து விட்டேன் என்று!

அப்படியே நீண்ட நேரம் இருந்தோம். பின் ஹரீஸே விலகினான்! விலகியவன், என் கண்களையே பார்த்தான்!

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.