காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

நான் மெதுவாகச் சொன்னேன், இதை யூஸ் பண்ணி உன் ஆபத்துல இருந்து தப்பிச்சிக்கோன்னு சொல்லலை. இது இருக்குறதே, எதிர்காலத்துல உனக்கு பல ஆபத்துகளை தடுக்கும்னு சொல்லுறேன். சீறுனாத்தான் பாம்புக்கு கூட மரியாதை! இல்லாட்டி, அதுக்கும், மண்புழுவுக்கும் வித்தியாசம் காமிக்க மாட்டாங்க மனுஷங்க.

தாத்தாவோட ஆசை, எனக்கும் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தது, இனி உன் கையில கொஞ்சம் பணமும், துணைக்கு நானும், நீ பொறுப்பெடுத்துக்க சில கடமைகளும் இருந்துச்சுன்னா, அதுவே உன்னை கொஞ்சம் வழிநடத்தும்.

அன்னிக்கு ஹரீஸ்க்காக அவ்ளோ ஃபீல் பண்ணி பேசுன! ஒரு வேளை நீ அன்னிக்கு சூசைட் பண்ணியிருந்தா, பொய்யான கூட்டத்துல அவரை தனியா விட்டுட்டு போயிருந்தா, அது அவருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இல்ல நீ சூசைட் பண்ணதுக்கு காரணம் அவிங்க சித்தப்பா, சித்திதான், அதை அவர்கிட்ட சொல்ல வந்தப்ப, அவர் காது கொடுத்து கேக்கலைன்னு தெரிய வந்திருந்தா குற்ற உணர்ச்சிலியே செத்துட மாட்டாரு?

அவளுக்கு, அது வரை இது தோணவில்லை என்பதை அதிர்ந்த, விரிந்த அவள் கண்கள் சொல்லியது!

அதுவும் இல்லாம…சிறிது இடைவெளி விட்டவன் சொன்னேன், என்னால, நீ தற்கொலை வரை போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை. ஒரு வகையில, அதுக்கு நானும்தானே காரணம்! நான் உன் மேல இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட வந்து சொல்லியிருப்ப, இப்பிடி தற்கொலைக்கு போயிருக்க மாட்ட! இதை என் தப்புக்கான பிராயிச்சத்தம்னு எடுத்துகிட்டாலும் சரி, உனக்கு உரிமையுள்ள பங்குன்னு நினைச்சாலும் சரி, இல்ல தாத்தாவோட கடைசி ஆசைன்னாலும் சரி, நீ இதை ஒத்துகிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ்!

அவள் என் கையைப் பிடித்தாள். டேய், ரொம்ப ஃபீல் பண்ணாத, அப்பிடில்லாம் நான் உன் மேல நம்பிக்கை இல்லாம, உடனே அந்த முடிவுக்குப் போகலை. நான் ஒரு நாள் இதுக்காக ஃபோன் பண்ணேன். நீ எடுத்தவுடனே, என்னனு கேக்காம திட்டி வெச்சுட்ட. அப்புறம் நான் வீட்டுக்கு வந்தப்பயும், உன்கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கு, நீதான், உனக்கு டைம் இல்லை, ஏகப்பட்ட வேலை இருக்குன்னு பேசுன… அதுலதான் கொஞ்சம் மனசு நொந்து இப்படி நடந்துகிட்டேன்! நீ ஏன் அப்படி பண்ண?

அது…. அன்னிக்கு உன் ஃபிரண்டு கூட சண்டை அதான்…என்று கொஞ்சம் தடுமாறினேன். ப்ச்.. அது ஏதோ மூட் அவுட். விடு. தப்புதான்! இப்ப இதை ஒத்துக்கப் போறியா இல்லையா???

அவள் என்னையே ஏதோ நம்பாமல் பார்த்தாள். பின் கேட்டாள், காசு கொடுத்துதான் அன்பை நிரூபிக்கனுமா என்ன?

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.