காமத்துக்கும் ஆசைக்கும் வயது முக்கியமல்ல பாகம் 1 85

கான்ஃபரன்ஸ் அறையில் பெரிய கரகோஷம்! அவள் முகத்தில் பல உணர்ச்சிகள். யாருக்கும் தெரியாமல் என்னை முறைத்தாள். எதை வெளிக் காட்டினாலும், அது என்னை அவமானப்படுத்தும் என்பதால் அமைதியாக எல்லாருக்கும் நன்றி சொன்னாள். இருந்தாலும், தான் கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், நான் எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தாள். அவள் அதைச் சொன்ன போது, என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்.

அதில் மறைமுக செய்தி இருந்தது. நீ கொடுத்தா நான், வாங்கிக்கனுமா?

சிறிது நேரம் கழித்து, என் அறையில்!

நான் உன்கிட்ட என்ன கேட்டேன், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் சொத்தா கேட்டேன்? இல்ல இதுக்கு ஆசைப்பட்டுதான் நான் வந்தேன்னு நீயா நினைச்சுகிட்டியா?

தாத்தா என்கிட்ட பணம் கொடுத்ததுக்கே, இங்கியே வேலை செய்யச் சொன்னதுக்கே ஒத்துக்காதவ இப்ப நீ சொன்னா நான் கேட்கனுமா? அவிங்க முன்னாடி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கம்முனு இருந்தேன். என்னுடைய முடிவுகளை எடுக்க நீ யாரு? நான் உன்கிட்ட எதிர்பாக்குறது பாசம்தான், ஆனா நீ அதையும் விலை போட்டுட்டீல்ல? அவள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்! கோபத்தில் சிறிது கண் கலங்கியும் இருந்தது.

நான் அவளையேப் பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன்!

அவள் குடித்து முடித்த பின், அவள் முன் சில டாக்குமெண்ட்களையும், பாஸ்புக்கையும் நீட்டினேன். டாக்குமெண்ட், கம்பெனி ஷேர்களில் 20% அவளது பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. அவளது அக்கவுண்ட்டில், சில கோடிகள் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அவள் இன்னும் கடுப்பானாள்.

முதல்ல டாக்குமெண்ட்ல இருக்குற தேதியைப் பாரு.

பார்த்தவள் அதிர்ந்தாள். ஷேர்களை அவள் பெயருக்கு மாற்றியது, தாத்தா இறந்து ஒரு மாதத்தில் நடந்திருந்தது. அதே போல், அக்கவுண்டில் இருக்கும் பணமும், ஒரேடியாக இல்லாமல், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை என்று இரண்டு முறை போடப்பட்டு இருந்தது. நான் இன்னொரு லெட்டரையும் அவளிடம் நீட்டினேன். அது தாத்தா, எனக்கு உயிலுடன் சேர்த்து எழுதியிருந்த கடிதம்.

2 Comments

  1. Next part

  2. Super next part upload pannunga

Comments are closed.