ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

” அப்படித்தான் வெச்சுக்குங்களேன்..!!” என்று சிரித்தாள்.
”ம்..ம்..! தேவலையே..! என்ன பேரு..?” அவளிடமே கேட்டேன்.
நீ… ”தீபா…” என்க..
அவள் ”மலர்…!!” என்றாள்.
நான் இருவரையும் பார்த்தேன். ”தீபாவா…? மலரா..?”
நீ சிரிக்க… அவள்..
”ரெண்டும்…!!” என்றாள்.
” ரெண்டு பேரா…?”
”ரெண்டு பேரு இல்ல..!! ஒரே பேருதான்..!!”
” ஒரே பேரா..?” நான் உன்னைப் பார்க்க…
நீ ”ஆமாங்க…!!” என்றாய்.
”எப்படி…?”
அந்தப் பெண் ”தீபமலர்..!!” என்றாள்.
”ஓ…!! தீபமலர்…!! இப்படி ஒரு பேரா…?”
” ஏன்… இந்தப் பேருக்கு… என்ன..?” வியுப்புடன் என்னைப் பார்த்தாள்.
”நல்லாத்தான் இருக்கு..!! ஆனா இதுக்கு முன்ன… நான் கேள்விப்பட்டதே இல்ல. .!!”
”நீங்க கேள்விப் படலேங்கறதுக்காக… பேரு வெக்காம இருக்க முடியுமா…?” என்றாள்.
”ம்.. நல்லா பேசற..? படிக்கறியா..?”
”சே…சே…! அதெல்லாம் கெட்ட பழக்கம்..!!” என்று சிரித்தாள்.
நான் ”சரி.. நா.. போகட்டுமா தாமரை..?” என்றேன்.
நீ தலையாட்டினாய் ”செரிங்க..”
தீபமலர் என்னிடம் கேட்டாள்.
”எந்த ஊரு…?”
”இதே ஊருதான்..! ஏன்..?”
”தெரிஞ்சுக்கத்தான்..! கல்யாணமானவங்களா..?”
”இல்ல…! நீ ரெடின்னா.. சொல்லு பண்ணிக்கலாம்.!!” என்று விட்டுக் காரை உசுப்பினேன்.
நீ.. சிரிக்க… அந்தப் பெண் என்னை முறைத்தாள்..!
”எங்களுக்கெல்லாம்.. ஆளு இருக்கு..! தெரிஞ்சுக்கோங்க..!!”
”ம்ம்… வாழ்த்துககள்..!!” என்று கையசைத்து.. காரை நகர்த்தினேன்.
”அடிக்கடி.. வாங்க..!!” என்றாள் தீபமலர்..!!
நான் ஸ்டேண்டுக்குப் போனதும் குணா.. என்னிடம் வந்து கேட்டான்.
”என்னடா… இப்பெல்லாம் மத்தியாணத்துக்கு மேலதான்.. வரே..! அப்படி எங்க போற..?”
நான் சமாளித்தாக வேண்டுமே..? ”இல்லடா… பெரியம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு செரியில்ல.. அதான்.. ஆஸ்பத்ரி… போய்ட்டு…”
”ஏன்டா… என்னாச்சு..?”
”வயசாய்டிச்சுல்ல… பிரஷ்ஷரு.. சுகருனு.. ஏதாவது ஒரு தொந்தரவு..!!” என்று விட்டு.. பேச்சை மாற்றினேன் ”அவனுக எங்க..?”
”டீக்கடைல இருப்பானுக…” என்றான்.
”நட போலாம்…!!” என்றேன்.
இருவரும் பேசிக்கொண்டே… டீக்கடைக்குப் போனோம்..!!

ஜீ வி இண்டர்நேசனல்..!! கண்ணை உறுத்தாத மென்னொளி.. அந்த பார் முழுவதும் பரவியிருந்தது..! வட்ட மேஜைகளும்… சோபாவும் நிரம்பியிருந்தது..! நாங்கள் ஒரு மேஜையை ஆக்ரமித்திருந்தோம்..!
சுவர் தொலைக் காட்சிகளில்.. குத்து பாடல்களுக்கு… தளுக்கிக் குலுக்கி ஆடும் கவர்ச்சிக் ‘கன்னி.?’ களை… நிறையக் கண்கள் மொய்த்திருந்தன.. !!
நண்பர்கள் பிராண்டி… எடுத்துக் கொள்ள.. நான் பீர் எடுத்துக் கொண்டேன்..!
”எனக்கொரு புது.. ஐட்டம் மாட்டுச்சு.. மாம்ஸ்..!!” என்று சபையில் புதிரைப் போட்டான் சங்கர்.
”யாரு மாமு.. அது..?” என்று கேட்டபடி சிகரெட் பற்ற வைத்தான் வினு.
”சும்மா சொல்லக்கூடாது மச்சான். கட்டைன்னாலும் கட்டை… செமக்கட்டை..!! கண்ல பாத்தாலே.. அவள கட்டல்ல தள்ளி… மஜா பண்ணனும்னு தோணும்டா.. அப்படி ஒரு அம்சம்…!!”
”எங்கருக்கா…?” குணா.
” லோக்கல்தான்..!! வேனுமா சொல்லு.. ஒரு புரோகிராம் போட்றுலாம்..?” .
”எந்த ஏரியா…?”
”அவ நெம்பர் என்கிட்ட இருக்கு..! இப்பகூட பேசலாம்..! பட் நீங்க.. ஓகேவா..?”
பீரைப் பருகிக்கொண்டிருந்த நான்.. ”இப்பவா..?” என்று கேட்டேன்.
”அதையும் நீங்கதான் சொல்லனும்..?”
”என்ன ரேட்டு..?”
”டோண்ட் வரீ… அத பேசிக்கலாம்..! நீங்க என்ன சொல்றீங்க..?”
குணா ”கல்யாணமானவளா..?”
”ச்ச..! இல்லடா..! ஜாப்புக்கு போறா..!!” வினு.
”எங்க..?”
”அதுவா முக்கியம் இப்ப..? என்னடா சொல்றீங்க..?”
குணா ”ம்.. ஓகேடா..!! பேசு..!!”
”நான் ஒன்னு சொல்லட்டுமா..?” சங்கர்.
” சொல்லு..!”
”நாளைக்கு.. பிக்ஸ் பண்ணிரலாமா..? பிக்னிக் போலாம்..?”
”எங்க..?” வினு ”எங்கடா போலாம்..?”
குணா ”பில்லூர் போலான்டா.. ரொம்ப நாளாகிருச்சு..” என்றான்.
அது எல்லோருக்குமே.. திருப்தியாகப் பட்டது..! பாரிலிருந்து கிளம்பி வரும் போது எல்லோரும் பில்லூர் போகலாமென முடிவாகியது..!!
காலை..!! படபடவெனக் கதவு தட்டப்பட்டு… நான் தூக்கம் கலைந்தேன். கடிகாரம் பார்த்தேன்.! மணி ஏழு..!
இந்த நேரத்தில் யார்..? ஒருவேளை குணாவோ..?
போர்வையை விலக்கி எழுந்து… லுங்கியை எடுத்து.. அதுக்குள் நுழைந்து.. இடுப்பில் கட்டிக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன்..!! முகத்தில் புன்னகை தவழ.. நீ நின்றிருந்தாய்.! உன்னைப் பார்த்ததும் என்னுள் ஒரு சிலிர்ப்பு எழுந்தது.
”ஓ..! நீயா..? வா..வா..!!” என்றேன் சற்றே மலர்ந்து.
”நல்லா தூக்கங்களா..?” மெல்லிய புன்னகையுடன் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாய்.
”ம்..”
”ஐயோ..! நா வந்து.. உங்க தூக்கத்த கெடுத்துட்டங்களா..?”
” பரவால்ல..விடு.! ஆமா என்ன இத்தனை நேரத்துல..?”
”வேலைக்கு…” தயங்கினாய். ”வரச் சொன்னீங்களே..?”
”ஓ..!” என்று விட்டு பாத்ரூம் போனேன்.
முகம் கழுவி வந்தேன். நீ இன்னும் நின்று கொண்டிருந்தாய். உன் அருகில் வந்து.. உன் மார்பில் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்து… முக ஈரம் துடைத்தேன். உன் கழுத்தில் பாசியும் செயினும் இணைந்து தொங்கியது. ஆனால் பார்க்க அழகாகத் தெரிந்தது.
” நீ இவ்வளவு நேரத்துல வரவேண்டியது இல்ல..!” என்றேன்.
”ஐயோ..! ராத்திரியெல்லாம் எனக்கு தூக்கமே இல்லீங்க..! எப்படா விடியும்… எப்படா விடியும்னு கோழி மாதிரி.. முழிச்சு.. முழிச்சு பாத்துட்டே இருந்தேன்… வெடிஞ்சதும் கெளம்பிட்டேன்..!!”
”அத்தனை ஆர்வமா..?” துப்பட்டாவை மீண்டும் உன் கழுத்தில் போட்டு விட்டேன். நீ கூச்சத்துடன் சிரித்தாய்.
”ம்..சரி..! சாப்பாடெல்லாம் என்ன பண்ண..?”
”சாப்பிட்டங்க..! ஆக்கி சாப்பிட்டு… டிபன்ல போட்டும் எடுத்துட்டு வந்துட்டங்க..!!” என்று கீழே வைத்திருந்த… உன் பேகை எடுத்து… ஜிப்பைத் திறந்து… டிபனை வெளியே எடுத்துத் திறந்து காட்டினாய்..!
”ம்..ம்..! என்ன சாப்பாடு..?”
”தாளிச்சு ஆக்கிட்டங்க..!!”
”தக்காளி சாப்பாடா..?” என வாசம் பிடித்தேன்.
” ஆமாங்..” என்று சிரித்துவிட்டுக் கேட்டாய். ”காபி வெக்கட்டுங்களா..?”
” ம்..! வெய்..!!”
” பாலுங்க..?”
”வாங்கனும்..!!”
”நான் போயி… வாங்கிட்டு வரங்க..?”
”காசு…?”
”இருக்குங்க….” என்றுவிட்டு நீ வெளியே போனாய்.. !!

நான் கண்ணாடி முன்னால் நின்றேன். என் முகத்தைப் பார்த்து விட்டு கலைந்திருந்த தலைமுடியை வாரிக்கொண்டு.. ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் குடித்தேன்..! டிவியைப் போட்டு விட்டு… ஜன்னல் கதவைத் திறந்து வைத்தேன்..!!

1 Comment

Comments are closed.