ஒரு எதார்த்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கதை 4 41

என் அருகில் வந்து அமர்ந்த நீ.. வெள்ளரிப் பிஞ்சை எடுத்து.. என்னிடம் நீட்டினாய்.
“இந்தாங்க..”
வாங்கிக் கடித்தேன்..! உப்பும்… காரமும்… நாக்குக்கு… உரைப்பாக இருந்தது…!!
” அவங்க.. படிக்கறாங்களா..?” என்று திடுமெனக் கேட்டாய்.
”எவங்க..?” என்று உன்னைப் பார்த்தேன்.
”கோயில்ல பாத்தங்களே.. உங்க நண்பரோட தங்கச்சி..?”
”ஓ..! நிலாவினியா..?”
” ம்… அவங்கதாங்க…!!”
புன்னகைத்தேன் .
”இல்ல.. வேலைக்கு போய்ட்டிருக்கா..”
”அழகா இருக்காங்க ..”
” அழகானு சாதாரணமா சொல்லிட்ட…?”
” ஜோதிகா மாதிரி.. இருக்காங்க..!!” என்று சிரித்தாய்.
நானும் சிரித்தேன்.
”ஹா..ஹா.. ஜோதிகாவா…?”
”ஒடம்ப சொன்னங்க..”
”ம்..ம்..! கொஞ்சம் குண்டுதான்.. இல்ல…?”
”ஆமாங்க… ஆனாக்கா நல்லாருக்காங்க…! ஜோதிகாவ விடவே… அழகுங்க..!!”
”ஏய்..! ஜோதிகாவ கம்பேர் பண்ணாத..! ஜோதிகா அழகு வேற… இவ அழகு வேற..!!”
”எனக்கு தெரிஞ்சத வெச்சு… சொன்னங்க…” என்றாய்.
”சினிமா நடிகைங்க எல்லாம் மேக்கப்லதான்.. அழகா தெரியறாங்க.. தாமரை..! உனக்குக் கூட மேக்கப்லாம் போட்டா… நீயும் ஒரு சூப்பர் பிகர் ஆகிருவ..! ஆனா இவ மேக்கப் இல்லாமலே அழகிதான்..!!” என்றேன்.
நிலாவினி.. எனக்குள் ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம்..! அவளை நான் பார்க்கும் போதெல்லாம்.. எனக்குள் தோன்றும்.. எண்ண அலைகளின் கிளர்ச்சியை என்னவென்று சொல்லுவேன்..? அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.. !!
”நல்லா.. பழகுவாங்களா.. உங்க கூட..?” மாம் பிஞ்சை கடித்துக் கொண்டே என்னைப் பார்த்துக் கேட்டாய்.
”ம்..! ஜாலியா பேசுவா.. பழகுவா..! ஏன் தாமரை..?”
”சும்மாதாங்க கேட்டேன்..” என்று சிரித்தாய்.
நானும் சிரித்தேன்.
”ஆனா அவ.. என் நண்பனோட தங்கச்சியா போயிட்டா.. தாமரை…”
”நீங்க… காதலிக்கறீங்களா..?”
”காதலிக்கறேனேவா…? ஹூம்..! அதெல்லாம் சொன்னா.. புரியாது உனக்கு..!!” என்றேன்.
நீ.. வெள்ளையாகச் சிரித்தாய்.
”என்னோட கனவுகள்ள.. அதிகமா வர்ற.. கனவுக்காட்டேரி.. அவ..!!” என்றேன்.
” அழகா… லட்சணமா இருக்குங்க…”
”ம்ம்..!!” பெருமூச்செறிந்தேன்.
”அவங்கள.. காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குங்க…”
” அதுசரி….”
”ஏங்க…?”
” அதெல்லாம்… பெரிய லெவல்மா…!! நம்மளே.. ஒரு அன்னக்காவடி..!!”
நீ வெறுமனே சிரித்தாய்..!
” உனக்கு கவிதைகள் புடிக்குமா தாமரை..?” என உன்னிடம் கேட்டேன்.
”கவிதைங்களா… எப்படிங்க இருக்கும்..?” என்று அப்பாவித் தனமாகக் கேட்டாய்.
”கிழிஞ்சது.. போ..!!” நான் சலித்துக் கொள்ள.. சிரித்து
”இந்த சினிமா.. பாட்டுலகூட வருங்களே..?” என்றாய்.
”ம்..ம்..! சினிமா பாட்டே.. கவிதைகளோட பிரதிபலிப்புத்தான்…!!”
கவிதை என்றால் என்னவென்றே தெரியாத உன்னிடம் எப்படி… கவிதைகள் பற்றியும்.. என்னையும் கொஞ்சம் கவிதைகள் எழுத வைத்த… நிலாவினி பற்றியும் நான் பேச முடியும்..?? அர்த்தமற்ற பேச்சுத்தான்..!!
நீ மெதுவாகக் கேட்டாய்.

1 Comment

Comments are closed.