வாசமான ஜாதிமல்லி 5 26

சரவணனின் கார் பழைய கோயில் மைதானத்தை அடைந்தபோது, பிரபுவின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே அங்கே நிறுத்தி வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதே மோட்டார் சைக்கிள். அவன் அதை இன்னும் விற்கவில்லை என்று தெரிகிறது, அவன் அந்த இடத்தை விட்டு போகும் போது அதை இங்கேயே விட்டுவிட்டிருக்க வேண்டும். பிரபு எங்கும் காணப்படவில்லை. அவன் பழைய கோயில் மண்டபத்தின் உள்ளே இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முன்பு அந்த இருண்ட மாலை நேரத்தில் வந்ததுக்கு இப்போதைக்கு வித்தியாசம் இருந்தது. அன்று அந்தி பொழுது, இடி மின்னல் மழை பேயும் நேரம் அனால் இப்போது பிற்பகல் 3 மணிக்கு இது மிகவும் சூடாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. அன்று மனதில் இருள் சூழ்ந்திருந்தது அனால் இன்று இப்போது இருக்கும் வானிலை போல மனம் தெளிவாக இருந்தது.

என்னவென்றால் மனதில் சில காலமாக இல்லாதது போல இப்போது மிகவும் நிம்மதியாக இருந்தது. ஒருவேளை அவன் தடுமாறுவதை நிறுத்திவிட்டு, இறுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததனால் இப்படி இருக்கலாம். சரவணன் மண்டபத்திற்குள் நுழைந்தபோது, பிரபு சுவரோடு ஒட்டி இருந்த ஒரு சிறு திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் முற்றிலும் வழுக்கையாக மற்றும் மீசை இல்லாமல் இருந்தான். தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் மற்றும் அவர் நல்லுடலுக்கு தீ வைத்தபின் பாரம்பரிய நடைமுறையின்படி முழுதாக ஷேவ் செய்திருந்தான்.

அப்போது அவன் என்னிடம் என்ன சொன்னான் என்று சரவணன் நினைத்தான். அவன் தந்தையின் இறுதிச் சடங்குகளை, அதுவும் அவனோடேயே உறுமியான அதை, செய்ய கூட அவன் வர கூடாது என்று அவன் தந்தை தடை செய்துவிட்டார் என்றல்லவா சொன்னான். இப்போது அவனை பாரு, எந்த உரிமையும் அவனுக்கு மறுக்கப்படவில்லை. எப்படியிருந்தாலும், நான் அதைப் பற்றி வருத்தப்படக்கூடாது. இறுதி சடங்கில் பிரபு மட்டும் இல்லாமல் போயிருந்தால், அது நகர மக்களின் இடையே வதந்திக்கும், வீண் பேச்சுக்கும் இடம் கொடுத்திருக்கும்.

நான் பிரபுவின் தாயிடம் பிரபு இங்கு வருவதை எதிர்த்திருந்தால், இந்த விஷயத்தில் பழிவாங்கும் எண்ணத்தை தவிர வேறு எந்த நோக்கத்திற்கும் எனக்கு இல்லை என்று காத்திருக்கும் என்று சரவணன் சரியாக நினைத்தான். எப்படியிருந்தாலும் இது நடந்தது நல்லதுக்கே. இப்போது, எங்கள் முக்கோண உறவில், அதாவது நான், மீரா மற்றும் பிரபு ஆகியோருக்கு இடையில் இருக்கும் இந்த தெளிவற்ற நிலைக்கு நான் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சரவணன் நெருங்கி வருவதைக் கண்டு பிரபு எழுந்து நின்றான்.

“ஹாய், பிரபு, நீ நீண்ட நேரம் காத்திருந்தியா?”

“இல்லை, நான் ஐந்து நிமிடங்களுக்கு முன்பு தான் வந்தேன்.”

“உன் தந்தையின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு வீட்டில் எல்லாம் இப்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்துவிட்டதா? பிரபுவை இங்கு சந்திப்பதன் முக்கிய நோக்கத்திற்குச் செல்வதற்கு முன்பு சரவணன் கொஞ்சம் பொதுவான பேச்சுகளில் ஈடுபட்டான்.

“ஆம், பெரும்பாலும். அனால் சில சட்ட ரீதியான விஷயங்கள் உள்ளன. நான் சென்னையில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் நான் அதை கவனிக்கணும். ”

“என்ன, நீ சென்னைக்குப் போறியா?”

“ஆமாம், நான் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்று இங்குள்ளவர்கள் சொன்னாலும் நான் முக்கியமான விஷத்துக்கு போக வேண்டும். சில நேரங்களில் பழைய நடைமுறைகள் அனைத்தையும் நாம பின்பற்ற முடியாது.”

“நீ இப்போது செல்ல வேண்டியதுக்கு என்ன அவசரம், அப்படி என்ன முக்கியமான விஷயம்? இந்த சோகமான நேரத்தில் உன் அம்மாவும் தங்கைக்கும் நீ இங்கு இருப்பது தானே நல்லது.”

“எனக்குத் தெரியும், ஆனால் நான் அங்கே ஒரு தொழிலைத் தொடங்கி இருக்கேன், அதற்கு என் அவசர கவனம் இப்போது தேவை. நான் ஒரு வாரத்தில் மீண்டும் இங்கு திரும்பி வருவேன்.”

சரி, நீ உன் பிசினெஸ் ஒருவருக்கு விற்கவோ அல்லது அதை அங்கே மூடிவிட்டு நீ இங்கு நிரந்தரமாக வர முடியாதா? உன் தந்தை இனி இல்லை என்று ஆகிவிட்டதால் உன் அம்மாவுக்கு நீ இங்கேயே இருந்தால் நல்லது.”

“அது சாத்தியமில்லை, நான் சேமித்த என் பணத்தை அதில் நிறைய முதலீடு செஞ்சிட்டேன். பிசினெஸ் வளரும் முன்பு நான் விற்க நினைத்தால் ரொம்ப கம்மியான விலை தான் கிடைக்கும். நான் அதைச் முதலில் மேம்படுத்துத வேண்டும்.”

“ஓ, அப்படியா. அப்போ ஏன் உன் அம்மாவை நீ உன்னுடும் அழைத்துச் செல்லக்கூடாது. உன் தந்தை இனி இங்கு இல்லாமல் இருக்க அவுங்க மிகவும் தனிமையாக உணருவங்க. உன்னுடும் இருந்தால் அவுங்க பேரக்குழந்தையைப் பார்ப்பது அவுங்களுக்கு ஒருவித ஆறுதலாக இருக்கும். ”

“நான் இதை சொல்லி இருக்க மாட்டேன்னா, ஆனால் முடியாது என்று சொல்லிட்டாங்க. அவுங்க வாழ்க்கையை முழுதும் கிட்டத்தட்ட கழித்த வீட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிட்டாங்க. நான் அவுங்கள சம்மதிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன், முடியில, ரொம்ப பிடிவாதமாக இருக்காங்க.”