தாங்க்ஸ்!
500 கோடி லாபம்னா, 1 கோடி உனக்கு பெருசா தெரியாது இல்ல? மோகனின் குரலில் நக்கல் நன்றாகவே தெரிந்தது!
என்ன மாமா சொல்லுறீங்க?
மறந்துட்டியா மதன்? என்கிட்ட பெட் கட்டியிருந்ததை? இன்னியோட நீ சொன்ன நாள் முடியப் போகுது.
ஊப்… ச்சே! ஆமால்ல, இந்தப் பிரச்சினைல்ல அதை மறந்தே போயிட்டேன்! ச்சே! என்று சொல்லி, என் தலையில் கை வைத்து யோசித்த படியே அமர்ந்தேன்.
இது வரை கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருந்த மோகனும், நான் உண்மையாலுமே மறந்து விட்டதாக நினைத்து, மிகவும் தெம்படைந்தான்.
பின், நான் யோசித்தவாறே மோகனைப் பார்த்தேன்.
ஏன் மாம்ஸ், உங்களுக்கே சிச்சுவேஷன் தெரியுமில்ல? பேசாம, இன்னிலருந்து, அடுத்த வாரம் வரைக்கும் டைம் தர்ரீங்களா?
ஹா ஹா ஹா! ஏன் மதன், நாந்தான் சொன்னேனில்ல, இதெல்லாம் உனக்கு செட்டாகாதுன்னு! நீ சின்னப் பையன் மதன்! உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? மோகனிக் பேச்சில் மிக அப்பட்டமான நக்கல்.
சரி, இன்னும் ஒரு வாரத்துக்கு ஓகேயா?
இன்னும் ஒரு மாசம் வெச்சாலும், உன்னால முடியாது மதன்! நான் சொல்றதை கேளு! பேசாம, தோத்தேன்னு ஒத்துகிட்டு, பணத்தைக் கொடுத்திடு!
கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க மாம்ஸ்!
உன்கிட்டதான் ஏகப்பட்ட பணம் இருக்கே மதன்! ஒரு கோடி உனக்கு பிசாத்து தானே? எனக்குதானே தர்ற? அதுல என்ன சங்கடம்?
எனக்கு கூட, எனக்கு ஒரு கோடி பெருசில்ல மதன்! ஆனா, இந்த விஷயத்துல் நாந்தான் பெஸ்ட்டுன்னு வர்றதை எப்டி நான் விட்டுத் தர முடியும்?
நானா, உன்கிட்ட பெட்டு கட்டினேன். நீதான் பெருசா பேசுன? இப்ப பேசுன பேச்சை மாத்துறியே? இப்டிதான் நீ பிஸ்னஸ் டீல் பண்ணுவியா?
மோகனின் குரலில் நக்கலும், என்னதான் பணம் முக்கியமில்லை என்றாலும், ஒரு கோடியின் மீதான பேராசையும் நன்கு தெரிந்தது.
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…