ஓகே! பின் திரும்பி சொன்னேன். அவரே சரின்னு சொல்லிட்டார். அப்ப, ஓகவா சீதா? என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தேன்.
வேண்டுமென்றே நான் அப்படிச் சொன்னது, மோகனுக்குப் புரியா விட்டாலும்,, அவளுக்குப் புரிந்திருந்தது. குப்பென்று ஆகியிருந்தது அவளுக்கு.
டக்கென்று மோகனைப் பார்த்தாள். அவனோ, இதைக் கவனிக்கவில்லை. நிம்மதியாக பெருமூச்சு விட்டாள். பின் என்னைப் பார்த்து சொன்னாள்.
ம்ம்.. ஓகே!
சரி சொல்லுங்க, புது டிரஸ், புதுசா மேக்கப், என்ன விசேஷம்? ம்ம்?
சும்மாதான்! டிரஸ் எடுத்து ரொம்ப நாளாச்சு. அதான், கம்ப்ளீட்டா, புதுசா எடுத்தேன். ஏகப்பட்ட டிரஸ்ஸஸ்… அதுக்கேத்த மாதிரி மேக் அப். தட்ஸ் ஆல்!
ம்ம்ம்.. எஞ்சாய்!
சில நேரங்களில் நமக்கு அதிர்ஷடம் உச்சத்திலும், எதிராளிக்கு சனி உச்சத்திலும் அமையும். மோகன் விஷயத்தில் அதுதான் நடந்து வந்தது. அன்றும் அப்படித்தான். ஏனெனில் மோகன் டக்கென்று வாய் விட்டிருந்தான்…
ஆமா, அதே கலர் கலரா புடவை… என்ன பெரிசா புதுசா எடுத்துருக்கப் போற?
மோகன் சொன்னது, சீதாவை கோபப்படுத்தியிருந்தது. டக்கென்று சொன்னாள்…
இத்தனை நாளா அப்படித்தான் எடுத்தேன். ஆன, இந்த முறை அப்படியில்ல, எல்லாம் மாடர்னா, ஃபாஷனா எடுத்திருக்கேன்.
இந்த வாக்குவாதம் எல்லாம் என் முன்னாடி நடப்பதால், மோகனுக்கும் அது ஈகோ பிரச்சினையாக கொஞ்சம் மாறியிருந்தது.
என்ன ஃபாஷனோ? உனக்கென்ன தெரியும் அதெல்லாம்? ம்ம்ம்?
ஆமா, இவரு பெரிய ஃபேஷன் டிசைனர். இவருக்குதான் எல்லாம் தெரியும், எனக்கு ஒண்ணும் தெரியாதா? நான் வேணா போட்டுட்டு வரேன். எப்படியிருக்குன்னு பாக்குறீங்களா?
எதுவும் சொல்லாமல் மோகன் சும்மாவே முணுமுணுத்த போது, நான் குறுக்கிட்டுச் சொன்னேன்.
மாம்ஸ் கிடக்குறாரு! நான் எப்படியிருக்குன்னு சொல்லுறேன், நீங்க போயி போட்டுட்டு வாங்க!
சீதா உதாசீனப்படுத்தியதுக்கே கடுப்பாகியிருந்த மோகன், என்னுடைய வார்த்தையைக் கேட்டதும் திடுக்கிட்டான். சீதா சென்றதும் என்னையே கூர்ந்து பார்த்தான்.
என்ன மாம்ஸ் அப்படி பாக்குறீங்க?
நீ எதுக்கு மதன் இப்படி பண்ற?
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…