முதலில் வேண்டாமென்று சொன்னவன், பின் நடந்தாலும் நடக்கலாம் என்று சொன்னதும் அவளது முகம் மலர்ந்தது. அவள் என் பிடிக்குள் வந்து விட்டாள் என்பதை, அவளது அடுத்த வார்த்தைகள் சொல்லியது.
என்ன கண்டிஷன்ஸ்? எல்லாத்துக்கும் ஓகே? நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்.
அவசரப்படாத! முதல்ல கண்டிஷன்ஸை கேளு. அப்புறமாச் சொல்லு.
ம்ம். சரி சொல்லு. அப்படி என்ன கண்டிஷன்ஸ்?
நம்பர் 1. நான் உனக்கு மரியாதை கொடுக்க மாட்டேன். உன்னை எப்டி வேணாக் கூப்பிடுவேன்.
சீதா கிண்டலாகச் சொன்னாள். ஆமாமா, இப்ப ரொம்ப மரியாதைக் கொடுத்திட்ட. இனிமே கொடுக்க மாட்டேன்னு ஃபீல் பண்றதுக்கு.
நான் அவளை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டேச் சொன்னேன்.
நம்பர் 2. ஆனா, நீ இனிமே, எனக்கு முழு மரியாதை கொடுக்கனும். என்னை பேர் சொல்லிக் கூட கூப்பிடக் கூடாது. வாங்க, போங்க, அவரு, இவருன்னுதான் கூப்பிடனும்.
இதைச் சொன்ன உடன் முகம் மெல்ல மாறியது. இதை விளையாட்டாகக் கிண்டல் பண்ணுவதா, சீரியசாக எடுத்துக் கொள்வதா என்று அவளுக்கு புரியவில்லை. என்னுடைய, பார்வையும், தீர்க்கமான குரலும், நான் ரொம்ப சீரியசாக இருப்பதை அவளுக்கு உணர்த்தியது.
நம்பர் 3. இந்த நிமிஷத்துல இருந்து, நான் என்ன கேட்டாலும் பதில் சொல்லனும். என்னச் சொன்னாலும், அதைக் கண்ணை மூடிட்டு உடனே செய்யனும். நான் சொல்றதை மறுத்துப் பேசுறதோ, தயங்குறதோ இருக்கக் கூடாது. நல்லா புரிஞ்சிக்கோ, எதைச் சொன்னாலும் செய்யனும். செய்வியா?
என் கண்டிஷனில் அவள் கொஞ்சம் ஆடி விட்டாள். நான் மிக சீரியசாக இருப்பதை அவள் புரிந்து கொண்டாள். பின் தயங்கித் தயங்கி கேட்டாள்.
நீ என்ன மாதிரில்லாம் செய்யச் சொல்லுவ?
நான் அவளையே பார்த்தேன்.
நீயா?
அவள் அதிர்ந்தாள். சட்டென்று புரிந்து, இல்லயில்ல. நீங்க என்ன மாதிரி விஷயமெல்லாம் செய்யச் சொல்லுவ…சொல்லுவீங்க?
Nice Story Keep posting next update can’t wait !
Semma. . Next part
என்னடா இதுவரைக்கும் கதை தலைப்புக்கு சம்பந்தமில்லாமலேயே போயிட்டு இருக்கேனு நினைத்தேன்.. சபாஷ் கதாசிரியரே… அமர்க்களம்… அடிச்சு தூள் கிளப்புங்கோ…