பூ பூக்குதே 382

மாலை மணி 6.30 ஆகி விட்டது..

“மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உள்ள காசு..” அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட…
மோகன் மறுத்தான்… ” அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க…”

அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது… எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்….

அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்..

“என்ன இன்னொறு நாளா…சான்ஸே இல்லை… ஆனா ”
“என்ன ஆனா..”
“:உனக்குத் தெரியுமா… நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க…ஆல் இந்தியா டீலர்ஸ் மீட் அரேஞ் பன்னுராங்க…
இந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்… நீயும் வர… 15 நாள் இருக்கு இன்னும் ”

“மதுரைல எங்க…”

” தி கேட்வே ஹோட்டல், பசுமைலை…. நல்ல இடம்… சின்ன மலை மேல 5 நட்சத்திரr ஹோட்டால்…. மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்… அப்படி ஒரு இடம்….அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும்
தெரியும்….” ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்…)

“நீங்க போயிருக்கீங்களா….”

“ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால…. இப்ப இந்த வருசம்….அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான்…. இப்ப சீசன் வேற….செட்யூல் இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.”.

மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி….சொல்லி எதிர் மறையாக போயி..
அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. ‘ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா ‘… மனசு இடித்து சொல்லியது… பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்… கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது… மோகன் பொறுக்க முடிவு செய்தான்.

அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு….

அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்..

ஈஸ்வரி … ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்…

‘ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை….’
‘அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்…’
“‘வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே…’
‘ பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத…’
‘ எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி …’
‘ காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்… பாத்து போ….’

‘ அப்புரம் நான் சுமாரா இருப்பேன் பை…’

குதித்தான் மோகன்.. ஆக அவ சென்னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான்

1 Comment

  1. Lovable story…

Comments are closed.