பூ பூக்குதே 382

“என்ன செய்யனும் சொல்லு….”

“முதல்ல இறங்கனும்…லக்கேஜ் செக் பன்னனனும்… ஹோட்டல் காரன் பஸ் அனுப்பி இருப்பான்…எல்லாரையும்
ஏத்தனும் கொண்டு போய் அங்க சேக்கனும்… வா சீக்கிரம்….”

வெளியே வந்தனர்.. எல்லா லக்கேஜ் செக் பன்னி…
இரண்டு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்தனர்…அகிலாவிடம் பேசினர்….அகிலா மோகனை காட்டி ஏதோ சொல்ல…அவர்கள் அவனிடம் வந்தனர்…

“வணக்கம், எங்கள் ஹோட்டல் சார்பா உங்களை எல்லாம் வரவேற்கிறோம்.. வெளிய பஸ் இருக்குது….
எல்லாரையும் நீங்க தான் ஏத்தனும்… உங்களுக்கு தான் உங்க ஆளுங்க தெரியும்….நாங்க பஸ் கிட்ட
நிற்கிறோம்…” சொல்லிவிட்டு நகர்ந்தனர்….

எல்லாரையும் நான் வண்டில ஏத்தனுமா… தேர இழுக்குற மாதிரி தான்… போ… குழு குழுவாய் நின்றவர்களிடம் போய் சொல்லி ஏற்றி.. அனுப்பும் முன் உன் பாடு என் பாடு ஆகி விட்டது மோகனுக்கு….எல்லாரும் ஏறியவுடன் அவன் மட்டும் பஸ்ஸில் ஏறாமல் அகிலாவைத் தேட.. அவள் அந்த கோட் ஆசாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனைப்பார்த்து கைஅசைத்து அழைத்தாள்..

இரண்டு பஸ் கிளம்ப… விசில் சத்தம் பறந்தது.. ப்ஸ்ல் இருந்து… கொண்டாட்டம் ஆரம்பம்…அப்போதே…

“பஸ் போகுது அகிலா… நீ வரல…”

“வா நாம இவங்க கூட கார்ல முன்னாடி போயிடலாம்… ப்ரொகிராம் என்னன்னு இவங்களுக்குஸ் சொல்லனும்
அவங்களுக்கு வேலை இப்ப இல்லை.. நமக்கு இப்ப இருந்து ஆரம்பம்.. திரும்ப போகிற வரை…”

காரில் அவளுடன் பின் சீட்டில் ஏற.. கோட் ஆசாமி ஒருத்தன் மட்டும் முன் சீட்டில் அமர.. இன்னோருத்தன் அங்கயே நின்று கொண்டான்…

இருவரும் பின் சீட்டில் அமர்ந்தவுடன்…

அகிலா மோகனப் பார்த்து…” தாங்க்ஸ்..” என்றாள்

“எதற்கு…”

“ம்ம்ம்…குடிக்காம இருந்தற்கு…”

“நான் குடிக்கலைன்னு எப்படி தெரியும்…”

“தெரியும்பா.. நீ குடிக்கலை…”

“எப்படி…. “அவள் கண்களைப் பார்த்தான்…. அதில் இரவு முழுவதும் தூங்காத அறிகுறியாய்… கண்ணில் ஒரு சோர்வு..சிவந்து…

“ஹேய் அகி.. நீ தூங்கலையா…. ஏன்பா… நான் தான் சொன்னேன்ல… நம்பலை என்ன… அப்படித்தானே….”

“இல்லை அதுக்கு இல்லை ” தடுமாரினாள்…

இதற்குள் முன் சீட் ஆசாமி… “சார் உங்கள் புரோகிராம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன்…”

“எங்க புரோகிராம் 11.30 ஸ்டர்ட் ஆகும்… இனிடியல் மீட்டிங்க்.. அப்புறம் லஞ்ச்ஸ் அப்புறம் 3.00 மணிக்கு டீலர்ஸ் மீட்…5.00 மனி வரை.. மருபடி 6.00 மனிக்கு ஆரம்பித்து 7.30 வரை அப்புரம் டின்னர் காக்டெயில்.. இது இன்னிக்கு ப்ரொகிராம்… நாளைக்கு உள்ளத அப்புரம் சொல்லுறென்….”

“உங்க ஃபார்மாலிட்டீஸ் என்ன..” மோகன் கேட்க…

1 Comment

  1. Lovable story…

Comments are closed.