பூ பூக்குதே 382

நம்ம மோகன் இருக்கான்ல பா.. ஒரு நாள் என்ன நச்சு நச்சுன்னு படுத்தி எடுத்தான் அந்த இம்போர்ட்ர்க்கு எக்ஸேஜ் கட்ட சொல்லி நான் கூட அவன தப்ப நினைச்சேன் .. பையன் ஏதோ கட்டிங்க் வாங்கி… நம்மள படுத்திறானேன்னு… ஆனா பாருய்யா…. ஒரே நாள்ல 5 கோடி லாபம் சம்பாதிச்சு கொடுத்திட்டான்… ஒரு நயா பைசா செலவு இல்லாமல்…..

மோகனுக்கு திக்கென்றது… அவர் நம்மை பாராட்டுகிறாரா.. இல்லை சேல்ஸ் ஜி எம் ம கிண்டல் பன்னுரார… நீயும் இருக்கியீனு… குத்தி காட்டுராறா.. புரியலை அவனுக்கு…

சேல்ஸ்… ஏ ஜி எம்… இல்லை அக்கவுண்ட்ஸ்… அது அவனுக்கு ஒரு லக்… நாங்க லக் நம்பி போறது இல்லை… 1 ம் தேதில விதை போட்டாத்தான் 30ம் தேதி ஆர்டர் கிடைக்கும்… அப்புறம் தான் உங்களுக்கு டப்பு.. இல்லேன்னா நீங்க எப்படி அந்த பணத்த இம்போர்டருக்கு கொடுத்திருப்பீங்க…ம்ம்ம்.. பையன் மச்சக்காரன் தான்… சீனியர் வேற அவனை மிரட்டுரத பாத்தீங்கல்ல….

என்ன் சார்.. சொல்லுரீங்க

சும்மா இருப்பா மோகன்.. அவ வந்தா… வந்து உன்ன க்ண்னை காட்டி குடிக்காத ந்னு சொன்னத எல்லாம் நான் கவனிச்சேன்…. என்ன உன் கிட்ட கவுந்திட்டாளா…

இப்படி பச்சையா கேட்டவுடன் ஆடி போய்டான் மோகன்….

சார்… அவங்க என் கிட்ட ஆபிஸ்ல வச்சே சொல்லிட்டாங்க… நீ குடிக்கனும்னு தோனுச்சின்னா.. திரும்பி இங்க வந்து குடி
நான் வாங்கித்தறென்… ஆனா டூர்ல குடிக்காத… ஏன்னா நாம தான் எல்லாத்தையும் ஆர்கனைஸ் பண்ணனும் சொன்னாங்க
சார்.. அது தான் பார்த்திட்டு போறாங்க.. தப்பா நினைகாதீங்க சார்… இன்னும் இரண்டு மாசத்தில அப்ப்ரைஸல் இருக்கு….
அதுக்கு வேட்டு வச்சிடுவீங்க போல இருக்கு சார்.. நீங்க சொல்லுரது….

உடனே அக்கவுன்ட்ஸ்… மோகன் உனக்கு இங்கிரிமேண்ட் கன்ஃப்ர்ம்டா…… அடுத்த மாசமே.. வருது பார்….எம் டி சொல்லிட்டார்…

உன் மெயில ஊருக்கு போன உடனே செக் பன்னு…. அவனை பார்த்து கண்ணடித்தார்….

பேசிக் கொன்டே பாட்டில வாயில் கவுத்திக் கொண்டார்…

மணி 3.00 நெருங்கியது… தட தட வென்று சத்தம்…. காவேரி.. பாலத்தை கடக்கிறது பாண்டியன்….

அட திருச்சி வருது…

சார் திருச்சி வந்திருச்சு நான் போய் படுக்க போறென் சார்….

போப்பா.. போய் உன் சீனியர் மானத்த காப்பாத்து யாரோ கமண்ட் அடிக்க..

அவன் , அடப்பாவிகளா..ஏ ஸி டிக்கட் எடுத்துட்டு கக்கூஸ் பக்கம் நின்னு கிட்டு திருச்சி வரை…. தண்ணி….காசுடா.. காசு உங்க காசாயிருந்தால் செய்வீங்களா… அதுவும் தண்ணி அடிக்க… மனசுக்குள் இவனுகளை எஞ்சின் பக்கம் ஜெனரல் கம்பார்ட்மெடண்ட்ல போட்டு கூட்டிக்கிட்டு வந்திருக்கனும்.. கருவினான் மோகன்…

அவன் படுக்கும் போது.. பாண்டியன் திருச்சியவிட்டு மெதுவா கிளம்பியது……

பாண்டியன் எக்ஸ்பிரஸ் களைப்புடன் மதுரை வந்து சேர்ந்தது….யாரோ.. மெல்ல தலை தடவி தன்னை எழுப்புவதாக உணர்ந்தான் மோகன்… முழித்தான்… கண் எரிந்தது… கண்ணை கசக்கி..முழிக்க தேவதையாய்… அகிலா..

“ம்ம் என்ன விடிய விடிய குடியா… இப்படி தூங்கினால்..எழுந்திருப்பா….”

“இல்லை அகிலா… நான் திருச்சி வந்ததும் படுத்திட்டேன்…”

“தெரியும்……நான் கவனித்தேன்…” சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டாள்….

மோகனின் மனசில் பட்டாசு வெடித்தது… என்னை கவனிக்கிறாள்… நான் என்ன செய்கிறென் என்று கவனிக்கிறாள்.. இதற்கு பெயர் தான் காதலா… பட்டென்று எழுந்தவன்…

1 Comment

  1. Lovable story…

Comments are closed.