பூ பூக்குதே – Part 2 92

மனசு இடித்தது… ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு… குறைந்தா போய் விடுவாய்….சொல்லிடு… சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப…..சொல்லிடலாமா…. சொல்ல வாயெடுத்தவள்…..

மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்… ஹால் சூப்பர் வைசர் தான்… தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி …….
அடக்கிக் கொண்டாள்… “நைட் காக்டெயில் இருக்கு… என்ன பண்ணனும்..நாங்க ஹாட் அண்ட் பீர் கொடுக்கலாமா”…..

“ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க…. ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு….
ஆள் அனுப்பி எடுத்துக்கங்க…. ” சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்…

அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்…

என்னடா எங்க என் பின்னாலலயே வார ”

“ம்ம் உன் பின்னாலயா பாட்டில் யார் எடுப்பா, வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ….”
பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர… அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாக
அவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி…

“ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர…. ” அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்…

“ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்… ”

அவன் பாதைய காட்ட… புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப்பாதைய கடந்து கொண்டிருந்தது… ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்… கடித்திருக்கும் அந்த பாம்பு.விஷம் உள்ளதோ இல்லாததோ.. ஆனா பாம்பு பாம்பு தானே…

அதைப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியது பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி..

“சாரி கத்திட்டேன்ன்ல…”
“பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க…”
“ம்ம்ம் பயந்து போய்ட்டேன்… அது கடிக்குமா.. ”
“ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்…”

ஒரு நிமிடம் மவுனமாக கழிய… ” போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க.” சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்…..

அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்…. என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்… அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா… அவள் உடல் மெல்ல கூசியது….பின் கனிந்தது… அந்த ஒரு நிமிட அனுப்வம்…. எப்படி தூக்கினான்…உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது.

ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்… வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு… இடுப்பு அவன் கைகளில் நசுங்கி… வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது… ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு… வயிறு தொப்புள்… வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று… கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு… இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்… நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது…

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.