பூ பூக்குதே – Part 2 93

துண்டில் இருந்த அவள் மணம் வீசியது… குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்…சுகந்தமாய்…மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்…
அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்… அவன் துண்டை மோந்து பார்த்து அவளையே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே… அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது… என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது…ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்….இது தான் காதலா….என் காதலா…

நினைவுகளின் இனிமை அவளை மெல்ல தளர வைத்தது… என்னடா உன்னை நினைத்தாலே இப்படி தடுமாறுகிறேன்… ம்ம்ம் அவளுக்கு உடல் முழுவதும் ஒரு மாதிரி மயில் இறகால் வருடியது போல.. ஒரு உணர்வு… சிலிர்த்தது உடம்பு.. மெல்ல…போறான் பார் மோந்து பாத்துக்கிட்டு.. வேனும்னு தான என் கிட்ட வந்து கேட்ட… நானும் பார் வேற துண்டு கொடுக்காம.. நான் துவட்டிய துண்டை கொடுத்து அதையும் அசிங்கம் புடிச்சவன் மோந்து பார்கிறான்…அப்படி அவன் மோந்து பார்த்தது அவளுக்கு அவன் அவளை தன் முகத்தால் வருடி, கன்னத்தை கழுத்தில் பதித்து அவன் ரசிப்பது போல… கிளர்ந்தாள்.. என் வாசனை உணர்ந்தானா… இல்லையா… மனது தன்னையும் மீறி அவனை ரசிப்பதை உணர்ந்தாள் அகிலா….

மெல்ல அறைக்குள் நுழைந்து.. தாளிட்டு.. நைட்டிய கழட்டினாள்..பிராவை கழட்டினாள்.. ஒரு நைட் ஸ்ர்ட் எடுத்தாள் பாட்டம் எடுத்தாள்… சுத்தமான் காட்டன் உடைகள்.. மார்பில் ஒரு ஷால் எடுத்து போட்டாள்.. மெல்ல வெளியே வந்து நீச்சல் குளம் நோக்கி தன்னையறியாமல் நடந்தாள்..
அங்கு அவன் மோகன்.. டைவரில் ஏறி அங்கிருந்து தலைகீழாய் தண்ணீரை நோக்கி… அம்ம்மாடி.. வாய் திறந்து கத்தி விட்டாள் அகிலா… தண்ணீருக்குள் போனவன் இன்னும் வரவில்லை… குளம் முழுவதும் கண்கள் அவனை தேட… பாதி குளம் தாண்டி டால்பின் மாதிரி தண்ணீரில் இருந்து எழுந்தவன் கையை மாற்றி போட்டு எதிர் புரம் நீந்த தொடங்கினான்….அவன் மாறி மாறி தண்ணீரில் பாய்ச்சும் கைகள் அவன் புஜ பலத்தை காட்ட முறுக்கேறிய தோளும், அந்த முதுகும்.. அவளை என்னவோ செய்தன…ம்ம்ம் வந்திருக்க கூடாது.. ஏன் வந்தோம்… ம்ம்ம் ….புரியவில்லை.. போயிடலாமா திரும்ப எத்தனித்தாள்…

அதற்குள் மோகன் கவனித்து விட்டான் …அகிலா வந்ததை. திரும்ப எத்தனித்தை.. குரல் கொடுத்தான்….

“என்னங்க… இந்த டிரஸ் போட்டு குளிக்க கூடாது.. ஒன்லி சுவிம் சூட்.. அது போட்டு தான் குளிக்க வேண்டும்..” கிண்டலாய்….சொன்னான்…

“நான் குளிக்க வரலை.. நாளை 8 மணிக்கு இருக்கனும் இப்ப 10.30 இனி எப்ப சாப்பிட்டு தூங்கி எழுந்திருக்க போறீங்க….அது தான் சொல்ல வந்தேன்….”

“ம்ம்ம் இருங்க இன்னும் ஒரு சுவிம் போய்டு வரன்..” மறுபடி எதிர் புறம் போய் தொட்டு திரும்பினான்.. மூச்சு வாங்க.. அவன் மார்பு ஏறி இறங்கியது அவள் அவனையே பார்த்தபடி….கண்ணில்..ஒரு சின்ன தயக்கம்… பார்பதா இல்லை வேண்டாமா நினத்து முடிக்கு முன் குபீரென தண்ணீரில் இருந்து எழுந்தவன்.. தரையில் உன்னி எழுந்து உக்கார்ந்தான்….தொடை இறுகப் பிடித்த சார்ட்ஸ்… புடைத்த பின்புறம்.. இறுகியகால்கள்…ஜிம் போவானோ மார்பில் சுருள் சுருளாய் முடி… சுத்தமான ஆண்பிள்ளைத்தனமாய்.. கால்களிலும் முடி சுருள் சுருளாய்.. ஈரத்தால் படிந்து… கண்களை அவளால் விலக்க முடியவில்லை…அவன் மார்முடியில் கைவைத்து துளாவ ஆசை எழுந்தது…. இருந்தாலும் சுற்றும் முற்றும் பார்த்து சமாளித்த படி அவனிடம் பேசினாள்.. அகிலா..

எழுந்தவன் துண்டால் தலை துவட்டிக் கொன்டே நடந்தான் சார்ட்ஸுடன்…. அங்கு ஓரமாய் இருந்த பாண்ட் சர்ட் பனியனை அவளிடம் கொடுத்தான் நடக்க ஆரம்பித்தான்… அவன் பின்னால் மெல்ல நடந்தவள் கையில் இருந்த அவன் சர்ட்டை உரிமையுடன் தன் தோளில் போட.. அதிலிருந்து வந்த அந்த.. ஆண் வாசனை.. வியர்வை வாசனை அவளை மயக்கியது. தன்னை மறந்து ஒரு முறை தன் மூச்சை இழுத்து விட்டு கொண்டு அதை முகர்ந்து வாசனைய அனுபவித்தாள் அகிலா……நான் ஏன் இவன் பின்னால் இப்படி ஆட்டுகுட்டி மாதிரி போகிறேன்.. அவன் ஆண்மையா… இல்லை..மனசா… ஆனால் இப்படி போவது அவளுக்கு பிடித்திருந்தது….அவன் பின்னால் வேகமாக நடந்தாள்…

1 Comment

  1. What a lovable story…

Comments are closed.