மதன மோக ரூப சுந்தரி – 1 54

“அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.. சீக்கிரம் பாத்துட்டு வெளில வந்துடுங்க.. சரியா..?? டாக்டர் வந்தா திட்டுவாரு.. அதுக்குத்தான் சொல்றேன்..!!”

“ம்ம்.. சரிம்மா.. தேங்க்ஸ்..!!”

நர்சுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு.. தணிகை நம்பியும் பூவள்ளியும் அவசரமாக அந்த அறைக்குள் நுழைந்தனர்.. ஆதிராவின் முகத்தை ஒருவித பரிதவிப்புடன் தேடினர்..!! காய்ந்த கொடியாய் துவண்டு போய் கிடந்த ஆதிராவை பார்த்ததுமே.. பூவள்ளியின் விழிகளில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது..!!

“அம்மாஆஆ..!!” என்று ஆதிரா பரிதாபமாக அழைத்தவிதம், பூவள்ளியின் அழுகையை அதிகமாக்கவே செய்தது.

“ஆதிராஆஆ..!!”

தழதழத்த குரலில் சொன்ன பூவள்ளி.. அவசரமாய் ஆதிராவை நெருங்கி அவளுடைய கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! பூவள்ளிக்கு பின்புறமாக வந்து நின்ற தணிகை நம்பி.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறே.. மனைவியின் தோள் பற்றி ஒரு நம்பிக்கை அழுத்தம் கொடுத்தார்..!!

“எ..என்னம்மா ஆச்சு எனக்கு..??” ஆதிரா களைப்புடன் பேசினாலும், அவளுடைய வார்த்தைகளில் இப்போது ஒரு தெளிவு வந்திருந்தது.

“ஒ..ஒன்னும் ஆகலடா.. ஒன்னும் இல்ல உனக்கு..!! எ..எல்லாம் சரி ஆய்டும்..!!” பூவள்ளியிடமோ ஒருவித பதற்றம்.

“எ..எப்படி அடிபட்டுச்சு.. எ..எதாச்சும் ஆக்சிடன்டா..??”

ஆதிரா அவ்வாறு முனகலாக கேட்க.. பூவள்ளியும் தணிகை நம்பியும் சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கினார்கள்..!! பிறகு.. அந்த குழப்பத்தை பொருட்படுத்தாது, பூவள்ளி மகளுக்கு பதில் சொன்னாள்..!!

“ஆ..ஆமாண்டா.. நீயும் சிபியும் கார்ல போறப்போ.. ஒ..ஒரு சின்ன ஆக்சிடன்ட்..!! ப..பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல ஆதிரா.. சீக்கிரம் சரி ஆய்டும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நீ தெம்பா இரும்மா..!!”

“ஓ..!! அ..அத்தானுக்கு..??” கவலையுடன் கேட்ட ஆதிராவின் கண்களில் ஒரு கலக்கம்.

“சி..சிபிக்கா..?? சிபிக்கு ஒன்னும் இல்லடா.. சின்ன அடிதான்..!! நல்லா இருக்கான்.. மருந்து வாங்க போயிருக்கான்.. இப்போ வந்துருவான்..!!”

என்று பூவள்ளி சொன்னதும்.. ஆதிராவிடம் அந்த கலக்கம் மறைந்து முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்தது.. இமைகளை ஒருமுறை மூடி திறந்தாள்..!! அப்புறம்.. அந்த அறையை சுற்றி ஒருமுறை பார்வையை சுழற்றினாள்.. சுழற்றிவிட்டு அம்மாவை ஏறிட்டு கேட்டாள்..!!

“எ..எத்தனை நாளாச்சு..??”

“ஒ..ஒருநாள்தான்டா ஆகுது.. நே..நேத்து காலைலதான்..!!” சொல்லும்போதே பூவள்ளிக்கு கண்களில் நீர் தளும்பியது.

“ஹ்ம்ம்ம்ம்..!!!!!” ஆதிரா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். பிறகு முகத்தை ஒருமாதிரி வேதனையுடன் சுருக்கியவாறே,

“கால் ரொம்ப வலிக்குதும்மா..!!” என்றாள்.