நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி! 85

”பொறு உமா பாக்கலாம்… சந்தியா வந்துருவா..”என்றான்.

ஒரு சாக்கடை புழுவைவிடவும். ..கேவலமாக அவனைப் பார்த்தாள்.

அவன் தடுமாறி. .”ஸாரி உமா. . அவ வந்ததும் கண்டிப்பா வாங்கித் தரேன்..” என்றான்.

சிறிது பொருத்துப் பார்த்தாள் சந்தியா வருவதுபோலத் தெரியவில்லை. சுத்தமாக அவள் நம்பிக்கை தகர்ந்து போனது.
”நா கெளம்பறேன். .” என எழுந்தாள் ”சந்தியா வந்தா… உன்னோட இளிச்சவாச்சி பிரெண்டு வந்து போனானு சொல்லுங்க..”
”ஐயோ. .. ஸாரி உமா. இரு.. அவ வந்ததும் நிச்சயமா வாங்கித் தரேன்..”
” பரவால்ல…” அவனிடமிருந்த பணத்தை வாங்கினாள்.
” ஸாரி உமா. ..!”

எதுவும் பேசாமல்… வெளியே வந்து. .காலில் செருப்பு மாட்டும்போது… அவள் கண்கள் கலங்கியது.

‘ பணத்துக்காக அவன்கூடப் படுத்தியே… தேவடியா.. நல்லா வேனும். .! படுத்ததுதான் படுத்த பணத்தை வாங்கிட்டாவது படுத்திருக்கக் கூடாது..?’ என தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

மனசு மிகவுமே கசந்து போனது. என்ன ஒரு கயமைத்தனம் இது.?

வெயில் சுள்ளென்று சுட்டது.
அவள் நேராக வீட்டுக்குப் போகவிரும்பவில்லை. அவளது இன்னொரு பிரெண்டான கோமதியைப் பார்க்கப் போனாள்.
இன்று எலக்ட்ரிக் பில் கட்ட முடியாது என்பது.. நிச்சயமாகிவிட்டது.
மன ஆறுதலுக்காகத்தான்.. கோமதியைப் பார்க்க நினைத்தாள்.

ரோட்டை அடைந்து. ..மறுபக்கம் போவதற்காக.. ஒதுங்கி நின்றாள். பேருந்தைத் தொடர்ந்து இரண்டு கார்கள்.. ஒரு ஆட்டோ… மறுபடி ஒரு பேருந்து… பைக் எனக் கடந்து போனபின்… ரோட்டைக் கிராஸ் பண்ண முயன்ற நேரம்.. அவளுக்குப் பின்னாலிருந்து அந்த அழைப்பு வந்தது.

”உமா. ..” சற்று கணமான குரல்.
திரும்பிப் பார்த்தாள். கீர்த்தனா பேக்கரியிலிருந்து வெளியே..வந்த அவன்….இவன். …
இவன்….?????
‘ கார்த்திக். ..!’

உடனே அவள் முகம் பிரகாசமானது.
”கார்த்தி…”
”நில்லு…”

அவனிடம் போனாள்.
அவன் கேட்டான் ” எப்படி இருக்க உமா. .?”
” ம்.. நல்லாருக்கேன் கார்த்தி.. நீ…?”
சிரித்தான் ”இந்தப் பக்கமா.. உன் வீடு. .?”
”இல்ல. .. இங்க என் பிரெண்டு ஒருத்திய பாக்க வந்தேன். என் வீடும் பக்கம்தான். . வா போலாம்..”
” ஸாரி உமா. . இன்னொரு நாள் வரேன்.. இப்ப டைமில்ல… நீ நல்லாருக்கதானே… எத்தனை நாளாச்சு. . உன்னப் பாத்து. .?” என ஆவலுடன். . அவளை ஆராய்ந்தான்.
”அஞ்சு வருசத்துக்கு மேல தான் இருக்கனும். .” எனச் சிரித்தாள்.
”இருக்கும்…”என்றான் ”காபி சாப்பிடறியா..?”
உடனே மறுத்தாள் ”இல்ல வேண்டாம். .”

”பரவால்ல..வா.. கூல்ட்ரிங்கஸ் குடி..” எனப் பின்னால் திரும்பி கல்லாவில் இருந்த பெண்ணிடம் ”ஒரு கூல்ட்ரிங்கஸ் குடு…கீர்த்தி. .” என்றான்.

பேக்கரிக்குள் போனாள் உமா. பேன் காற்று சூடாக இருந்தது.
உட்கார்ந்தாள்.
கீர்த்தனா என்கிற அந்தச் சின்னப் பெண் இரண்டு குளிர்பானங்களைக் கொண்டு வந்து நீட்டினாள்.
கீர்த்தனாவை உமாவுக்கும் தெரியும். பக்கத்து தெருவில்தான் அவர்கள் வீடு.
”நல்லாருக்கியா கீர்த்தி. .?”
” ம்…” அந்தப் பெண் சிரித்தது.

ஸ்ட்ராவில் வாயை வைத்து உறிஞ்சினாள்.
‘ மனமுடைந்து போகும் இந்த நேரத்திலா.. இவனைச் சந்திக்கவேண்டும். .?’

” கல்யாணம் பண்ணிட்டியா உமா. .?” கார்த்திக் கேட்டான்.

விரக்தியாகச் சிரித்தாள் ”இல்லப்பா..”
”ஏன் உமா. ..?”
” ப்ச். ..! உனக்கு. ..?”
” மூணு வருசமாகிருச்சு… ஒரு பொண்ணு இருக்கா..”
” ஓ..! உன் வீடு எங்க…. இப்ப. .?”
” சேரன் நகர்ல… ரெண்டாவது வீதி..! நீ ஏன் உமா கல்யாணம் பண்ணிக்கலை..?”

பெருமூச்செறிந்தாள் ” என்னத்த சொல்றது கார்த்தி..”

அவளையே பார்த்தான்.
மெலிதாகப் புன்னகைத்தாள்.

”அம்மா எப்படி இருக்காங்க .?” எனக் கேட்டான்.
”ஏதோ இருக்கா… ஆஸ்துமாவோட..”
” ஓ….! தாமு உங்களோடதான் இருக்கானா..?”
”அப்றம் எங்க போவான்…? படிச்சிட்டிருக்கான் நைன்த்…!”
”நீ…எங்க வேலைக்கு போற…?”
”நூல் மில்லுக்கு. .” மில் பெயர் சொன்னாள் ”நீ என்ன பண்ற..?”
”பைனான்ஸ் பண்றேன்..! இந்தக் கடைலகூட.. குடுத்துருக்கேன்…”
”ஓ..!” உடனே அவளுக்குப் பணம்தான் நினைவு வந்தது.

பேசிக்கொண்டே.. குளிர்பானம் குடித்துவிட்டு. . எழுந்து வெளியே போனார்கள்.
பைக் அருகே போய்…
” இப்ப உன்னோட வீட்ட மட்டும் பாத்துக்கறேன்..! இன்னொரு நாள். ..சாவகாசமா வர்றேன் உமா. .. வா உக்காரு. .” என்றான். கார்த்திக்.

அவன் பைக்கை உசுப்ப… அவன் பின்னால் உட்கார்ந்தாள்.
அவனுக்கு வழி சொன்னாள்.
அவள் வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்தினான்.
இறங்கிக்கொண்டாள்.