28 வயது அழகுப் புயல் – பாகம் 28 184

அவனுக்கு சொர்க்கத்தில் இருப்பதுபோல் இருந்தது. அவள் அவனுக்கு ஆசையோடு வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தாள். ஒருகட்டத்துக்குமேல் அவள் அப்படியே அவன் நெஞ்சில் முகம் புதைத்துத் தூங்கிவிட…. சீனு அவள் கூந்தலை தடவிவிட்டுக்கொண்டே அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான். அவளைத் தாங்கிக்கொண்டு… அவள் தூங்குவதை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். புத்தகம் படிக்கும்போது பெண்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்! ஹையோ பாத்துக்கிட்டே இருக்கலாம் போலிருக்கே…

காமினி மேமா என்மேல் படுத்துக்கிடப்பது? காமினி மேமா என்மேல் படுத்துத் தூங்குவது? நடப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

காமினி தன்மேல் கிடந்தும் தான் கண்ட்ரோலாக இருப்பது அவனுக்கு இன்னும் நம்பமுடியாததாக இருந்தது. இவள் இப்படி என்னை மேலும் மேலும் ஆச்சரியப்படுத்திக்கொண்டேயிருந்தால் தப்பு பண்ண எங்கே தோன்றுகிறது? ரசித்து ரசித்து இவள் பாவனைகளில் சொக்கிப்போகத்தான் ஆசையாயிருக்கிறது.

நிஷா நீ என்னை எவ்வளவு மாற்றிவிட்டாய்! நீ திகட்டத் திகட்ட என்மேல் கிடந்து புரண்டதனால்தான் இப்போது காமினியை… வெறும் அழகியாகப் பார்க்காமல் வெறும் உடலாகப் பார்க்காமல் அவளுடைய மனதை… ரசனையை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் காமினி என்னை விரும்பி என்மேல் படுத்துக்கொண்டிருக்கிறாள்.

ஏதேதோ யோசித்துக்கொண்டு… தன்னையும் அறியாமல்… சிறிது நேரத்தில் அவனும் தூங்கிப்போனான்.

அதிகாலை 4.00 மணி இருக்கும் –

பாத்ரூம் வருவதுபோல் இருக்க… காமினிதான் முதலில் கண்விழித்தாள். தான் சீனுவின் நெஞ்சில் முகம் வைத்துக் கிடப்பதைக் கண்டு அவளுக்கு லேசான இன்ப அதிர்ச்சி. ஐயோ நைட்டு முழுக்க இவன்கூடவா படுத்துக்கிடக்குறேன்! சட்டென்று தலையை தூக்கிப் பார்த்தாள். இரவில் நடந்தவை கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகத்துக்கு வந்தன. அவன்மேல் படுத்துக்கொண்டு அவனுக்கு கதை படித்துக் காட்டியதை நினைத்ததும்.. வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

ஒரே நாள்ல என்னலாம் நடந்துவிட்டது? இந்தப் பொறுக்கி என்னையே அவன்கூட படுக்கவச்சிட்டானே…. ஆனா நல்ல பையன். என்கிட்ட தப்பா நடந்துக்கல. மேம் நம்ம மேல நம்பிக்கை வச்சிருப்பாங்கன்னு ஆசைகளை கண்ட்ரோல் பண்ணியிருப்பான். சோ ஸ்வீட்!

நல்லவேளையா நைட்டு அவுத்துப்போட்டுட்டு ஆட்டம் போடாம இருந்திருக்கேன். தேங்க் காட்! இல்லைனா இவனுக்கு என்மேல இருக்கிற க்ரேஸ்… மரியாதை கலந்த காதல்… எல்லாம் குறைந்திருக்கும். ஹையோ நேத்து இப்படிலாம் என்ன தாங்கு தங்குன்னு தங்குனான். அந்த முத்தம்….. எவ்ளோ ஆசையா கொடுத்தான். மேம் என்மேல கிடக்குறாங்கங்கிற பெருமிதம் அவன் முகத்துல தெரிஞ்சிக்கிட்டே இருந்தது. ஆஹா என்ன ஒரு சுகம்! இவனை எல்லை மீறாம வச்சிக்கிடனும். இவனோட தவிப்பை.. ஏக்கப்பார்வையை… ரசிக்கணும். என்ன இவன் அப்பப்போ லேசா அங்க இங்க தொடணும். தொட்டு, கிள்ளி விளையாடனும். ஆனா அதை தயங்கித் தயங்கிச் செய்யணும். சீனு இப்போ மாதிரியே எப்பவும் என்மேல பைத்தியமா இருக்கணும்.

காமினி அவன் கன்னத்தை வருட…. தூக்கம் கலைந்து அவளைப் பார்த்த சீனு அவளை இழுத்தணைத்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டான். அவளை தன் அணைப்பிலேயே வைத்துக்கொண்டான்.

ம்ம்ம்ம்…. விடு…. – காமினி சிணுங்கினாள்.

இன்னும் கொஞ்ச நேரம் படுத்திருடி… நல்லாயிருக்கு

டேய்.. நான் பாத்ரூம் போகணும்… விடு

சீனு டக்கென்று எழுந்து உட்கார்ந்தான். ரொம்ப நேரமா எனக்கும்தான் வந்திட்டிருக்கு… என்று கட்டிலிலிருந்து இறங்கினான்.

ஏய்… நில்லு நான்தான் முதல்ல போவேன்….. – அவனை அதட்டிக்கொண்டே காமினி இறங்க…. புடவை கொசுவத்திலிருந்து உருவி வெளிவந்திருந்ததால் இப்போது வெறும் பாவாடை ஜாக்கெட்டில் நின்றுகொண்டிருந்தாள்.

16 Comments

  1. Next please Quikr podunga

  2. Superb story & Sema feel bro..ayyo intha part mudinchida koodathunnu irunthuthu…nalla poguthu story..update next part very soon…

  3. ஆசிரியர் பொன்னியின் செல்வனில் நன்றாக மூழ்கி இருக்கிறான்… மறக்க முடியுமா!!!
    கல்கியின் – பொன்னின் செல்வன்
    சாண்டில்யன் – கடல்புறா, ஜலதீபம் மற்றும் யவனராணி… இது எல்லாம் பல பொக்கிஷம்…

  4. என்னே ஒரு அற்புதமான காதல், காம ஓவியம் காமினியோடு… அழகு… அருமை… அற்புதம்…

  5. வந்திய தேவனையும், நந்தினியை மிகச் சரியாக கொண்டுவந்து கதைக்கு மேலும் மெருகேற்றிய ஆசிரியருக்கு பாராட்டுக்கள்… வாழ்த்துக்கள்… மிக்க மகிழ்ச்சி…

  6. 29 அடுத்த கதையை போடுங்க ப்ளீஸ் அண்ட் ரிக்வெஸ்ட் காலையில் 6 மணிக்கு போடுங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க பெரிய எபிசோட் ஆல் போடுங்கள்

    1. Nanum virumbugiren

  7. வாழ்கையை கெடுக்கமாட்டேன் சொல்லி கெடுத்தவனுக்கும் அவளுக்கும் தண்டனைகிடைச்சாதான் நல்லாயிருக்கும் இல்லனா எல்லா−−−−−−−− ஆயிடுவாங்க

    1. I support to you…

  8. Mannichidunga ram story cont

  9. Mannichidunga ram story cont

  10. அடுத்தவங்க வாழ்க்கையில் புகுந்து அந்த வாழ்க்கையை கெடுத்த சீனுவுக்கு தண்டணை கொடுங்க சீனுவும் நிஷாவும் சேரக்கூடாது
    அதுபோல எழுதுங்க பார்வதிக்கு விஷயம் தெரிஞ்சி அவனை தொடப்பகட்டயால அடிக்கனும்

    1. I support you..

Comments are closed.