சரவணன் வீட்டுக் கதவு திறந்தே இருந்தது. தயக்கமின்றி உள்ளே போனான் தாமு.
சரண்யா கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு. . டிவி முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
”வா… மச்சான்…”
”உங்கண்ணன் இல்லையா..? என அவளைக் கேட்டான்.
உதட்டைப் பிதுக்கினாள்.
”எதுக்கு…?”
தலையை ஆட்டினான். ”எங்க போனான்..?”
”எனக்கென்ன தெரியும்..?”
”உங்கம்மா…?”
”போயாச்சு…”
”டூட்டிக்கா…?”
”ம்..ம்..! உக்காரு..!!”
சேரை எடுத்து அவளுக்கு எதிரே போட்டு உட்கார்ந்தான். ”தனியா இருக்க.. போரடிக்கல..?”
” இவ்ளோ..நேரம் படிச்சிட்டிருந்தேன்..”
”ஓ..!!”
” இன்னும் நெறைய இருக்கு…”
”ம்.. படி.. படி..” என்றான்.
சரண்யா மேக்கப் எல்லாம் செய்து கொண்டு..ஃபிரெஷ்ஷாக இருந்தாள். மிடி போட்டிருந்தாள்.
கீர்த்தனா.. அவளைப்பற்றி சொன்னதெல்லாம் நினைவில் வந்தது.
அவளே ” தாமு..ஒரு சின்ன ஹெல்ப்…” என்றாள்.
”என்ன..?”
” பணமிருக்கா.. உன்கிட்டே..?”
”பணமா..? எதுக்கு..?”
பளீரெனச் சிரித்தாள். ”வேனும்… இருந்தா.. குடேன்.. ப்ளீஸ்..”
”எவ்ளோ…?”
”ஹண்ட்ரெட்…”
”நூறா..? உனக்கெதுக்கு..?”
” குடு..தாமு..! ப்ளீஸ்..!!”
” நூறு… கஷ்டமாச்சே..?”
”இந்த கதைவிடற வேலையெல்லாம் வேண்டாம்..! ” என அவன் பக்கத்தில் சேரை நகர்த்திப் போட்டு உட்கார்ந்து அவன் கையைப் பிடித்தாள். ”உன்கிட்ட இல்லாம போகாது..! குடு மச்சான்.. ப்ளீஸ்…”
உளவியல் ரீதியான பிரச்சினையில் அவன் ஆண் மனசு உடனே.. விழுந்து விட்டது.
அவன் யோசிப்பது போல.. தடுமாற..
” கடனாத்தான்..! நான் திருப்பி தந்துருவேன்..!!” என்றாள்.
”எப்படி தருவ..?”
” எப்படியோ.. தருவேன்னா.. தருவேன்..! குடுடா…!! நீ குடுத்துருவேனு தெரியும்..! ஆனா இது சரவணனுக்கு தெரியக்கூடாது.. சரியா..?”
”ம்..ம்..” சிரித்தான் ”அதுக்கு முன்ன.. உன்ன ஒன்னு கேக்கனும்..”
”என்ன..?”
” ஓபனா பதில் சொல்லனும்..”
” அப்படியா.. கேளு…”
” பொய் சொன்னா.. பணம் தரமாட்டேன்..”
”என்ன மச்சான்.. ரொம்ப பீடிகை போடற..? சரி.. கேளு.. சொல்றேன்..”
”மறைக்காம சொல்லு..! நீ லவ் பண்றதான..?” என்றான்.
”உன்னைவா…?” சிரித்தவாறு கேட்டாள்.
”சே.. என்னை இல்ல..! தனசேகர..?”
மெதுவாக”யாரு சொன்னா.. உனக்கு..?” என்று கேட்டாள்.
”யாரோ..? உண்மையா… பொய்யா..?”
”ட்ரூ…மச்சான்…!!” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னாள்.
”எப்பருந்து..?”
” ம்ம்.. ஒரு சிக்ஸ் மந்த்ஸா..”
”ஓ..! எப்படி.. லவ்வாச்சு..?”
”எப்படியோ.. ஆகிருச்சு..! இதெல்லாம் கேக்கனுமாடா.. இப்ப..?”