”கிஸ்ஸூ…”
”சினிமாக்கெல்லாம் போறமாமா..! அப்றம் அதில்லாம இருக்குமா..” என்றாள்.
” அடிப்பாவி…”
” என்ன மச்சான்..? லவ்னாலே.. இதெல்லாம் இல்லாம.. எப்படி..?”
” ஓ..கோ..! வெறும் கிஸ் மட்டும்தானா…?”
” அதெப்படி…? நீ சினிமா போய்பாரு…அப்ப தெரியும். .?”
” அப்படின்னா.. ?” என்று அவள் மார்பைப் பார்த்தான்.
”அப்படித்தான்..!” என்றாள். உடனே.. ”அவ்வளவுதான்..என்டுவரை போயடாத..!”
” என்டுன்னா..?”
”ஆ..! ஒன்னுமே தெரியாதுபாரு..? அப்றம் இதெல்லாம் சரவணனுக்கு தெரியவே கூடாது.. என்ன..?”
”ம்..ம்..!”என அவள் மீது ஏக்கப்பார்வையை வீசியபடி.. தலையாட்டினான்..!!
இரவில் சரவணனுடன்.. தனியாகப் போய் பேசியபோது.. சரண்யா பற்றியும் பேசினான் தாமு.
”சரண்யா.. லவ் பண்றான்னு நெனைக்கறேன்..” என ஆரம்பித்தான் தாமு
சரவணன் அமைதியாக இருந்தான்.
தாமு ”அவ லவ் பண்றான்னு தெரிஞ்சா.. நீ என்னடா பண்ணுவ..?”
” என்ன பண்றது..?” என்று கேட்டான் சரவணன்.
”இ..இல்ல…”
” நோ.. டென்ஷன்டா..”
”கோபம் வராதா.. உனக்கு..?”
”அதெல்லாம் வேஸ்ரா..! கோபமாவது.. மயிராவது.. அவ லவ் பண்றது எனக்கு எப்பவோ தெரியும்..”
”தெரியுமா..? யாரை பண்றானு..?”
” ம்..ம்..! தெரியும்..!”
”தனசேகர்…?”
”தெரியுன்டா…”
”நீ.. ஒன்னும் சொல்லல..?”
”சொன்னேன்.. மொதல்ல..! அப்றம் விட்டுட்டேன்..! அவனும் ஒன்னும் மோசமான பையன் இல்ல..! நம்மள மாதிரியானவன்தான். .! அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிரலாம்னு.. நித்யா சொன்னா..! நானும் சரினு சொல்லிட்டேன்..!!” என்றான்.
தாமு வாயடைத்துப் போனான்.
சரவணன் சொன்னான் ”எவனையோ கட்டிட்டு காலம்பூரா.. அவனோட மாரடிக்கறதவிட.. லவ் பண்ணவனையே கட்டிக்கட்டுமே..! நமக்கும் ஒரு தலைவலி இருக்காது..! என்ன சொல்ற..?”
தலையசைத்தான் தாமு ”ம்..!”
”ஒன்னுல்ல.. இப்ப.. உங்கக்காளையே எடுத்துக்க.. அந்த ட்ரைவர் நல்லவனா.. கெட்டவனானு தெரிஞ்சுட்டா.. கல்யாணம் பண்ணா..? ஏதோ பழக்கத்துல.. பண்ணிட்டு இப்ப மாரடிக்கறதில்லயா..? அவனோடு குடும்பத்துல.. அவனைத தவிற.. வேற யாரையுமே.. உனக்கும் தெரியாது.. உங்கக்காளுக்கும் தெரியாது இல்ல..? நாளைக்கு அவன் விட்டுட்டு போனாக்கூட.. நீங்க என்ன பண்ண முடியும்.? இப்படி எவனோ ஒருத்தன பண்ணா.. இதான் கதி..! இப்ப.. இவன் நம்ம ஏரியா பையன்..! நல்லா தெரிஞ்ச குடும்பம்..!! எந்த பிரச்னைனாலும்.. அனுசரிச்சு போயிடலாம்..!!” என்றான்.
அதன்பிறகு தாமு பேசவே இல்லை…!!