வேலை முடிந்து வந்தபிறகு.. வீட்டில் போய் பேகை வைத்துவிட்டு.. கீர்த்தனா வீட்டிற்கு போனான் தாமு.
அவளது தங்கைதான் கதவைத் திறந்தாள். பள்ளிச் சீருடையில் இருந்தாள். முகத்தில் லேசான வியர்வைப் பிசுக்கு தெரிந்தது.
”ஹாய்…” என்றான்.
”ஹாய்ணா…வாங்க..” என்று சிரித்தாள்.
”ஸ்கூல் விட்டு வந்தாச்சா..?”
”ம்..ம்..!”
”கீர்த்தனா இல்லையா..?”
” இருக்கா…” ஒதுங்கி நின்றாள் ”கம் இன்…”
உள்ளே போனான். டிவி ஓடிக்கொண்டிருந்தது. கீர்த்தனாவைக் காணவில்லை.
சைலாவைப் பார்த்துக் கேட்டான்.
”யூனிபாம் மாத்தலையா..?”
” மாத்தனும்.. உக்காருங்க…”
” கீர்த்தனா எங்க.. காணம்..?”
”வருவா.. உக்காருங்க..”
”வெளில போயிருக்காளா..?”
”குளிக்கறா..” என்று சிரித்தாள் ”சொல்லிர்றேன்..” என்றுவிட்டு பாத்ரூமை நோக்கிப் போனாள்.
தாமு ”பரவால்ல.. வா..” என்றான்.
சைலா.. சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தாள்.
”சொல்லிட்டேன்.. வந்துருவா..! உங்கள உக்காரச்சொன்னா..” என்றாள்.
உட்கார்ந்தான். டிவியைப் பார்த்தான்.
அவனருகில் வந்து நின்ற சைலா..
”கீர்த்தி சொன்னா..”என்றாள்.
அவளைப் பார்த்தான் ”என்ன சொன்னா..?”
”ரெண்டு பேரும்.. லவ் பண்றீங்களாமே..?” பெரிய கண்கள்..! உருண்டை முகம்..! கீர்த்தனாவை விட இவள் நல்ல அழகி. லட்சணமான முக அமைப்பு..! லாவண்யமான உடலமைப்பு..!
”அ… அது..” கொஞ்சம் திணறினான்.
சிரித்தவாறு சைலா ”கல்யாணமெல்லாம் பண்ணிக்கப்போறீங்களாமே..?” எனக் கேட்டாள்.
திகைத்தான் ”கல்யாணமா..?”
” ம்…ம்.”
”கீர்த்தி சொன்ன்ளா..?”
”ம்..ம்.”
”எப்ப..?”
”நேத்துதான் சொன்னா..! அதும் அவதலமேல அடிச்சு சத்தியம் பண்ணீங்களாமே..? அவ இல்லேன்னா.. செத்துருவேன்னெல்லாம் சொன்னீங்களாமே..?”
அப்படி எதுவும் அவன் சொல்லவில்லை.
திகைப்புடன் அவன் சைலாவைப் பார்க்க…
ஈரம் துடைத்தவாறு வந்தாள் கீர்த்தனா.
”வா..தாமு. .”
சிரித்தான்.