நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 6 35

என்ன சொல்வதெனப் புரியாமல் திணறிக்கொண்டிருந்தான் தாமு…..!!!!!

தாமு திகைப்பில் விழி பிதுங்கிக்கொண்டிருக்க…
சைலா தொடர்ந்து..
”அப்ப என்ன சொன்னாரு தெரியுமா..?” என்று கேட்டாள்.

கீர்த்தனா ”என்னடி சொன்னாரு..?” என்றாள்.

அவள் ஏடாகூடமாக எதையாவது சொல்லிவிடுவாள் என பதறி.. தாமு குறுக்கிட்டுச் சொன்னான்.
”ஐயோ.. இல்ல கீர்த்தி..! நான் எதுமே சொல்லல..!”

”நெஜமா… சொல்லல..?” என்று அவனைக் கேட்டாள் சைலா.

”சத்தியமா.. நான் எதுவுமே சொல்லல..கீர்த்தி..! அதும் நான் அவள அம்மணமா எல்லாம் பாக்கல..! தண்ணி தாகமா இருக்குனு… குடிக்கலாம்னு உள்ள போனேன்..! அங்க இவ இருக்கானு தெரியாது..! அப்ப இவ… ஜட்டியோட நின்னுட்டிருந்தா..! நா.. அவள பாக்ககூட இல்ல.. உடனே வெளிய வந்துட்டேன்..!!” என்றான்.

கைதட்டி சிரித்தாள் சைலா.
”நல்லா மாட்னீங்களா..!” தன் அக்காவைப் பார்த்து..”கேட்டியா..? நான் ஜட்டியோட நிக்கறத பாத்துருக்காரு…! அப்படின்னா… டாப்ல….?”

”ஐயோ..! நான் அதெல்லாம்.. எதும்.. பாக்கவே இல்ல…!!” என்று பதறிய தாமுவைப் பார்த்து… சிரித்து சமாதானமாகப் பேசினாள் கீர்த்தனா.

”அவ அப்படித்தான் தாமு..! நீ ஃபீல் பண்ணிக்காத..! விடு நான் காபி கொண்டு வரேன்..!!” என்று விட்டு உள்ளே போனாள்.

சைலா சிரித்தாள் ”எப்படியோ.. தப்பிச்சிட்டிங்க..?”

”ஸாரி சைலு..! ஆனா.. நீ இவ்வளவு டேஞ்சரஸ் கேர்ளா இருப்பேனு நான் நெனைச்சே பாக்கல..” என்றான்.

கீர்த்தனா காபி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.
மூவரும் ஒன்றாகவே உட்கார்ந்து காபி குடித்தார்கள்.

காபியை உறிஞ்சிவிட்டு தாமுவைப் பார்த்துக் கேட்டாள் சைலா.
”அப்ப.. நீங்க மேரேஜ் பண்ண..இன்னும் நாலு வருசம் ஆகுமா..?”

” ம்.ம்..”

” பட்… என்னால அவ்ளோ நாள்லாம் வெய்ட் பண்ண முடியாதே..”

”ஏன்.. இதுல உனக்கென்ன பிரச்சினை..?”

”என்ன.. மச்சி.. இப்படி கேட்டுட்டிங்க..? இவளுக்கு மேரேஜ் பண்ண பின்னாலதான.. நான் பண்ண முடியும். .? அது புரியாம…”

”அடிப்பாவி..!”என்றாள் கீர்த்தனா ”உனக்கு அவ்ளோ.. அவசரம்னா.. நீ பண்ணிக்கோடீ..”

”சே..சே..!! அக்கா ஒருத்தி… இருக்கப்ப.. தங்கச்சி பண்ணா.. இந்த ஊர் உலகம்.. என்ன சொல்லும்…” என்றாள்.

சிரித்துவிட்டு கேட்டான் தாமு.
”அது சரி.. நீ யாரை கல்யாணம் பண்ணிக்கப் போறே..?”

”மை லவர்..!!” என கண்ணடித்துச் சிரித்தாள்.

”என்னது… லவ்வரா..? நீ லவ் பண்ணிட்டிருக்கியா.. இப்ப..? ”

”யா..யா..!!” என்று கூலாகச் சொன்னாள் ”நீங்கள்ளாம் பண்றப்ப.. நான் பண்ணா என்ன..?”

” யார.. லவ் பண்ற..?”

குரலைத் தணித்துக்கொண்டு.. ”அவகிட்ட சொல்லிடாதிங்க.. உங்களத்தான்..!!” என்று சிரிக்காமல் சொன்னாள்.

திகைத்தான். ”என்னது..?”

”பிராமிஸா..! நா உங்களத்தான் லவ் பண்றேன்..!!”

திணறிலுடன் கீர்த்தனாவைப் பார்த்தான்.
”சைலா சாதாரண ஆளு இல்ல..! ரொம்ப வில்லங்கம் புடிச்சவ..”

கீர்த்தனா சிரித்தாள”பொறந்த நாள்ள இருந்து.. இவள பாக்கறேனே.. இவளை எனக்கு தெரியாதா..? யாரா இருந்தாலும் கலாய்ச்சுருவா..”

தாமு மறுபடி சைலாவைக் கேட்டான்.
”நெஜமா.. நீ லவ் பண்றியா..?”

”ஏன்… எங்கள பாத்தா..யாருக்கும் லவ் வராதா..?”

”உன்னப்பாத்து .. யாராவது அப்படி சொல்ல முடியுமா..? சரி.. நீ யார லவ் பண்ற..?”

சிரித்து ”சஸ்பென்ஸ்..!!” என்றாள்.

கீர்த்தனா ”இவ இப்படித்தான்.. ரொம்ப நாளா கதை விட்டுட்டிருக்கா.. தாமு..! அவ பேச்ச நம்பாத..!!”

” இது கதையில்ல… மேடம்..! நெஜம்..!!”

”அப்ப… அது யாருனு சொல்லு..”

கண்சிமிட்டி ”கற்பைப் போலவே.. என் காதலும் புனிதமானது..!!” என்றாள்.