அவள் சிரித்தாள் ”தண்ணி வேனுமா..?”
” ம்…!!”
உடனே திரும்பிப் போய் தண்ணீர் கோண்டு வந்து கொடுத்தாள் சைலா.!
அவள் முகத்தைப் பார்த்து.. ”ஸாரி சைலு..! தப்பா நெனச்சிக்காத… நான்.. தெரியாம….” என்று தண்ணீரை வாங்கினான்.
”பரவால்ல.. விடுங்க.மச்சி..” என்றாள் ”நான் யாரு..? சின்னப் பொண்ணு..! நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணிக்காதாங்க..!!”
”தேங்க்ஸ்..” என்று விட்டு தண்ணீர் குடித்தான்.
சேரை இழுத்து அவன் பக்கத்தில் போட்டு உட்கார்ந்தாள் சைலா.
”அப்றம்.. எப்ப மேரேஜ்..?’
அவளைப் பார்த்தான் ”மேரேஜா..? யாருக்கு..?”
”ம்.. எனக்கும்.. உங்களுக்கும்..” என்று முறைத்தாள் ”கீர்த்திய எப்ப மேரேஜ் பண்ணிக்கப் போறீங்க..?”
அதேநேரம்.. உள்ளே வந்த.. கீர்த்தனா.. சைலாவின் பின்னந்தலையில் தட்டினாள்.
”ஏன்டி புளுகி…தாமுகிட்ட.. என்னடி சொன்ன..?”
” நால்லாம் ஒன்னுமே சொல்லலப்பா…” என்று அப்பாவி போலச் சொன்னாள்.
”தாமு என்னை கல்யாணம் பண்ணிக்கப் போறதா..? நான் இல்லேன்னா.. செத்துருவேன்னு தாமு சொன்னதா.. எல்லாம்.. நான் சொன்னனா.. உன்கிட்ட..?”
”ஆமா..!! சொன்ன இல்ல..? மறந்துட்டியா..?”
”அடிப்பாதகத்தி…! நான் எப்படீ சொன்னேன்..?”
” ஏய்.. ரொம்ப புளுகாத..!! அப்றம்.. உன் லவ்வு வெலங்காம போயிரும்..!!”
” அடிப்பாவி..! நெஜமா.. நான் சொன்னனாடி..?”
”ஆமா… நீதான் சொன்ன… நீதான் சொன்ன..” என்றவாறு தாமுவிடம் திரும்பி ”இவள நம்பி லவ் பண்ணாதிங்க.. வண்டி.. வண்டியா.. புளுகுவா..” என்றாள்.
”அடிப்பாதகி..! இரு..இரு.. உன்ன.. அப்றம் பேசிக்கறேன்..!” என்று நறுக்கென அவள் தலைமீது ஒரு கொட்டு வைத்துவிட்டு.. ”இரு தாமு.. டீ வெக்கறேன்..!!’ என்று உள்ளே போனாள்.
கீர்த்தனா போனதும்.. சிரித்த முகத்துடன் திரும்பி தாமுவைப் பார்த்து.. கண்சிமிட்டி.. ”அவ கெடக்கா விடுங்க.. மச்சி..! நாம நம்ம மேட்டருக்கு வரலாம்..! எப்ப மேரேஜ்..?” என்று கேட்டாள்.