அடிக்கடி சோர்வைடையத் தொடங்கினாள் உமா. அவளது உடம்பு மிகவும் பலவீனமாகி வருவது போல உணர்ந்தாள்.
சரியாக சாப்பிட முடியவில்லை. தலை சுற்றல்.. வாந்தி..மயக்கம்… என சிரமப்படத்தொடங்கினாள்.
காரணம் புரிந்தது…!
மசக்கை….!!
”இப்பெல்லாம் சாப்பிடவே முடியறதில்ல..” என தன் கணவனிடம் சொன்னாள் உமா.
” ஏன..?” என்று கேட்டான் அவன்.
”குமட்டலா வருது..! தலை சுத்தல்… மயக்கம்… வாந்தினு.. ஒரே தொந்தரவா இருக்கு..!!”
”ஆஸ்பத்ரி போறதுதான..?”
” போயி..?” என சிரித்தவாறு கேட்டாள்.
”டாக்டர்கிட்ட காட்டு.! மாத்திரை.. மருந்து தரவாங்க..!!”
”அப்றம்..?”
”நல்லாகிரும்..”
”ம்கூம்..! அப்பயும் நல்லாகாது..!” என்றாள் குறுமாபாக.
” ஏன் நல்லாகாது..?” அவளை முறைத்தான்.
”நல்லாகாதுன்னா… நல்லாகாதுதான்..”
அவன் கடுப்பாகி ”அப்ப.. செத்து தொலை..” என்றான்.
”பாவி..” மனசுள் திட்டினாள் ”இதான் பொண்டாட்டிய பாத்துக்கற லட்சணமா..?”
”அப்றம் என்னடி.. ஒன்னு சொன்னா.. அத செய்யறத விட்டுட்டு…”
”நல்லாகாதுனு.. நான் ஏன் சொன்னேன் தெரியுமா.. மொதல்ல..?” என்றாள்.
5
அவன் பேசவில்லை.
”ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் இருந்தா.. மசக்கைனு அர்த்தம்..!!” என்று சிரித்த முகத்துடன் சொன்னாள்.
அவன் முகத்தில் திகைப்பு.
”மசக்கையா..?”
”ம்..! நான் மாசமாருக்கேன்..!!”
”சட்..!!” சீரியஸாக தலையில் கை வைத்துக் கொண்டான் ”ச்ச..”
”ஏன்..?”
”இப்ப.. உடனேயேவா..?” அவன் முகம் இருகியது.
உமா கலவரமடைந்தாள் ”எவ்ளோ சந்தோசமான விசயம்..”
”எனக்கு இது சந்தோசமானது இல்ல..! பெரிய தலைவலி..!!” என்றான்.
”ஏன்.. புடிக்கலியா .?”
”ஆமா.. கலைச்சிரு..!”
அதிர்ந்து.. அவனை வெறித்தாள் உமா. அப்பறம் ஒரு பெருமூச்சு விட்டு தீர்மானமாகச் சொன்னாள்.
”என்னால கலைக்க. முடியாது..”
”ஏன்…?”
”நான் இத பெத்துக்கப்போறேன..”
”நீ பெத்துக்கக்கூடாது..” என்றான்.
இதுதான் அவர்கள் சண்டையின் ஆரம்பமாக அமைந்தது…!!