மிதமான போதையில்..தாமு வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்த போது..
”தாமு..” என்று கீர்த்தனாவின் குரல் கேட்டது.
பின்னால் திரும்பிப் பார்த்தான் யாரையும் காணவில்லை.
அவன் கண்கள் நாலா பக்கமும் தேட..
”இங்கருக்கேன்..” என்று ஒரு வீட்டுனுள்ளிருந்து குரலகேட்டது.
அங்கே பார்த்தான்..!
ஜன்னலுக்குப் பின்னால் அவளது சிரித்த முகம் தெரிந்தது.
அவனும் சிரித்தான். ”நீயா..?”
”ஒரு நிமிசம்..இரு வந்தர்றேன்..” என்றாள்.
அவளைப் பார்த்தபடி நின்றான்.
ஜன்னலில் மறைந்து கதவு வழியாக வெளியே வந்தாள். உடம்பைப் பித்தது போல… டைட்டான சுடிதார் போட்டிருந்தாள்.
”எங்க.. சரவணன் வீட்லருந்தா வர்ற.?”
”ம்..! ஆமா…! நீ.. இங்க என்ன பண்ற…?”
”தெரிஞ்ச ஒரு அக்கா..! அவங்களோட பேசிட்டிருந்தேன்..!” என்றாள்.
பேசிக்கொண்டே மெதுவாக நடந்தார்கள்.
தாமு பிரியுமிடம் வந்ததும்…
”வாயேன் வீட்டுக்கு..” என அவனைக் கூப்பிட்டாள்.
”இப்பவா…?”
”ஏன்… ஏதாவது வேலை இருக்கா..?”
”இ..இல்ல..! அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ”
”அப்றம் என்ன.. வா…”
”ம்..ம்..” தலையாட்டி விட்டு அவளுடன் நடந்தான்.
பூட்டியிருந்த வீட்டைத் திறந்து அவனை உள்ளே கூட்டிப்போனாள்.
ஒரு சேரை எடுத்துப் போட்டாள்.
”உக்காரு…”
தயக்கத்துடன் உட்கார்ந்தான்.
”சைலு..?”
”அவ ஸ்கூல் போயட்டா.. ஒரு நிமிசம் உக்காரு பாத்ரூம் போய்ட்டு வந்தர்றேன்…” எனச் சொல்லி விட்டுப் போனாள்.
தாமு சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி மூணு இருபது..!
எழுந்து டி வியையும்… பேனையும் போட்டுவிட்டு.. சேரில் உட்கார.. ஈர முகத்தைத் துடைத்தவாறு வந்தாள் கீர்த்தனா.
முகம் துடைத்த துப்பட்டாவை.. சேரின்மேல் போட்டுவிட்டு.. அந்தச் சேரை இழுத்து… அவன் எதிரே போட்டு உட்கார்ந்தாள்.
”டீ குடிக்கறியா..?” என்று கேட்டாள்.
”இல்ல.. வேண்டாம்..”
”சரி.. தண்ணி…?”
நாக்கு தெவண்டு… கொஞ்சம்..தாகமாகத்தான் இருந்தது.
”ம்..குடு..” என்றான்.
சிரித்துவிட்டு எழுந்து போனாள். மெதுவாக அசைந்து போகும் அவள் பின்னழகை ரசித்துப் பார்த்தான்.
தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் கீர்த்தனா.
அவளது விரல் தொட்டு வாங்கினான்.
அன்னாந்து குடித்த போது.. சிறிது தண்ணீர் அவன் சட்டையை நனைத்தது.
தண்ணீர் குடித்துவிட்டு… செம்பைக் கொடுத்து விட்டு.. மார்பில் நனைந்த ஈரத்தை கையால் துடைக்க…
கீர்த்தனா தன் துப்பட்டாவை எடுத்து துடைத்து விட்டாள்.