சுகமதி – Part 2 182

”இல்லடா நான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு..” என்றேன்.
அவனது அம்மாவும் என்னை சாப்பிடச் சொன்னாள் நான் மறுத்து விட்டேன்.
நான் உட்கார இடம் இல்லாததால்.. தான் உட்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்து.. என்னை உட்காரச் சொன்னாள் கலையரசி.
நான் சேரில் உட்கார்ந்து.. அவளை சீண்டினேன்.
”ஒரு பேச்சுக்காவது ஒரு வார்த்தை…”
” என்ன வார்த்தை..?” என்று என்னைப் பார்த்தாள்.
சிவப்புக்கலரில் பூ போட்ட நைட்டி போட்டிருந்தாள்.
”சாப்பிடுனு…”
” சரி.. சாப்பிடு..?” என்று கிண்டலாக கேட்டாள்.
உடனே நான் அவள் கையில் இருந்த தட்டை பிடுங்கி விட்டேன்.
”சரி சாப்பிட்டுக்கோ..” என்று சிரித்தாள்.
தட்டில் தோசை இருந்தது.
”சாப்பிட்டிருவேன்..” என்றேன்
” ஏ.. சாப்பிடு..! நான் நாலு தோசை சாப்பிட்டாச்சு. இதைவே நாய்க்கு கொண்டு போய் போட்ரலாமானு யோசிச்சிட்டிருந்தேன்.. நல்ல வேளை.. நீ வந்துட்ட..! நீ சாப்பிட்டுக்கோ.. அந்த நாய்க்கு வேனா… நான் நாளைக்கு போட்டுக்கறேன்…”
நலன்.. அவன் அம்மா உட்பட எல்லோரும் சிரித்து விட்டோம்.

காலைக் காட்சி.
அக்காள் தங்கை இருவரும் கலக்கலாக வந்தனர்.
சுகமதி நெட்டெட் மிடியிலும்.. மலருபா ஜீன்ஸ் பேண்ட்.. டீ சர்ட்டிலுமாக கலக்கினர்.
என்னிடம் வந்த சுகமதி.

”என்ன சுதன்.. ஹேப்பியா..?” என்று கேட்டாள்.
நிச்சயமாக நான் ஹேப்பிதான்.
”வெரி.. வெரி ஹேப்பி…” என்றேன்.
மலருபா என்னை பார்த்து காதலுடன் சிரித்தாள்.
நலன் போய் டிக்கெட் எடுத்து வந்தான்.
நாங்கள் நால்வரும் பால்கனி போனோம்.
காலை காட்சி என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பெண்கள் இரண்டு பேரும் நடுவில் உட்கார.. நானும் நலனும் அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் உட்கார்ந்தோம்.
படம் தொடங்கியதுமே நலன் தன் சேட்டைகளைத் தொடங்கி விட்டான்.
சுகமதி நெளிவதும் சிணுங்குவதுமாக இருந்தாள்.
நான் இருட்டில் மலருபாவின் கையை தொட்டேன்.
”மலர்…”
”ம்ம்..?”
”உன் ட்ரெஸ்.. சூப்பரா இருக்கு..” என்று அவள் தோளில் என் தோளை அழுத்திக்கொண்டு அவள் காதருகில் என் வாயை வைத்து சொன்னேன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.