சுகமதி – Part 2 180

அவளும். ”ஹாய்..” என்றாள்.
”எங்க..?”
”கடைக்கு..” என்று விட்டு நடையை தொடர்ந்தாள்.
நானும் அவளுடன் இணைந்து நடந்தேன்.
”நீங்க எங்க..?” என்று அடிக்குரலில் கேட்ட.
”உனக்கு கம்பெனி..” என்றேன்.
” சீ.. கூடவே வராதிங்க…” என்று வேகமாக நடந்தாள்.
நானும் வேகமாகவே நடந்தேன்.

”மலர்..”
” ம்ம்…?”
” உன்கிட்ட மொபைல் இருக்கா..?”
”ம்கூம்..! இல்ல..” என்றாள்.
”சே…” என்றேன்.
”ஏன்..?”
” பேசிக்கலாமே.. போன்ல..? உங்கக்கா கிட்ட..?”
”ம்கூம்.. அதெல்லாம் இருந்தா நாங்க படிக்க மாட்டோமாம்..! எங்கம்மா வேன்டாம்னு தடுத்துட்டாங்க…” என்றாள்.
”நல்ல அம்மா.. சரி… சினிமா போலாமா..?”
”எப்ப..?”
” சாட்டர் டே… ஸ்கூல் லீவ் தானே..?”
”ஐயோ நான் மாட்டம்ப்பா…” என்று கடைக்கு போனாள் மலருபா.
நான் சாக்கடை ஓரமாக நின்றேன்.
அவள் திரும்பி வந்து..
”என்ன சாக்கடைக்கு காவலா..?” என்று கிண்டலாக சிரித்தாள்.
”இல்ல.. என் தேவதைக்கு காவல்…” என்றேன்.
”ஆ…ஆ.. புல்லரிக்குதுபா…” என்று சிரித்தாள்.
”மூவி போலாம் மலர்… ப்ளீஸ். .” என்றேன்.
தயக்கத்துடன் சொன்னாள்.
”எங்கக்காள கேளுங்க.. அவளுக்கு ஓகே ன்னா… எனக்கும் ஓகே தான்..” என்று விட்டு பினனழகு அசைய… ஓடினாள்..!!
நான் நலனைப் பார்க்கப் போன போது நலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
கலையரசி டி வி முன்னால் சேரில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் தட்டு இருந்தது.
”வாடா.. சாப்பிடு.” என்றான் நவன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.