சுகமதி – Part 2 179

”எங்கடா போனா…” என்று அவனை கோபமாக கேட்டார்.
அவன் தயங்கி… ”பிரெண்டு வீட்டுக்கு..” என்றான்.
”போன் என்னாச்சு.. ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்.. சுட்ச் ஆப்னே வரூது. ஏன் ஒழுக்கமா சார்ஜ்கூட போட்டு வெக்க மாட்டியா..” என்று சத்தம் போடடார்.

அவன் அமைதியாக நின்றான்.
”சரி உக்காரு வா..” என்க.
சத்தம் இல்லாமல் அவர் பின்னால் ஏறி உட்கார்ந்தான் நலன்.
என்னைப் பார்த்து
” வீட்டுக்கு வந்துரு.” என்று ஜாடை செய்து விட்டு அவன் அபபாவுடன் போனான்.
நான்.. வீட்டுக்குப் போய்.. சாப்பிட்டு.. ட்ரெஸ் மாற்றிக் கொண்டு.. நலன் வீட்டுக்குப் போனேன்.
கதவு திறந்திருந்தது. வீட்டில் சத்தமாக டி வி ஓடிக்கொண்டு இருந்தது.
அவன் அப்பாவுடைய பைக் இல்லை.
நான் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போனேன்.
நலன் இல்லை.
அவன் தங்கை கலையரசிதான் கால் மேல் கால் போட்டு படுத்திருந்தாள்.
என்னைப் பார்த்து..
”ஹாய்..” என்று சிரித்தாள்
”ஹாய்..” சொல்லி.. நான் அவளிடம் கேட்டேன் ”நலன் எங்க..?”
”தெரியல..” என்றாள்.
” ஏய்.. விளையாடாம சொல்லு..”
”ஏன்.. நீ பாக்கல…?” என்று படுத்துக் கொண்டே என்னைக் கேட்டாள்.
”பாத்தேன்.. இப்ப.. ஒரு அரை மணி நேரம் முன்னால உங்கப்பா அவனை பைக்ல கூட்டிட்டு வந்தாரு..” என்றேன்.
”அப்ப கடைக்கு கூட்டிட்டு போயிருப்பாரு..” என்றாள்.
”இங்க வரலையா..?”
” ம்கூம்..”
”வீட்டுக்கு வந்துருனு சொன்னான்”
” ஏன்.. எங்காவது போறீங்களா..?”
” ஆமா..”
”எங்க…?”
”மூவி..”
”யாராரு.?”
”நாங்க ரெண்டு பேருதான்..”
”அவன் இல்லேன்னாக்கூட நான் வருவேன்..” என்றாள்.
” நாம இன்னொரு நாள் போலாம்..”என்றேன்.
அவளோடு பேசிக்கொண்டே நான் நலன் நெம்பருக்கு கூப்பிட்டு பார்த்தேன்.

1 Comment

  1. Pro intha kathaiya nan paathithan patichirukken full story eluthungn

Comments are closed.