காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் – End 70

“இதை உன்னையும் என்னையும் தவிர யாரு நம்ப போறா வித்யா”

“நம்புவாங்க பாலன், நம்புவாங்க” அழுதாள்.

“அழாதே வித்யா”

“நம்புவாங்க, அர்ச்சனா நாளைக்கு கோர்ட்ல வந்து நின்னா எல்லாரும் நம்புவாங்க”

“என்ன சொல்லுறே”

“எஸ் பாலன். அர்ச்சனா உயிரோட தான் இருக்கானு நினைக்கிறேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி நானா சங்கர் கிட்ட போய் அவன் உங்களை இந்த கேஸ்ல இருந்து விடுவிச்சா அந்த துபாய் ஷேக்கோட வைப்பாட்டியா போய் அவன் தர்றதா சொன்ன எண்ணெய் கிணறு எல்லாம் அவனுக்கே தரேன்னு சொன்னேன். அதை அவன் வேணாம்னு சொன்ன உடனே எனக்கு சந்தேகம் வந்து வெரோனிகா கிட்ட நம்பேரை எல்லாம் ட்ரெஸ் பண்ண சொன்னேன்.”

எனக்காக எதையும் செய்ய வித்யா துணிந்து விட்டாள் என்பது நன்றாக புரிந்தது.

“துபாய் நம்பர் எல்லாம் ட்ரெஸ் பண்ண முடியாதுன்னு சொன்ன வெரோனிகா, அந்த சேக்கோட நம்பர் இன்னைக்கு காலையில சென்னைல ஆக்டிவ் ஆகி இப்போ மௌண்ட்ல இருக்க 5 ஸ்டார் ஹோட்டல்ல இருக்குனு மெசேஜ் பண்ணினா”

“அவன் இங்க வந்தது வேற வேலையா கூட இருக்கலாம்”

“இப்போ அரை மணி நேரத்துக்கு முன்னாடி சங்கரோட அம்மா புர்கா போட்டு முழுசா மூடிய யாரையோ வீல்சேரில் கூட்டி அந்த ஹோட்டல் உள்ளே போய்ட்டு சும்மா வெறும் கையை வீசிக்கிட்டு தான் வந்தா. அநேகமா அந்த புர்கா போட்டது அர்ச்சனான்னு நினைக்கிறேன். நான் போய் அவளை காப்பாத்த போறேன்”

“வித்யா, நீ போய் எதுலேயும் வீணா மாட்டிக்காதே”