“ஏன் வித்யா இப்படி பண்ணினே”
“….” ஒன்றும் பேசாமல் கதறி அழுதாள்.
“எல்லாமே முடிஞ்சி அவனுக்கு தண்டனை கிடைக்க போற நேரத்திலே ஏன் இப்படி பண்ணினே”
“இவன் கிட்ட வேற எந்த நித்யாவும் நிவேதாவும் சிக்கி சின்ன பின்னம் ஆகாம இருக்க.” சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவளை இறுக்கி பிடித்து கட்டிப்பிடித்து கொண்டேன்.
போலீஸ் அதற்குள் அங்கே வந்து அவளை சுற்றி நின்றது.
“ஐ அம் சாரி பாலன். ஒரு நிமிஷம் நான் வழிதடுமாறியதை யூஸ் பண்ணி என்னோட வாழ்க்கை மட்டும் இல்லாம, உங்களோடது அப்புறம் அர்ச்சனாவோட வாழ்க்கை எல்லாம் வீணடிச்சே இவன் இதுக்கு முன்னாடி நிறைய பேருக்கு இந்த மாதிரி பண்ணி இருக்கான். தண்டனை அனுபவிச்சு வந்த உடனே மறுபடியும் இதே தான் செய்வான் அதனாலே தான் இவனை என் கையால கொன்னேன். பாலன் உங்க கூட வாழுற தகுதி எனக்கு இல்லை, உங்களுக்குனு ஒரு வாரிசை கூட கொடுக்க முடியாத பாவி நான். நீங்க அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழுங்க” அவள் அழுதுகொண்டே சொல்ல போலீஸ் அவளை அழைத்து சென்றனர்.
“நோ வித்யா, திஸ் இஸ் நாட் ரைட்” எனக்கு அழுகையாக வந்தது.
அர்ச்சனாவை அவளின் அம்மா ஊருக்கு அழைத்து செல்ல விடுதலை செய்யப்பட்டும் கூட இவளோ நாளாக ஜெயிலில் தனிமையில் நான் கொலை குற்றவாளி ஆக இருந்தபோது கூட இல்லாத ஒரு விதபயம் என்னை தொற்றி கொண்டது. எப்படி புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அடுத்த நாள் காலையிலே லாயரை பார்க்க சென்றேன்.
“சொல்லுங்க Mr. பாலன்”