கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 23 5

என் மனசுக்குள்ள வந்திருக்கற இந்த உணர்வு, மீனாவின் மனதுக்குள்ளும் எழுந்திருப்பது போல தெரியுதே? அவ கண்கள்ல்ல இந்த காதல் உணர்வு தீர்க்கமா இருக்கே? இன்னும் நான் போதையில இருக்கேன்; அதனால என் மனசுக்குள்ள ஒரு தப்பு எண்ணம் எழுந்திருக்குன்னு சொல்லலாம். ஆனா மீனா தன் முழு உணர்வுகளுடன் தானே இருக்கா?

“ஓ மை காட் … இது என்ன ட்ராமா மீனா? இட் ஈஸ் ஹைலி ரிடிக்குலஸ்… சீனு குடிக்கமாட்டேன்னு, எதுக்காக உன் கையில அடிச்சு சத்தியம் பண்ணணும்?” செல்வா தன் பொறுமையை முற்றிலும் இழந்து தன் அடிக்குரலில் சீறினான்.

“நீதானே கேட்டே ..
“நான் என்ன பண்றதுன்னு?’… உன்னால உன் பிரண்டை குடிக்காம இருடான்னு சொல்ல முடியலை; அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லேன்னு நீ இருக்கே. என்னால அப்படி இருக்க முடியாது; உன் பிரண்டை திருத்தறதுக்கு எனக்கு இதைவிட்டா வேற வழி தெரியலை…”

மீனாவின் வாய் தன் அண்ணனுக்கு இயந்திரமாக பதில் சொல்லியது. மீனாவின் முகம் உணர்ச்சிகளின்றி இறுகிய கல்லைப் போலிருந்தது. அந்த இடத்தில், அந்த கணத்தில், தன் அண்ணன் செல்வாவின் இருப்பை, அருகாமையை அவள் பொருட்படுத்தவேயில்லை. அவள் மனம் முற்றிலும் சீனுவையே நினைத்திருக்க, அவள் பார்வை சீனுவின் முகத்தில் குடிகொண்டிருந்தது.

அமைதியாக நின்றிருந்த சீனு, தன் மூன்று நாள் தாடியுடன் கருத்திருந்த தன் முகத்தை, ஒரு முறை தன் வலது கையால் மெதுவாக தடவிக்கொண்டான். தன் வலப்புறத்தில் சேரில் உட்க்கார்ந்திருந்த செல்வாவை ஒரு முறை ஆழ்ந்து பார்த்த சீனு, நிதானமாக மீனாவை நோக்கி இரண்டு அடி எடுத்து வைத்தான்.

தன் வலது கையை நீட்டி,
“சீனு” குடிக்கமாட்டேன் என்று நிச்சயமாக தனக்கு சத்தியம் செய்து கொடுப்பான் என்ற நம்பிக்கை கண்களில் நிறைந்திருக்க, தன் கால்களை மிக உறுதியுடன் மண் தரையில் ஊன்றி நின்றிருந்த மீனாவின் வெண்மையான செருப்பில்லாத அழகான பாதங்களையும், சிறிய விரல்களையும் பார்த்த சீனு, தன் பார்வையை நிமிர்த்தி, இப்போது பதட்டமில்லாமல், மனதில் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், தன் மனதில் பொங்கும் காதலுடன், மீனாவின் முகத்தை சில வினாடிகள் கூர்ந்து நோக்கினான்.

மீனாவின் கண்களிலிருந்து, அவள் உள்ளத்தில் தன்பால் பொங்கி வரும் காதலை, பாசத்தை, நேசத்தை, அசைக்க முடியாத ஒரு நம்பிக்கையை, சீனுவால் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னைத் திருத்துவதற்காக, இவள் தன் வாழ்க்கையை, பணயம் வைக்க முடிவு செய்துவிட்டாள். நான் அதிர்ஷ்டசாலி.

சீனு, தன் மனதில் ஓடும் எண்ணத்தை சரியாக புரிந்து கொண்டதை மீனாவும் உணர்ந்து கொண்டாள். அவள் மெல்லிய உதடுகள் மெதுவாக அசைந்து, ஒரு சிறிய புன்னகை பூவை மலரச்செய்தன. சீனுவும் தன் மனதில் ஒரு தீர்க்கமான முடிவுடன், தனக்காக தன் வாழ்க்கையை பணயம் வைத்துக்கொண்டிருக்கும், அந்த அழகான இளம் பெண்னை நெருங்கினான். தன் வலது கையை உயர்த்தி அவள் உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக அழுத்தினான். பின் மெல்ல முனகினான்…
“ஆமென்… ஆமென்…ஆமென்..”

சீனுவின் கரம் தன் கையில் அழுத்தமாக படர்ந்ததும் மீனாவின் முழு உடலும் மெல்ல சிலிர்த்தது. ஒரு ஆண் மகன், தன் மனதில் காதல் உணர்ச்சியுடன், மீனாவை தொட்டது இதுவே முதல் முறை. மீனாவுக்குள்ளும் ஒரு ஆணின் பால் காதல் உணர்வு எழுவது இதுவே முதல் தடவை. அந்த முதல் காதலால், அவள் மனம் விரும்பும் ஆணின் அன்பான முதல் தொடுகையால், இதுவரை அறியாத புதிய சுகமொன்று தன் உடல் முழுவதும் பரவுவதை அவள் உணர்ந்தாள். அந்த சுகத்தை முழுவதுமாக ரசித்து அனுபவித்தாள். மீனா நீளமாக காற்றை தன் மார்புக்குள் இழுத்து வெளியேற்றினாள்.

மீனா தன் எண்ணங்களில் தொலைந்து போனாள். ஒரு ஆண் மகனின் கையில் இத்தனை சக்தி இருக்கிறதா? இதே சீனு, என்னை எத்தனையோ தரம் தொட்டிருக்கான். என் அம்மா, அப்பா, அண்ணன்னு எல்லோர் எதிரிலேயும் என் கையை பிடிச்சி இழுத்து இருக்கான்; கையைகுலுக்கறேன்னு என் கையை பிடிச்சி அழுத்தி அழுத்தி, வேணுமின்னே, தன் உடல் வலுவைக்காட்டி, என்னை வலியால அழ வெச்சிருக்கான். என் இரு கைகளையும் முறுக்கி முதுகுக்கு பின்னாடி வெச்சு அடிச்சிருக்கான். அப்போதெல்லாம் அவன் தொடல், இந்த சுகத்தை என் தேகத்துக்குள் எழுப்பியதில்லையே?