“ஆமாண்டா … நீங்க காதலிக்கற பொண்ணு மேல நம்பிக்கையில்லாம சந்தேகப் படுவீங்க; அதெல்லாம் மேனர்ஸ்; நாங்க டீ நல்லா இருக்கேன்னு கொஞ்சம் சத்தமா உறிஞ்சி குடிச்சா பேடு மேனர்ஸ் … நல்லா வருதுடா வாயில…” சீனு பதிலுக்கு முறைத்தான்.
“சரிடா … நீ எப்படி வேணா குடிடா… இப்ப விஷயத்துக்க்க்கு வாடா..”
“மச்சான்.. உன்னைப் பாத்தா எனக்கு அழுவறதா சிரிக்கறதான்னு புரியலடா” சீனு மெதுவாக ஆரம்பித்தான்.
“டேய் சீனு, சிரிக்காதடா… எனக்கு மனசுல வலிக்குதுடா … அந்த சம்பத்து சுகன்யாவை ஃபார்மலா பொண்ணு பாக்க போறதா கூட, எனக்கு நீயூஸ் வந்திருக்குடா. அதையும் சுகன்யா எங்கிட்ட சொல்லலைடா…”
“இதையும் அந்த சம்பத்துத்தான் சொன்னானா?”
“இல்லே … சுகன்யாவோட ஃப்ரெண்டு வித்யா சொன்னாடா? அவதான் சுகன்யா ஊருக்குப் போயிருக்கற விஷயத்தையே சொன்னா”
“ஏண்டா நீ சுகன்யாவை டாவு அடிச்சிக்கிட்டே, ஜானகியை பொண்ணு பாக்க போனியே… அப்ப அது சுகன்யாவுக்கு வலிச்சிருக்காதா?”
“அம்மா சொல்லும்போது நான் எப்படிடா மாட்டேன்னு சொல்லுவேன்?”
“சுகன்யா மட்டும் உனக்காக அவங்க அம்மாவை எதுத்துக்கணுமா?”
செல்வா சீனுவுக்கு பதில் சொல்லாமல், தன் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டிருந்தான். அவன் உதடுகளும் கன்னங்களும் கோணிக்கொண்டு, விட்டால், அவன் எந்த நேரத்திலும் அழுதுவிடுவான் என சீனுக்குத் தோன்றியது.
“செல்வா … நீ என் பால்ய சினேகிதன்… ஆனா நான் சொல்றனேன்னு என் மேல கோவப்படாதே; கேனப்புண்டை அந்த சம்பத்து இல்லடா …”
“ம்ம்ம் …”
“என்னைக் கேட்டா அது நீதாண்டா …”