எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

“எ..என்ன சொல்ற நீ..?? எந்த மாதிரி ஸ்டேட்ல அவன் இருக்கான்..??”

“நேத்து.. அந்த சுமங்கலி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ப்ராஜக்ட் விஷயமா.. ஷூட்டிங் லொகேஷன் பாத்துட்டு வர சொல்லிருந்தல..??”

“ம்ம்..”

“ஆபீஸ்ல சும்மாதான இருக்கான்னு.. இவனையும் கூட்டிட்டு போயிருந்தேன்..!!”

“சரி..!!”

“பதினஞ்சு மாடி பில்டிங் மச்சி.. மேல நின்னுக்கிட்டு லொகேஷன் பாத்துட்டு இருந்தோம்..!! திடீர்னு இவன்.. ‘இங்க இருந்து இப்படியே குதிச்சிடலாம் போல இருக்குடா’ன்றான்..!! எனக்கு ஒன்னும் புரியல.. திரும்பி இவன் மூஞ்சை பாத்தா.. மூஞ்சில அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! எங்க இவன்பாட்டுக்கு டப்புன்னு குதிச்சிருவானோன்னு.. நான் அப்படியே மெர்சலாகி போயிட்டேன்..!!”

“ஓ..!!” வேணு சொல்ல சொல்ல.. கிஷோரும் சாலமனும் திகைப்பாக அவனையே பார்த்தனர்..!!

“அப்புறம்.. அப்படியே நைஸா.. பேச்சை வேற மாதிரி மாத்தி.. அவனை கீழ இழுத்துட்டு வந்தேன்..!!”

“ம்ம்..!!”

“அன்பா பேசித்தான்டா அவனுக்கு நெலமையை புரிய வைக்கணும்..!! அதைவிட்டுட்டு.. சும்மா சும்மா அவளை மறந்துடுன்னு சொன்னா.. அவன் என்னடா பண்ணுவான்..?? அவன் அந்த ஸ்டேஜ்லாம் தாண்டிட்டான்டா..!! ஆளாளுக்கு அவனை போட்டு டார்ச்சர் பண்ணி.. அவன்பாட்டுக்கு ஏடாகூடமா ஏதாவது பண்ணிக்கிட்டான்னு வச்சுக்கோ.. நெனச்சு பாரு..!!”

“ம்ம்.. புரியுதுடா..!!”

“வா.. கொஞ்சம் நல்லவிதமா பேசி.. அவனை கூல் பண்ணு.. வா..!!”

வேணுதான் அசோக்கின் நிலையை ஓரளவு சரியாக கணித்திருந்தான்.. இப்போது அவன்மூலமாக சாலமனும், கிஷோரும் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டிருந்தார்கள்.. மூவரும் சிகரட்டை கீழே போட்டு நசுக்கிவிட்டு, மீண்டும் அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!! நுழைந்தவர்கள்.. ஒருகணம் திகைத்துப் போனார்கள்..!! அசோக்கை அங்கே காணவில்லை..!!!!

“எங்கடா போயிருப்பான்..??”

“தெரியலையே மச்சி..!!”

“அவன் நம்பருக்கு கால் பண்ணு..!!”

கிஷோர் சொல்ல.. வேணு ஒருவித பதற்றத்துடன் தனது செல்போனை எடுத்து.. அசோக்கின் எண்ணை தேட ஆரம்பித்தான்..!!

அதே நேரத்தில்.. அசோக்கின் வீட்டில்.. அவனுடைய அறையில்..

வெட்டி நேரத்தை செலவழிக்க.. ஏதாவது ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன்.. DVD எடுத்துச்செல்கிற நோக்கத்துடன்.. அண்ணனின் அறைக்கு வந்திருந்தாள் சங்கீதா..!! அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த DVDகளை ஆராய்ந்து.. அதில் ஒன்றை தேர்வு செய்து வெளியே இழுக்க.. DVDயுடன் சேர்ந்து இன்னொன்றும் வெளியே வந்து விழுந்தது.. ‘டிங்டடாங்டாங்..’ என்ற சப்தத்துடன் தரையில் விழுந்து சிதறி ஓடியது..!! அது.. அசோக்கின் பாட்டி மீராவுக்கு அன்பளிப்பாக தந்த பரம்பரை மோதிரம்.. மீரா அசோக்கை விட்டு பிரிகையில், அவனிடம் திருப்பியளித்த மோதிரம்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.