எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 16 45

உதடுகள் உரசிக்கொள்ளும்.. உடனடியாய் ஒரு தீப்பிடிக்கும்..!! உதட்டுவரிப் பள்ளத்தில்.. உமிழ்நீர் என்கிற பெயரினில்.. சுரந்து வடிகிற தேனொன்றே.. சுகமான அத்தீயினை மூட்டியிருக்கும்..!! ஆசை ஏக்கம் அத்தனையும்.. அதரம் சுவைத்தே அடுத்தவருக்கு அறிவித்திட முயல்வர்..!! முத்தம் இவனை முரடனாக்கும்.. காதலனின் வேகம் அவளை கர்வம் கொள்ள வைக்கும்..!! இதழில் நடக்கும் வன்முறைக்கு.. அவளும் இயன்ற அளவு ஒத்துழைப்பாள்..!!

முத்தம் முடிந்து நெடுநேரம் ஆகியும்.. மூடிய இமைகளோடு.. முகமெல்லாம் உணர்ச்சி கொப்பளிக்க நின்றிருப்பாள்..!! அவள் உதட்டில் மினுமினுக்கும் முத்த ஈரத்தினை.. விரலினால் இவன் துடைக்க.. விழிகள் திறந்து கொள்ளும் அவளுக்கு..!! உதட்டினை உடனடியாய் உள்ளே மடித்துக் கொள்வாள்.. எச்சில் மிச்சத்தை நாவால் தடவி சுவை ருசிப்பாள்..!! கண்களில் பளிச்சென ஒரு மின்னல் பிறந்திட.. கன்னங்களில் அழகாய் ஒரு பள்ளம் தோன்றிட.. காதலும் குறும்பும் கலந்த குரலில் கேட்பாள்..!!

“கல்யாணம் பண்ணிக்கலாமா..??”

பட்டு உடலை தொட்டுப் போர்த்திய பட்டுப்புடவையும்.. மலர்ப்பந்து மார்பினில் வந்து புரண்டிடும் மலர்மணமாலையும்.. நடுவகிடு வழியிறங்கி நெற்றி தவழும் சுட்டியும்.. நாசியின் நடுத்தண்டுதனில் தொங்கி மேலுதடு முத்தமிடும் புல்லாக்கும்.. அஞ்சனம் பூசிய வண்டின கண்களும்.. சந்தனம் தடவிய பஞ்சின கன்னங்களுமாய்.. குத்துக்கால் இட்டமர்ந்து.. குனிந்ததலை குனிந்தேயிருக்க.. மணமகளோடு குணமகளுமாக மாறிப்போய்.. மந்திரத்தோடு வாத்தியமும் சேர்ந்தொலித்திட.. மஞ்சளால் ஆனதொரு மங்கலநாணினை வாங்கிக்கொள்வாள்.. மாலைகளை தோள்மாற்றிக்கொண்டு மனைவியும் ஆகிப் போவாள்..!!

அட்சதை தலையில் படிந்திருக்கும்.. ஆசீர்வாதம்பெற தரையில் பரவுவார்கள்.. அத்தையின் காலில் விழுந்து கிடக்கும் அவள்.. அப்பாவின் பாதம் பணிந்திருக்கிற இவனை பார்த்து.. குறும்பாக கண்சிமிட்டி குழிவிழுகிற கன்னத்தோடு சிரிப்பாள்..!!

கல்யாணம் முடிந்துவிடும்.. கனவோட்டம் முடிந்திடாது.. முதலிரவு தேனிலவென முடிவிலாமல் முன்னேறும்..!! நெஞ்சத்தில் பூத்திருந்தவள் மஞ்சத்தில் வீற்றிருப்பாள்.. நேரங்காலம் தெரியாமல் வெட்கமுற்று வெறுப்பேற்றுவாள்..!! தாகம் முற்றிப்போன இவன் மாராப்பினை பற்றியிழுக்க.. தளிர்க்கரங்களால் அவள் மலர்க்குவியல்கள் மறைத்திடுவாள்..!! ஆசையெனும் ஆயுதம் ஏந்தி.. நாணமெனும் கோட்டையை தகர்த்து.. ஆடையெனும் பகைவனை வெல்வார்கள்.. உள்ளத்தால் ஒன்றானவர்கள், இப்போது உடலாலும் உறவாடுவார்கள்..!! இவனது வேகம் அவளுக்கு பிடிக்கும்.. அவளது வியர்வையும் இவனுக்கு மணக்கும்..!! நெற்றிக் குங்குமம் ஈரத்தில் கரையும்.. மெத்தை மல்லிகை மோகத்தில் கசங்கும்..!! உஷ்ணம் கொண்டு உடல்கள் தகிக்கும்.. உச்சம் கண்டும் தேடல்கள் தொடரும்..!! பகல்ப்பொழுதுகளே பகையாகிப் போகும்.. இருமனங்களுமே இரவுக்கென ஏங்கும்..!!

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. வா..!!”

தனியாக அழைத்து செல்வாள்.. தனது அடிவயிறு திறந்து காட்டுவாள்..!! புரியாமல் இவன் விழிக்க.. ‘புத்தூ’ என்று தலையில் தட்டுவாள்..!! கருத்தரித்த செய்தியை காதோரமாய் கிசுகிசுப்பாள்..!! ஆனந்தத்தில் இவன் திளைத்துக் கொண்டிருக்க.. அவளும் அதே ஆனந்தத்தில் விழைந்த கண்ணீரோடு..

“தேங்க்ஸ்டா..!!” என்று பைத்தியம் போல் உளறுவாள்.

வயிறு பெரிதாகிப்போக அவள் இடுப்பு பிடித்து நடப்பாள்.. கர்ப்பிணி மனைவிக்கு இவன் கால் அமுக்கி விடுவான்..!! அகம் இருப்பவனை நெஞ்சில் சாய்த்து அவள் தாலாட்டுவாள்.. அடம் பிடிப்பவளை கெஞ்சிக் கூத்தாடி இவன் சாதமூட்டுவான்..!!

“கண்ணு மூக்குலாம் அப்படியே உன்னை மாதிரிதான்..!!”

களைத்துப்போன உடலும், தளர்ந்துபோன குரலுமாய் அவள் சொல்ல.. இவன் கலங்கிப்போன விழிகளுடன், கையிலிருக்கும் குழந்தையை விடுத்து.. மனைவியின் நெற்றியிலேயே முதலில் முத்தம் வைத்திடுவான்..!!

2 Comments

  1. Admin , super storie

    Uyirulla oru love

  2. Ethu vara yentha storykum comments pannathu ella etha en 1st Comment please “Full story sikiro podunga” please ?

Comments are closed.