எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்த அசோக்.. ஒருசில வினாடிகள் மனோகரின் முகத்தையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! அப்புறம் ‘ஹ்ம்ம்ம்ம்..’ என்று ஒரு சலிப்பு பெருமூச்சுடன் முகத்தை திருப்ப.. அவனுடைய பார்வையில் எதேச்சையாக அந்த ஆளுயரக்கண்ணாடி பட்டது..!! அந்த வீட்டு ஹாலின் ஒரு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடி.. அவனுக்கெதிரே தூரத்தில் இருந்த கண்ணாடி.. சற்றுமுன்பாக குளித்து முடித்து வந்த மீரா, அசோக்கின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாளே.. அதே ஆளுயரக்கண்ணாடி..!! அந்த கண்ணாடியில் இப்போது.. அடுத்த அறையில் பதுங்கியிருந்த மீராவின் பிம்பம் விழுந்திருந்தது.. அந்த பிம்பம் அசோக்கின் கண்களில் விழுந்திருந்தது..!!!!

மீராவின் பிம்பம் என்றால்.. அவளுடைய முழு பிம்பமும் அல்ல.. சுவற்றோடு ஒடுங்கியிருந்த அவளது பக்கவாட்டு பிம்பம்..!! அவளுடைய முகம் தெரியவில்லை..!! சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்த ஒரு இளம்பெண் ஒருத்தி.. பக்கத்து அறையில் பதுங்கியிருக்கிறாள் என்கிற அளவில்தான்.. அந்த பிம்பத்தில் இருந்து அறிந்துகொள்ள முடிந்தது..!! அதை கவனிக்க நேர்ந்த அசோக்கின் முகத்தில் ஒருவித திகைப்பு..!!

“ஸ்..ஸார்.. வீட்ல யாரும் இல்லைன்னு சொன்னீங்க..??”

“ஆ..ஆமாம்..!!”

“உ..உள்ள யாரோ இருக்காங்க ஸார்..!!” அசோக் அவ்வாறு திணறலாக சொல்ல, இப்போது மனோகரிடம் ஒரு பதற்றம்.

“இ..இல்லையே.. யாரும் இல்ல..!!”

“இருக்காங்க ஸார்.. பக்கத்து ரூம்ல யாரோ இருக்காங்க..!!”

“ஹலோ.. நான்தான் யாரும் இல்லைன்னு சொல்றேன்ல.??” மனோகர் இப்போது டென்ஷனானான்.

“இல்ல ஸார்.. இருக்காங்க..!!”

அசோக் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைவது மாதிரி முன்னே நகர.. மனோகர் அவனது மார்பில் கைவைத்து அவனை பின்பக்கமாக தள்ளிவிட்டான்..!!

“ப்ச்.. சொன்னா கேட்கமாட்டீங்களா..?? பிரச்னை பண்றதுக்குனே வந்திருக்கீங்களா.. இப்போ போறீங்களா, இல்ல போலீசை கூப்பிடவா..??”

மனோகர் அந்தமாதிரி எகிறவும்.. இப்போது சாலமன் இடையில் புகுந்தான்..!! தடுமாறிய அசோக்கை தாங்கிப் பிடித்துக்கொண்டவன்.. மனோகரை ஏறிட்டு சற்றே சாந்தமான குரலில் சொன்னான்..!!

“ஸார் ஸார்.. விடுங்க ஸார்.. அவன் ஏதோ தெரியாம..!! ஒன்னும் ப்ராப்ளம் இல்ல ஸார்.. நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாதிங்க.. நாங்க கெளம்புறோம்.. ஓகேவா..?? ஏய்.. வாடா..!!”

அசோக்கின் கையைப்பற்றி அவனை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு சாலமன் கிளம்ப.. மனோகர் ‘படார்ர்…’ என கதவை அறைந்து சாத்தினான்..!! அவசரமாய் திரும்பி நடந்து அடுத்த அறைக்கு சென்றான்..!! கவலையும், பரபரப்பும் தொற்றிக்கொண்டவளாய் எதிரே வந்த மீராவிடம்.. சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்..!!

“யார் அவனுக.. சரியான லூசுப்பசங்களா இருக்கானுக..??”

மீரா அவனையும் அவனது கேள்வியையும் மதியாமல்.. அவனை கடந்து எதிர்ப்புறம் சென்றாள்.. அவளுடைய படுக்கை அறைக்குள் நுழைந்தாள்..!! ஜன்னலை நெருங்கியவள்.. சற்றே பதுங்கிக்கொண்டு.. திரைச்சீலையை விலக்கி வெளிப்புறம் பார்வையை வீசினாள்..!! அந்த வீட்டின் நுழைவாயிலை திறந்து கொண்டு வெளியேறுகிற.. சாலமன் மற்றும் அசோக்கின் முதுகுப்புறம் தெரிந்தது.. அவர்கள் பேசிக்கொண்டது கூட மீராவின் காதில் தெளிவாக விழுந்தது..!!

“ஏண்டா இப்படி பண்ற..??” சாலமன் சலிப்பாக கேட்டான்.

“ப்ச்.. உள்ள ஒரு பொண்ணு இருக்கா மச்சி.. நான் பாத்தேன்.. கண்ணாடில நல்லா தெரிஞ்சது.. கன்ஃபார்ம்ட்..!!”

“ஐயே.. அது ஏதாவது ஐட்டமா இருக்கும் மச்சி..!!”

“என்னது.. ஐட்டமா..??”

“ஆமாண்டா..!! பொண்டாட்டி ஊர்ல இல்லைன்றான்.. ஜாலியா ஜல்ஸா பண்ணலாம்னு ஏதாவது ஐட்டத்தை கூட்டிட்டு வந்திருப்பான்..!! சிவ பூஜைல கரடி மாதிரி உள்ள நொழைஞ்சதும் இல்லாம.. நோண்டி நோண்டி கேள்வி வேற கேட்டுட்டு இருக்குற நீ..!! அந்த ஆளை பாத்தியா.. எப்படி டென்ஷன் ஆயிட்டான்னு..?? நல்லவேளை.. அவன்பாட்டுக்கு கோவத்துல கையை நீட்டிருந்தான்னா என்ன பண்றது..??”

“ம்ம்..?? பதிலுக்கு நாமளும் நீட்ட வேண்டியதுதான்..!!”

“பாத்தியா.. இந்த லொள்ளுக்குத்தான் நான் உன்கூட வரமாட்டேன்னு சொன்னேன்..!! ஏண்டா இப்படிப்போட்டு டார்ச்சர் பண்ற..?? சொன்னா கேளு மச்சி.. இதுலாம் வேலைக்காவாது..!!”