எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 14 57

மனோகர் சென்று கதவை திறக்க.. வெளியே நின்றிருந்த அசோக்கும், சாலமனும் அவனது பார்வைக்கு வந்தனர்..!!

“எஸ்..!! யார் வேணும்..??” மனோகர் இயல்பாக கேட்டான். சாலமன் ஒருவித இளிப்புடன் அவனுக்கு பதில் சொன்னான்.

“ஹலோ ஸார்..!! நாங்க ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல இருந்து வர்றோம்..!!”

“ஸென்ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்டா..??” மனோகர் முகத்தை சுளித்தான்.

“இ..இந்த.. மக்கள்தொகைலாம் கணக்கு எடுக்குறவங்க ஸார்..!!”

“அது ஸென்ஸஸ்ல..??”

“ஓ.. ஆமால்ல..?? ஸாரி ஸார்.. நான் இங்க்லீஷ்ல கொஞ்சம் வீக்கு..!!”

“ம்ம்..!! என்ன விஷயம்னு சொல்லுங்க..!!”

“அ..அது ஒன்னும் இல்ல ஸார்.. சப்பை மேட்டரு..!! ம்ம்ம்.. உங்க வீட்டுல யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க கொஞ்சம் பாக்கலாமா..??”

“என்னது..????”

“அஅஅ.. ஐ மீன்.. யாரார்லாம் இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா..??”

சற்றுமுன் அலுவலகத்தில் பிரின்டவுட் எடுத்து வைத்திருந்த சில காகிதங்களையும்.. ஒரு பதிவேட்டினையும்.. ஒரு மூடி திறக்கப்பட்ட பேனாவையும்.. கையில் வைத்துக்கொண்டிருந்த சாலமன்.. முகத்தையும் இப்போது மிக சீரியஸாக மாற்றிக்கொண்டிருந்தான்..!! அசோக் எதுவும் பேசமால்.. முகத்திலும் எந்த சலனமும் காட்டாமல்.. அவனுக்கு அருகே அமைதியாக நின்றிருந்தான்..!! அவர்கள் இருவரையும் ஓரிரு வினாடிகள் ஏற இறங்க பார்த்த மனோகர்.. பிறகு தொண்டையை கனைத்துக்கொண்டு பட்டென சொன்னான்..!!

“நான் மட்டுந்தான்..!!”

“என்ன ஸார்.. இவ்வளவு பெரிய வீட்ல நீங்க மட்டுந்தானா..??”

“வொய்ஃப் ஊருக்கு போயிருக்கா..!!”

“ஓ..!!”

பெயர், வயது விவரங்களை மனோகர் சொல்ல.. சாலமன் அதை பதிவேட்டில் குறித்துக்கொண்டான்.. அல்லது.. பதிவேட்டில் குறித்துக் கொள்வதுமாதிரி பாவ்லா செய்தான்..!! குறித்து முடித்து நிமிர்ந்தவன்..

“அப்புறம்..??” என்றான் மனோகரிடம்.

“அப்புறம் என்ன..??”

“வே..வேற யாரும் இல்லைங்களா..??”

“வேற யாரும்னா..??” மனோகரின் கேள்விக்கு இப்போது அசோக் பதில் சொன்னான்.

“ஒரு.. இருபதுல இருந்து இருபத்தஞ்சு வயசுக்குள்ள.. செவப்பா, ஸ்லிம்மா, அழகா.. ஃப்ரீயா லூஸ் ஹேர்லாம் விட்டுக்கிட்டு.. அப்டிலாம் யாரும் உங்க வீட்ல இல்லைங்களா..??” அசோக் கூலாக கேட்க, மனோகர் அவனை முறைத்தான்.

“இதுலாம் கணக்கெடுக்க சொல்லிருக்காங்களா.. உங்க ஸென்ஸ்…ஸெக்ஸ் டிப்பார்ட்மண்ட்ல..??” என்று கிண்டலாக கேட்டான். இப்போது சாலமன் இடையில் புகுந்து..

“அ..அது.. அது ஆக்சுவலா.. இது நாங்களா..” என்று உளறலாக ஆரம்பித்து,

“ப்ளீஸ் ஸார்.. சொல்லுங்க.. அப்படி யாராவது இருக்காங்களா..??” என்று கெஞ்சலாக முடித்தான். மனோகர் இப்போது மீண்டும் ஒருமுறை இருவரையும் முறைத்துப் பார்த்துவிட்டு,

“இல்ல.. அப்படி யாரும் இங்க இல்ல..!!” என்றான்.

“அப்படின்னா ஒருவேளை..” என்று அசோக் மீண்டும் ஆரம்பிக்க, இப்போது பொறுமையிழந்து போன மனோகர்,

“ஹலோ.. ரெண்டு பேரும் கொஞ்சம் எடத்தை காலி பண்றீங்களா.. எனக்கு நெறைய வேலை இருக்கு..!!” என்று எரிச்சலாக சொன்னான்.