நாளைக்கு நீ ஏதாவது இன்னிக்கி நடந்த சம்பவத்தை வெச்சி என்னை கொல்ல பிளான் போட்டா கூட அடுத்த 24 மணி நேரத்துல ராகவ்க்கு விஷயம் தெரிய வரும். அப்போ கண்டிப்பா நீயும் என் கூட சொர்கத்துக்கு.. ச்சீ ச்சீ… கண்டிப்பா நரகத்துக்கு பயணம் செய்துக்குட்டு இருப்ப.. இஸ்ஹ்ஹ்…(ஒரு பெருமூச்சு விட்டாள்..) உடம்பை பார்த்துக்கோ. சமயம் வரும்போது ராகவ் கிட்ட எடுத்து சொல்லி உன்னை காப்பாத்த பார்க்குறேன். good bye.” – என்று சொல்லி ஆடைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு தனது handbag உள்ளே அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு வெளியேறினாள். அவளது IOFI Executive Benz கார் வருவதற்கு முன்கூட்டியே phone செய்திருந்தாள். கார் வந்ததைப் பார்த்து அதனுள் ஏறி அமர்ந்தாள். “என்னமா? இந்த நேரத்துக்கு இங்கே?” – என்று டிரைவர் தாத்தா கேட்க.. “ஒன்னும் இல்ல தாத்தா, போர் அடிச்சுது, அதான் இங்கே ஒரு பையன் கிட்ட கொஞ்சம் விளையாடிட்டு போகலாம்னு வந்தேன். உங்களுக்கு வயசாகிடுச்சி, நீங்க விளையாட மாட்டீங்க இல்ல அதான்…. ஹா ஹா ஹா..” என்று சத்தமாக சிரிக்க “உன் கிட்ட கேள்வி கேட்டது என் தப்புமா..” என்று நொந்து கொண்டு வண்டியை வேகமாய் ஒட்ட ஆரம்பித்தார் தாத்தா. “Raghav & Sangeetha I have certain things to discuss with you guys” என்று sms அனுப்பிவிட்டு காரில் ஆயாசமாக சாய ஆரம்பித்தாள் சஞ்சனா. குமார் hospitalலில் சேர்ந்து ஒரு நாள் முடிவடைந்திருந்தது. அவனுக்கு ஆபரேஷன் செய்து முடித்து நினைவும் திரும்பி இருந்தது. அயர்ந்த கண்களுடன் பார்க்க ஆரம்பித்தான். எதிரில் சங்கீதா பளிச்சென அவனது கண்களுக்கு தெரிந்தாள்.
ஒன்றும் பேசாமல் அப்படியே மெளனமாக இருந்தான். எப்படி இருக்கு குமார்? நீ எப்போ கண் முழிப்பன்னு காத்திட்டு இருந்தேன். மனசுல ஏதாவது போட்டு குழப்பிகாத? நீ hospital க்கு வர நிலைமைக்கு போய்டன்னு நான் எதுவும் உன்னை பத்தி தப்பா நினைக்கல, எல்லாருக்கும் மனசளவுல ஒரு பிரச்சினை இருக்கும், நீயும் மனுஷன் தானே, இனிமேலாவது என் கூடையும் பசங்க கூடையும் சந்தோஷமா இருக்க முயற்சி பண்ணு குமார். – என்று முற்றிலும் தன்னுடைய எண்ணங்களுக்கு முக்கியத்துவம் குடுக்காமல் குமாருக்கு ஆறுதலாய் பேசினாள் சங்கீதா. இன்னும் மௌனம் காத்தான் குமார். உள்ளே இருந்த அட்டெண்டர் ஒருவர் குமார் குத்துகல்லு மாதிரி அமர்ந்திருப்பதைப் பார்த்து “அய்யே… யோவ்… ஒரு நாள் முழுக்க அந்த அம்மா செரியா சாப்பிட கூட செய்யல, அழுதுகிட்டே இருந்துச்சி.. இவ்வளோ பேசுதே ஏதாவது பதில் சொல்லேன்.” – என்று சொல்லும்போது குமாரின் கண்கள் அவனையும் முறைத்தது சந்கீதாவையும் சேர்த்து முறைத்தது. என்னதான் இப்போது பேசினாலும் அவனது மனதில் எதையும் ஏற்கும் நிலையில் அவன் இல்லை. எதேச்சையாக ராகவ் உள்ளே நுழைந்தான். குமாருக்கு ராகவைப் பார்த்ததும் ஒரு விதமான அதிர்ச்சி.. reliance கம்பனியில் வேலை செய்யும் ஒருவன் திடீரென அம்பானியைப் பார்த்தால் எப்படி தோன்றுமோ அதற்கு இணையான எண்ணம் அவனது மனதில் தோன்றியது. “சங்கீதா are you okay?..” – என்று கேட்டவன் திடீரென குமார் முழித்திருப்பதைக் கண்டு “ஹலோ குமார்…. how are you feeling?” என்று கேட்டான். வேலையில் உயர் பதவியில் இருப்பவன் என்று எண்ணி மரியாதை நிமித்தமாக ராகவ்கு “நல்லா இருக்கேன் என்று பதில் அளித்தான்” மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ராகவ் வருவதற்கு முன்பு அங்கே சங்கீதா என்ன பேசினாள் என்றும், அதற்கு குமாரின் reaction என்ன என்பதெல்லாம் ராகவ்கு தெரிய வாய்ப்பில்லை. ராகவ் இருக்கும்போது எதுவும் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாமல் வீட்டிற்கு சென்று தயார் ஆகி மீண்டும் மாலை வந்து பொறுமையாய் குமாரிடம் பேசலாம் என்று எண்ணி இருந்தாள். முகம் கழுவி தலை வாரி தாயாரகும் போது ராகவ் அவள் கிளம்புகிறாள் என்று எண்ணி “நான் வேணும்னா drop பண்ணிடவா?” என்று கேட்க குமாரின் முகம் மாறியது. குமார் இருப்பதை எண்ணி அவனுடைய கம்பெனியின் பாஸ் என்கிற பதவிக்காக மரியாதையாக ராகவை வாங்க போங்க என்று அழைத்து பேசினாள் சங்கீதா. “நீங்க போற வழி வேற, என்னை இறக்கிட்டு போக நேரம் இருக்குமா?” – சாதாரணமாக தான் கேட்டாள் சங்கீதா. “சார் தான் இறக்கி விடுறேன்னு சொல்லுறார் இல்ல, அப்புறம் என்ன கேள்வி? எங்க கூப்டாலும் போக வேண்டியதுதானே?” – என்று குமார் குதர்க்கமாக பேசினான். அவனது வார்த்தைகளின் அர்த்தத்தை சங்கீதா நன்றாக புரிந்து கொண்டாள். ராகவ், தான் ஏன் இந்த கேள்வியைக் கேட்டோம் என்று எண்ணி சங்கடப்பட்டான்.
Next post please
திர்லீங் ரியலி சூப்பர்