இடை அழகி மேடம் சங்கீதா 11 64

உடனடியாக கை சட்டையை மடக்கிக் கொண்டு ஆவேசமாக எழுந்தான்.. அப்போது உடனடியாக சங்கீதா ராகவின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். அவன் வாயலதானே என்னை மானபங்கம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்.. நிஜத்துல செய்துட்டானா? அப்படி ஒரு எண்ணத்தோட வந்தா அவனை நானே ரெண்டா வெட்டிடுவேன்.. யாருடைய உதவியும் எனக்கு தேவை படாது.. இப்போ நீ என்ன பண்ண போற? அவன கொல்ல போறியா?… அப்படியெல்லாம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் உட்காராத…. அப்புறம் என்னால உன்னை அங்க வந்து பார்க்க முடியாது.” – கோவத்தில் சீறினாள் சங்கீதா. “அக்கா.. அவன் அன்னிக்கி பேசின பேச்சுக்கு நான் ஏற்கனவே நிறைய குடுத்துட்டேன்கா” – மெதுவாக சஞ்சனா சங்கீதாவிடம் பேசியதைக் கேட்டுவிட்டு “என்ன குடுத்த?… எண்ணத்த குடுத்துட்ட?… சும்மா நாலு வார்த்தை திட்டிட்டு வந்திருப்ப.. அவளோதானே?.. அவனுக்கு அதெல்லாம் பத்தாது..” என்று ராகவ் கத்த.. அதற்கு மேல் வாய் மூடி இருந்த சஞ்சனா பொங்க ஆரம்பித்தாள். “போதும் நிறுத்துடா.. சும்மா பெரிய இவனாட்டம் கத்துற.. நான் ஒன்னும் அவளோ சொரணை கேட்ட ஜென்மன் இல்ல, உன்னால அவனுக்கு வெளி காயம் மட்டும்தான் குடுக்க முடியும், ஆனா நான் அன்னிக்கி அவனுக்கு வெளிக்காயம் மட்டும் இல்ல, உள்காயமும் குடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு ஆம்பளையா உன்னால குடுக்க முடியாத அளவுக்கு அன்னிக்கி நான் அவனுக்கு திருப்பி குடுத்து இருக்கேன். கிட்டத்தட்ட உரிச்ச கோழியாக்கி வேக வெச்சி அனுப்பி இருக்கேன். அவன் குணமாகி எழுந்திருக்கவே கொஞ்ச மாசமாகும்.” – சொல்லும்போது அன்று மெளனமாக உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை எண்ணி லேசாக கொஞ்சம் அழ ஆரம்பித்தாள் சஞ்சனா. “சங்கீதா மெதுவாக சஞ்சனாவின் கைகளை பிடித்து, “நிஜமாவா?” என்று பாவனை செய்வது போல கேட்க “ஆமாம் கா….” என்று மெதுவாக சொல்ல “நீதாண்டி என் தங்கச்சி” என்று சொல்லி அவளை தன் தோளில் சாய்த்தாள் சங்கீதா. “நீ அழாதடா, எவளோ பெரிய காரியம் பண்ணி இருக்கே!.. நிஜமாவே சில நேரத்துல எப்படிதான் இந்த முட்டாள் CEO ஆனான்னு எனக்கு சந்தேகம் வரும். பொறுமையே இல்லாத ஜென்மம்…. ச்ச….” – சஞ்சனாவை தோளில் சாய்த்து ராகவை பொய்க் கோவத்துடன் முறைத்தாள் அவனது சரா.. “கரெக்டா சொன்னீங்கக்கா.. எனக்கு கூட அப்போ அப்போ அது தோணும்….” – கண்களைத் துடைத்துக் கொண்டு ராகவை முறைத்தாள் சஞ்சனா…. “ஆமா, பொறுமையா இருக்குறதைப் பத்தி பேங்க் மேனேஜர் பேசுறாங்க..” என்று மெதுவாக உள்ளுக்குள் முனு முணுத்துக் கொண்டான் ராகவ்…. “என்ன சொன்ன?” – சொடக்கு போட்டு கேட்டாள் சரா.. “ஒன்னும் இல்ல…. எனக்கு பொறுமை கம்மின்னு நானே சொல்லிக்கிட்டேன்….” – சங்கீதாவின் கேள்விக்கு, ராகவ் அசடு வழிந்து அடிபணிந்து பதில் சொன்னதைப் பார்த்து “ஹா ஹா.. உனக்கு சங்கீ அக்காதான் டா கரெக்ட்….” என்று ஈர விழிகளுடன் இருக்கும்போதே குபுக்கென சிரித்தாள் சஞ்சனா..

மூவரும் பேசி முடித்து சற்று அமைதியாய் இருக்கும்போது ராகவ் செல் ஃபோனில் “வேக்.. வேக்…” என்று சத்தம் வந்தது… – வேறு யாரும் அல்ல, அவனது நண்பன் Mr.வாத்து தான்!.. அமைதியாக இருக்கும்போது அந்த வித்யாசமான சத்தம் கேட்டு சங்கீதாவும், சஞ்சனாவும் புருவம் உயர்த்தி சிரித்தார்கள்.. அவனது நண்பனின் ஃபோன் கால் எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ், அப்போது கார்த்திக் நாளை விடிகாலை வருவதாக சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்தான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து “ஹ்ம்ம்… நாளைக்கு ஒரு கிறுக்கன் வரான், நாம நாலு பேரும் எங்கயாவது ஒரு ஒளடிங் போய்டு வரலாம்.” என்று உற்சாகமாய் சொன்னான் ராகவ். “கிறுக்கனா? யாரு?” – என்றாள் சஞ்சனா ஸ்வாராஸ்யமாக, அந்த ஸ்வாராஸ்யத்தை கவனிக்க தவறவில்லை சங்கீதா….

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.