இடை அழகி மேடம் சங்கீதா 11 64

இதுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன், ஆனா அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு.”….சஞ்சனா பேசிக்கொண்டிருக்க வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.. ராகவ் அலுவலகத்தில் இருந்து கழுத்தில் கட்டின டை கூட கழட்டாமல் அப்படியே அங்கே வந்தடைந்தான். சஞ்சனாவையும் ராகவையும் பார்த்ததில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. மாடியில் மஞ்சள் வெயிலில் குழந்தைகள் விளையாட மூவரும் சூடாக டீ அருந்தி கொண்டே ஜில்லென்ற காற்றில் பேச தொடங்கினார்கள். சஞ்சனா மித்துனிடம் கறந்த விஷயங்களை ராகவிடமும் சந்கீதாவிடமும் பகிர்ந்து கொண்டாள். அதாவது.. அலுவலகத்துக்குள்ளேயே, குமார் ஃபாக்ட்ரி கழிவுகளில் இருந்து சில வஸ்துக்களை மூட்டை கட்டி ஒரு லாரியில் தினமும் இரவு துரையோட லெபாரேட்ரிக்கு அனுப்பி வைப்பதும், அதற்கு அடுத்த நாள் காலை அங்கிருந்து IOFI வளாகத்துக்குள் அதே லாரியில் ஃபாக்ட்ரிக்கு தேவையான சாமானுடன் லெபாரேட்ரியில் ப்ராசஸ் செய்யப்பட்ட சில பொருட்கள் வருவதற்கு க்லியரன்ஸ் வாங்கித் தருவது மித்துனின் வேலை என்று ஒவ்வொன்றும் விலாவரியாக எடுத்து சொன்னாள். சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்து “எப்படி அவன் துரைக்கு வேலை செய்ய ஆரம்பிச்சான்? எப்படி அவனுக்கு துரை கான்டாக்ட் கிடைச்சிது? என்றான் ராகவ்.. “அதை… நா…. வந்து… அது…” – சஞ்சனா தயங்கினாள்.. “என்ன வந்து போயி.. சொல்லு..” – கேட்க்கும்போதே ராகவின் முகம் கொஞ்சம் சிவந்தது. அது சஞ்சனாவுக்கு லேசான பயத்தை உண்டாக்கியது. “நான் சொல்லுவேண்டா, ஆனா நீ கோவப்படக் கூடாது.. பொறுமையா கேட்கனும். சரியா? இந்த நிமிஷம் உனக்கு பொறுமை ரொம்ப முக்கியமா தேவைப் படும்… அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். புரிஞ்சிக்கோடா.. நீ பார்க்குற பார்வைய பார்த்தா எனக்கு சொல்ல பயமா இருக்கு….. அக்கா..” – என்று சொல்லி சந்கீதாவைப் பார்த்தாள் சஞ்சனா.. “நான் கோவப்படுற அளவுக்கு அப்படி என்ன இருக்குது?” – கண்களை இருக்கியவாறு கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ். அப்போது சங்கீதா குறுக்கிட்டாள். “நீ சொல்லுமா, யாரும் ஒன்னும் கோவப்பட மாட்டாங்க….” – சற்று அழுத்தமாக சொல்லி, ராகவை நோக்கி ஓரக்கண்ணால் லேசாக முறைத்து “பேசாமல் இரு” என்று சொல்லாமல் சொன்னாள் சங்கீதா. அந்த பார்வைக்கு உண்மையில் கொஞ்சம் அடங்கினான் ராகவ். “அவனுக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து நிறைய மிரட்டல் கடிதாசி வரும்னு சொல்லி இருக்கான். ஒரு நாள் அவன் ஒரு நைட் க்லப்பில் நல்ல போதையில் சீட்டு விளையாடிட்டு இருக்கும்போது யாரோ உன்னை சம்மந்த படுத்தி அவன் கிட்ட பேசும்போது அவன் உன்னுடைய லாப கணக்குல வர பணம் அப்போ அப்போ உனக்கே தெரியாம திருடுறதும்.. அது உனக்கு தெரியாதுன்னும் சொல்லி இருக்கான்.. அப்புறம்… – மேலே சொல்ல தயங்கினாள் சஞ்சனா..

“அப்புறம்?….” – மீண்டும் ராகவின் முகம் அவளின் பதிலை கூர்ந்து கவனித்தது…. சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.. “உன்னை பத்தியும் அக்காவைப் பத்தியும் தப்பா பேசி இருக்கான். அதை எப்படியோ துரை அவன் செல் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி வெச்சி உன் கிட்ட அவனை போட்டு குடுத்துடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான், அந்த கோழையும் உனக்கு பயந்துதான் இந்த காரியத்துல இறங்கி இருக்கான்.” – என்று மூச்சு விடாமல் சீக்கிரமாக சொல்லி முடித்தாள் சஞ்சனா.. “என்ன தப்பா பேசினான்?” – ராகவின் முகம் உண்மையில் நன்றாகவே சிவந்தது. “அது.. வந்து.. இதை பாரு..” – என்று தனது செல் ஃபோனில் அன்று இரவு அவனுடய ஃபோனில் இருந்து காப்பி செய்த வீடியோவை காமித்தாள் சஞ்சனா… சங்கீதாவும் அதை ராகவுடன் சேர்ந்து பார்த்தாள். வீடியோவில் மித்துன் காமிக்கும் முகபாவனைகளும், பேச்சும் கேட்கும்போது ராகவ் அவனது இருக்கையின் கைப்பிடியை இறுகி பிடித்தான். தனது அக்கவுன்டில் இருந்து காசு திருடுவதற்கு கூட அவன் அதிகம் கோவப் படவில்லை… அதன் பிறகு அவன் சந்கீதாவைப் பற்றியும் சஞ்சனாவைப் பற்றியும் பேசிய வார்த்தைகளை கேட்க கேட்க உண்மையில் ரகாவ்கு பொருக்க முடியவில்லை..

Updated: October 13, 2022 — 5:07 pm

2 Comments

  1. Next post please

  2. திர்லீங் ரியலி சூப்பர்

Comments are closed.