கிஷோர் எதுவும் சொல்லாமல் சோகமாக குனிந்து கொண்டு தரையை நகத்தால் சொரண்டி கொண்டிருந்தான்..
அம்சவேணி: அட!! என்னடா பொம்பள பிள்ள மாதிரி நகத்தால தரையை சொரண்டிட்டு இருக்குற.. ஆம்பள பையன் தைரியமா அம்மா இது தான் விஷயம் ன்னு சொல்ல வேண்டாமா..
கிஷோர்: (விட்டா அம்மா என்னை ரொம்ப கேவலம் படுத்திரும் ன்னு நினைச்சுட்டு) அம்மா சொல்றதுக்கு லாம் ஒன்னும் இல்ல.. ஆனா அது சொல்லியும் இப்போ எதுவும் ஆக போறது இல்ல.. அதனால இத இப்டியே விட்று..
அம்சவேணி: முதல்ல என்னனாச்சும் சொல்லு டா.. அப்புறம் விடலாமா வேண்டாமா ன்னு அம்மா சொல்றேன்.. இப்டி ஒரு அம்மா யாருக்கும் கிடைக்க மாட்டாங்க.. ஓவரா ஸீன் பண்ணாம சொல்லு.
கிஷோர்: இன்னைக்கு தான் மா பாத்தேன்.. பாத்து பேசுன வரைக்கும் நல்ல பொண்ணு மாதிரி தான் இருக்கு.. செம அழகு செம ஹோம்லி.. நீ பாத்தா உனக்கு பிடிக்கும்.. ஆனா இதெல்லாம் எதுக்கு அந்த பொண்ணு வேற யாரையோ லவ் பண்ணுது கேள்வி பட்டேன்..
அம்சவேணி: என்னது கேள்வி பட்டியா?? அந்த பொண்ணு உங்கிட்ட ஏதாச்சும் சொல்லுச்சா டா??
கிஷோர்: இல்லம்மா அந்த பொண்ணு என்னை விரட்டி விட்றதுலயே குறியா இருந்துச்சு.. இதுல நான் எப்படி இதெல்லாம் கேக்குறது..
அம்சவேணி: அப்போ அந்த பொண்ணு எதுவும் சொல்லல.. வேற யாரோ சொல்லிருக்காங்க அப்டிதான டா.. மத்தவங்க சொல்றது லாம் நீ பெருசா எடுத்துக்காத.. நீ அந்த பொண்ணு கிட்ட பேசு நல்ல முறைல.. ஒரு நேரம் வரும் போது இதெல்லாம் பத்தி கேளுடா.. ஆனா ஒன்னு நீ அந்த பொண்ணு பத்தி மனசுல ஆசை எதுவும் வலத்துக்க கூடாது.. எனக்கு என் புள்ள முக்கியம்.. சரியா??
கிஷோர்: (முகத்தில் சிரிப்புடன்) சரிம்மா பேசி பாக்குறேன்.. அம்மா உன்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் தான் மா கொஞ்சம் நிம்மதியாவும் இருக்கு சந்தோஷமாவும் இருக்கு.. ஆனா எப்டிமா நீ (சிறிது ஆச்சரியத்துடன்)
அம்சவேணி: என்னடா எப்டிமா நீ..