இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 176

கிஷோருக்கு அவனுக்குள்ள தூங்கிட்டு இருந்த தாழ்வு மனப்பான்மை புத்தி ராகுலை பாத்ததும் மறுபடியும் முழிச்சுருச்சு.. கிஷோர் அவனை தலைல இருந்து கால் வரைக்கும் உத்து பாத்து ஒன்னு ஒன்னா தன்னோட ஒப்பிட்டு கொண்டிருந்தான்..

அவன் தலைல ஹேர் கலரிங் ஆனா நம்ம தலைல ஒன்னும் இல்ல..
அவன் முகத்துக்கு வாரா வாரம் பேஸ் ப்ளீச்சிங் ஆனா நம்ம மூஞ்சிக்கு வெறும் ponds பவுடர் தான்
அவன் போட்ருக்குற பாண்ட் ஷர்ட் லாம் பிராண்டட் ஆனா நம்ம போட்ருக்குற சட்டை என்ன பிராண்ட் ன்னு கூட தெரியல .
அவன் போட்ருக்குற perfume பத்து அடி தூரம் வரைக்கும் மணக்குது ஆனா நம்ம போட்ருக்குற perfume கொசு மருந்து வாசம் தான் வருது.
அவன் போட்ருக்குறது Woodland Shoes ஆனா நம்ம போட்ருக்குறது சரவணா ஸ்டோர் ல வாங்குன ஐந்நூறு ரூபா shoe..

சரி இது போதும் ன்னு நினைக்குறேன் கிஷோர் ஐ விட்டா ஒரு நாள் முழுக்க ஒப்பிட்டு பாத்துட்டே இருப்பான்.. அதுசரி “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்து பார்த்து நிம்மதி நாடு” ன்னு சொன்ன கண்ணதாசனோட வரிகள் அவன் காதுக்கு எட்டுன அளவு அவன் மூளைக்கு எட்டலை போல.. அவனோட வாழ்க்கைல வர போற சோதனைக்கு மூலக்காரணமே இந்த புத்தி தான் ன்னு அவன் உணரவும் இல்ல.

இவன் இப்டி பாத்து யோசிச்சுட்டே இருக்க அப்போதான் இன்னொன்னு கவனிச்சான். இவ்ளோ நேரம் அவன் கூட நின்னு பேசிட்டு இருந்த பொண்ணு வேற யாருமில்ல அவனோட கலையை திட்டுன அதே பொண்ணு தான். ராகுல் உம் அந்த பொண்ணும் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த விதம் அவங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ன்னு தெளிவா காட்டுச்சு.. யாருக்கு தெரியும் அதுக்கு மேல கூட இருக்கலாம்..

இங்க ராகுல் பத்தி பாக்கலாம்.. அவனை பத்தி சொல்லனும்னா கோடீஸ்வரன் ன்னு சுருக்கமா சொல்லலாம்.. சென்னை ல 3 சூப்பர் மார்க்கெட், ஒரு ட்ராவெல்ஸ் 5 லாரி ஓடுது.. அது போக ரெண்டு மொபைல் ஷோ ரூம்ஸ்.. இது எல்லாத்துக்குமே மரகதம் ன்னு அவனோட அம்மா பேரு தான் வச்சாரு அவனோட அப்பா குரு மூர்த்தி.. பாவம் ராகுல் க்கு 20 வயசு இருக்கும் போது இறந்துட்டாரு சரியா 6 வருஷம் முன்னாடி.. இப்போ அவனுக்கு வயசு 26 அது தான் நம்ம கதாநாயகன் கிஷோரோட வயசும். இது எல்லாமே ராகுல் ஓட அண்ணன் சத்யா தான் பாத்துக்குறான்.. அதனால ராகுலும் பிசினெஸ் டென்ஷன் எதுவும் தலைக்கு ஏத்த வேண்டாம் ன்னு ஒரு MNC கம்பெனி ல வேலை பாக்குறான் கிஷோருக்கு பக்கத்து சீட்டுல தான்..