கிஷோர்: புரியல என்னது அது?
கலை: இந்த மால் ல first floor ல இருக்குற food court ல restaurant பேரு அது..
கிஷோர்: சரிங்க அது ஏன் சொல்றிங்க (பேக்கு போல புரியாம மண்டைய சொரிந்து கொண்டே கேட்டான்)
கலை: பிரியாணி தந்தூரி சிக்கன் காம்போ
கிஷோர்: என்னங்க சொல்றிங்க ஒண்ணுமே புரியல எனக்கு
கலை: மாங்கா!! மாங்கா!! பேசணும் ன்னு சொன்னில்ல சாப்டுட்டே பேசலாம்.. நீ தான் வாங்கி தர்ற..
கிஷோர்: (வாயெல்லாம் பல்லாக) இல்லங்க நான் பேசலாமா ன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லாம ஹோட்டல் பேரு லாம் சொன்னதுனால சரியா புரியல..
கலை: அதுக்கு தான் உன்னை மாங்கா ன்னு சொன்னேன்.. சரி என்ன கிளம்பாம அப்டியே நிக்குற.. போ
கிஷோர்: அது எங்க இருக்குன்னு எனக்கு தெரியாதே.. எப்படிங்க போகணும்..
கலை: (இவன் கோமாளி தனத்தை பார்த்து சிரித்துக்கொண்டே) சரி.. நான் முன்னாடி போறேன்.. நீ என் விரலை பிடிச்சுட்டே வரியா..
கிஷோர்: ரொம்ப கலாய்க்காதீங்க!! ரெண்டு பெரும் ஒண்ணாவே போலாம்..
ஐந்து நிமிடத்திற்கு பிறகு அது இது என பல வகையான உணவுகளை ஆர்டர் பண்ணிவிட்டு டேபிளில் வந்து இருவரும் எதிர் எதிரே அமர்ந்தனர்..
கிஷோர் எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் அவளை பார்க்க, அவள் பார்த்ததும் சட்டென கண்களை உருட்டி சுத்தி முத்தி பார்க்க.. இரண்டு நிமிடங்கள் இப்டியே கடந்தது..
கலை: (என்ன இவன் எதுவும் பேச மாட்டிங்கிறான் என நினைத்தவள்) ஆர்டர் பண்ணது வர்றதுக்கு எப்படியும் கொறஞ்சது இருபது நிமிஷம் ஆகும்.. என உரையாடலை ஆரம்பித்து வைத்தாள்..