இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 1 186

சென்னை மாநகரத்துல சாயங்கால வேளை 4:15 மணிக்கு ஐந்தரை அடி உயரத்துல மாநிறத்துல சாதாரண முக கலையோட இருக்குற நம்ம கதையோட நாயகன் கிஷோர் தன்னோட TVS Excel பைக்கை முறுக்கிக்கிட்டு சென்னையில இருக்குற மிகப்பெரிய பேரங்காடிகளில் (super mall) ஒன்றான “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி” உள்ளே நுழைந்தான்..

சிரிச்ச முகத்தோட உள்ள வந்த கிஷோரோட முகம் பார்க்கிங் ஏரியாவில வண்டிய விடும் போது பக்கத்துல இருக்குற Bajaj Pulsar NS200, Royal Enfield Bullet, Duke வண்டிகளை பாத்ததும் அப்டியே வாடிப்போன பூ மாதிரி சோர்ந்து போச்சு..

காரணம் என்னன்னா சாதாரண குடும்பத்துல பொறந்து வளந்த எல்லாருக்கும் இருக்குற அந்த தாழ்வு மனப்பான்மை கிஷோருக்கு கொஞ்ச அதிகமா இருக்குது..

சரி இதெல்லாம் ஓரம் தள்ளிட்டு தன்னோட பாண்ட் பாக்கெட் ல இருந்து நேத்து ஆஃபீஸ் ல வச்சு தன்னோட நண்பன் ராகுல் கொடுத்த ஒரு ஓடாத வாட்ச் எடுத்தான்.. ராகுல் சொன்ன மாதிரி முதல் தளத்துக்கு போய்ட்டு அவன் சொன்ன ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் தேடி கண்டு பிடிச்சு உள்ள போனான்.

அங்க வேலை பாக்குற 2 ஆண்களை கடந்து மூணாவதா நிக்கிற ஒரு பொண்ணு கிட்ட அவனோட ரெண்டு காலும் அவனை இழுத்துட்டு போச்சு.. அவன் கண்ணு ரெண்டும் அவளை படம் எடுத்துக்கிட்டு இருந்துச்சு.. விரிச்சு விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல், அவளோட அழகான ரெண்டு புருவத்துக்கும் நடுல நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம், பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, சாயம் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ உதடு, ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்..

மெய் மறந்து அந்த மங்கையை ரசிச்சுட்டு இருந்த கிஷோர் ஐ ஒரு குரல் எழுப்பி விட்டுச்சு.. வேற யாரும் இல்லை அந்த பொண்ணோட குரல் தான்..

“ஏங்க உங்களை தான், எத்தன தடவ கேக்குறது என்ன வேணும் உங்களுக்கு? ஏதாச்சும் பதில் பேசுங்க”

சுய நினைவுக்கு வந்த கிஷோர் கொஞ்ச சங்கடமா உணர்ந்தான்.. சுத்தி முத்தி எல்லாரும் அவன் ஜொள்ளு வடித்ததை பார்த்துட்டு இருந்தாங்க.. “ஐயோ ஏன் டா கிஷோரு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்டி சைட் அடிக்குற” ன்னு மனசுக்குள்ள பொலம்பிட்டு