ஹாஹாஹா என்று சம்பத் சிரித்தான்.
அது தெரிந்து தான்டி அவன் வீட்டுக்கே உன்னை கொண்டு வந்து இருக்கோம்.போலீஸ் ஊர் முழுக்க உன்னை தேடுவார்கள்.ஆனா இங்கே மட்டும் தேடமாட்டார்கள்.நம் முதல் இரவையும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.ஆனா எனக்கு ஒரு சந்தேகம்டி,எனக்கும் கல்யாணம் ஆச்சு,அவனுக்கும் கல்யாணம் ஆச்சு,நானும் உன்னை ரெண்டாம் தாரமாக தான் கேட்டேன்.எனக்கு முடியாது என்று சொல்லிட்டு அவனுக்கு மட்டும் முந்தி விரிக்கிற,என்ன அவன் கொடுக்கிற பணமா?இல்லை வேற எதையாவது காட்டி மயக்கினானா?சொல்லுடி பணம் வேணும்னா சொல்லு, இல்லை நானும் என்னுடையதை அவுத்து காட்டவா?
ச்சீ,உன் அழுக்கு புத்திக்கு எல்லாம் தப்பா தான் தெரியும்.என்னை தொடுவதற்கு அவனுக்கு நான் மனைவி என்பதை தவிர்த்து நிறைய காரணங்கள் இருக்கு.ஆனா என் ஒரு கண் அசைவு மட்டுமே போதும்,அவன் அமைதியாக ஒதுங்கி போய் விடுவான்.இப்ப கூட நான் நல்லா இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் ஒதுங்கி ஒதுங்கி தான் போறான்.நான் இப்போ உயிரோடு இருப்பதற்கும், கற்போடு இருப்பதற்கும் முழுக்க முழுக்க அவன் தான் காரணம்.என் உடம்பு,உயிர் இரண்டுமே அவனுக்கு மட்டும் தான்.கடைசியாக உன் நல்லதுக்கு சொல்றேன்.ஒழுங்கா வழியை விட்டு விலகிவிடு.
அது தான் முடியாது ஸ்ருதி,உன் கற்பை நீ இப்ப என்னிடம் இழக்க போற,உன் உடம்பு எனக்கு தான்.
சம்பத் நெருங்கி வர,ஸ்ருதி கால்கள் பின்வாங்கியது.
பக்கத்தில் இருந்த பூச்சாடியை எடுத்து அவன் நெற்றியை நோக்கி வீச அதை லாவகமாக அதை தடுத்தான்.
ஸ்ருதி போன தடவை நான் மிஸ் பண்ணிட்டேன் . ஆனா இந்த தடவை ம்ஹீம் உன்னை விடவே மாட்டேன்.எல்லாத்துக்கும் நான் தயாராக தான் வந்து இருக்கேன்.
ஸ்ருதி மனம் தளராமல் தப்பிப்பதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று நாலா பக்கமும் கண்களால் தேடி கொண்டு இருந்தாள்.
சம்பத் அவளை இழுத்து இறுக்கி அணைக்க,சாப்பிட்ட மாத்திரை வேலை செய்ய,இந்த முறை அவன் பிடித்த பிடி மிக வலுவாக இருந்தது.எவ்வளவு முயன்றும் அவன் பிடியில் இருந்து வெளியே வர முடியவில்லை.மிருகத்தனமாக அவன் இடுப்பை கசக்க,அப்பொழுது தான் ஷெட்டி தன்னை எவ்வளவு மென்மையாக கையாண்டான் என்று ஸ்ருதிக்கு புரிந்தது.அவள் கழுத்தில் இருந்து வந்த வாசம் இன்னும் மோகத்தை தூண்ட,நாக்கினால் அவள் கழுத்தை நக்கினான்.ஸ்ருதி அவன் தோளை பற்றி ஆழமாக பற்கள் பதிய கடிக்க “ஆ” என்று சம்பத் வலியில் அலறினான்.இதில் அவன் பிடியை சற்று தளரவிட்டான்.இதை பயன்படுத்தி கொண்டு ஸ்ருதி தப்ப முயல அவள் சேலையை பற்றினான்.சேலையை தாறுமாறாக உருவ அவள் பிடியில் இருந்து சேலை நழுவி கொண்டே வந்தது.ஸ்ருதி மீதி உள்ள சேலையை அவன் வசம் செல்லாமல் பிடித்து கொள்ள,அவள் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது.மீண்டும் அவன் அறைய தன் கைகளை கொண்டு ஸ்ருதி தடுக்க முற்பட்ட போது,மீதி இருந்த சேலையை அவளிடம் இருந்து உருவினான்.அந்த அறை முழுக்க ஆடு புலி ஆட்டம் தொடங்கியது.ஸ்ருதி ஓட சம்பத் துரத்தி கொண்டே இருந்தான்.அந்த நான்கு சுவர் உள்ள அறைக்குள் அந்த பேதை பெண்ணால் எவ்வளவு தூரம் ஓட முடியும்.உடலும் மனமும் சோர்வடைய தொடங்கியது.ஸ்ருதி தடுக்கப்பட்டாள், அறையப்பட்டாள்.கூந்தலை பிடித்து இழுக்கப்பட்டாள்.அவனிடம் நடந்த போராட்டத்தில் கண்கள் லேசாக இருட்டி கொண்டு வந்தது.அவளை பிடித்து கட்டிலில் தள்ளி அவள் மேல் பரவி இரு கைகளை அழுத்த பற்றி கொண்டு,
” இது சினிமா கிடையாது ஸ்ருதி,உன்னை இந்த நேரத்தில் கதவை உடைத்து கொண்டு யாரும் காப்பாற்ற வர மாட்டார்கள்” என்று அவள் மாங்கனியில் வாய் வைக்க கீழே குனிய
அவ்வளவுதான் எங்கே தன்னை இழந்து விடுவோமோ என்று பயந்த ஸ்ருதி “முருகா என்னை காப்பாற்று” என்று அடிதொண்டையில் இருந்து கத்தினாள்.
அப்பொழுது கண்ணாடி உடைபடும் சத்தம் கேட்டது.உடைந்த கண்ணாடியின் வழியே ஒரு முரட்டு உருவம் உள்ளே குதித்தது.
ஷெட்டிக்கு ஏனோ மனம் பொறுக்கவில்லை.யாரிடமாவது பேச வேண்டும் என்று இருந்தது.ஹெலிகாப்டரில் மங்களூர் நோக்கி விரைந்து கொண்டு இருக்க மதுவிற்கு ஃபோன் செய்தான்.
“மது ” என்று போனில் ஷெட்டி அழைக்க
சொல்லுடா என்ன குரல் ஒரு மாதிரி இருக்கு,ஸ்ருதி நல்லா இருக்காளா?
மது,நான் ஊரில் இல்லாத நேரம் பார்த்து எவனோ ஸ்ருதியை கடத்தி இருக்கான் என்று சொல்லும் போதே அவன் உடைந்து தேம்பி தேம்பி அழுதான்.
டேய் என்னடா இப்படி அழுவுற,நீ அழுது நான் பார்த்ததே இல்லையடா.
இல்ல மது,நான் இதுவரை அழுதது இல்ல.இதுவரை அவ என்கூட இருக்கும் போது எதுவும் தெரியல.ஆனா இப்போ என்கூட அவ இல்லை என்று ஒரு நிமிஷம் நினைக்கும் போது ஏன் என்று தெரியல ஒரு நிமிஷம் பதறுது. எங்கே நான் செய்த பாவங்கள் எல்லாம் அவளை தாக்கி விடுமோ என்று பயமா இருக்கு.
ஸ்ருதிக்கு ஒன்னும் ஆவாது.அவ தைரியமான பொண்ணு.நீ முதலில் அழுவதை நிப்பாட்டு.நீயே இப்படி அழுது துவண்டு விட்டால் அப்புறம் உன் புத்தி வேலை செய்யாது.அவளை கண்டுபிடிக்கறதும் அப்புறம் கஷ்டமாகி விடும்.இப்போ நீ எங்கே இருக்கே.
இந்த விசயம் கேள்விப்பட்டு அவசரமாக நான் இப்போ ஹெலிகாப்டரில் மங்களூர் போய்ட்டு இருக்கேன் மது,இன்னும் இருபது நிமிஷத்தில் போய் சேர்ந்து விடுவேன்.
சரி நீ கவலைபடாதே,நான் நைட் பிளைட் ஏறி காலை அங்கே வந்து விடுவேன்.நான் வருவதற்குள் ஸ்ருதி உனக்கு கிடைத்து விடுவாள் பாரு என்று மது ஆறுதல் சொல்லி போனை வைத்தாள்.
