மதன மோக ரூப சுந்தரி – 3 14

“நல்லா தூங்கிட்டு இருந்திங்க.. டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நெனச்சேன்..!!”

“ம்ம்.. இனிமே இப்படிலாம் பண்ணாத.. புரியுதா..??”

“ச..சரித்தான்..!!”

“உனக்கு ரொம்ப வீக்கான ஹார்ட் ஆதிரா.. இந்த மாதிரி அட்வென்சர்லாம் உனக்கு வேண்டாம்.. ஹாஹா.. ஓகேவா..??” சிபி அந்தமாதிரி கேலிச்சிரிப்புடன் சொல்ல,

“ஹாஹா.. சரி..!!” ஆதிராவும் இயல்புக்கு திரும்பி புன்னகைத்தாள்.

“பெட்க்கு போலாமா..??”

“ம்ம்..!!”

“வா.. நானே உன்னை தூக்கிட்டு போறேன்..!!”

“ஐயோ.. வேணாம்த்தான்..!!”

ஆதிரா பதறிக்கொண்டிருக்கும்போதே சிபி அவளை அலாக்காக கைகளில் அள்ளிக்கொண்டான்..!! அவள் நாணத்துடன் சிணுங்க, அவன் குறும்புடன் சிரித்தவாறே.. குழந்தையைப்போல அவளை தூக்கிக்கொண்டு படியேறினான்..!!

அதே நேரம்.. பாறையில் அமர்ந்திருந்த அந்த உருவம் இப்போது படக்கென ஜன்னலுக்கருகே தோன்றியது.. கண்ணாடி ஜன்னலில் கைகளை விரித்து வைத்தவாறு கருப்பு பிம்பமாக காட்சியளித்தது.. படிக்கட்டில் செல்கிற ஆதிராவையும், சிபியையுமே உர்ரென்று முறைத்து பார்த்தது..!! வினோதமான ஒரு சப்தம் அந்த உருவத்திடம் இருந்து வெளிப்பட்டது..!!

“க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்.. க்கர்ர்க்க்க்கர்..!!!”