வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்பது 56

நான் தலையசைத்தேன் வேண்டாமென்று. அதெல்லாம் வேணாம். நீ, இங்கியே இரு! ப்ளீஸ்.

கடைசியாக நான் சொன்ன ப்ளீஸ், அவனுள் என்னமோ செய்தது. அப்படியே அமர்ந்திருந்தான். மற்றபடி அவன் என்னை எதுவும் செய்ய முயற்சிக்கவில்லை. அந்த நிலை எங்கள் இருவருக்குமே பிடித்திருந்தது. முக்கியமாக எனக்கு!

அப்படியே இருந்தோம் சிறிது நேரம். என் மேலுடல் மட்டும் ப்ளாங்கெட்டால் போர்த்தப்பட்டிருந்தது. கால் முழுக்க வெளியே தொங்க விட்டிருந்தபடியால், அது வழியாக குளிர் என் உடலில் ஏற ஆரம்பித்தது.

நான் இன்னமும், நடுங்குவது உணர்ந்த அவன், நல்லா போர்த்திக்கோ, என்று சொல்லி வலுக்கட்டாயமாக எழுப்பி, என்னை நன்றாக படுக்க வைத்தவன், என் உடல் முழுக்க போர்த்தி விட்டு, வெளியே சென்று கதவை சாத்திவிட்டு, உள்ளே வந்து ஹீட்டரை ஆன் செய்தான். பின் என் அருகில் வந்தவன், ஹீட்டர் போட்டிருக்கேன், சரியாகிடும் என்று எனக்கு ஆறுதல் சொன்னான்.

நான் படுத்த படியே, எனக்கு வலது புறம் இருந்த காலி இடத்தை தட்டி அமரச் சொன்னேன்.

அவன் தயங்கியபடியே என்னருகில் அமர்ந்தான்.

அவனது தயக்கத்தைப் பார்த்து, எனக்கு, உள்ளுக்குள் சிரிப்பு வந்தது! நீயாடா, என்னை ரேப் பண்ண வந்த?

என் மேலுள்ள காதலால், அக்கறையால், நான் செய்யாத ஒன்றை செய்ததாய் நினைத்து என்னை ரேப் பண்ண வந்தவன், இப்பொழுது, அதே காதலின் மிகுதியால், என் அருகில் அமரக் கூட தயங்குவது கண்டு, என் உள்ளம் இன்னமும் அவன் மேல் காதல் கொண்டது.

இதுவல்லவோ ஆண்மை! என் மேல் பலவந்தமாக பாய்வதா ஆண்மை! நான் மறைமுகமாக அன்பைத் தெரிவிக்கும் போதும், தயங்குவதே ஆண்மை!

நான் மிக நெகிழ்ந்திருந்தேன், அவனது அன்பில்! அந்த நெகிழ்ச்சியின் காரணமாக, அவன் அருகில் அமர்ந்தவுடன், மீண்டும் அவன் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டேன்!

என் முகம் ஏறக்குறைய, அவன் வயிற்றில் முகம் புதைத்திருந்தது. என் கைகள், அவனது இடுப்பை சுற்றியிருந்தன.

இன்னமும், அவன் தயங்கிக் கொண்டுதான் இருந்தான். அது, அவன், இன்னும் எதுவும் செய்யாமல் இருப்பதிலேயே தெரிந்தது! எனக்கும் கூட, நான் என்ன எதிர் பார்க்கிறேன் என்று தெரியவில்லை!

அவனது உடல் கூட கொஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது! அது குளிரிலா அல்லது எனது நெருக்கம் தந்த தயக்கத்தாலா என்று தெரியவில்லை!

நான், எனது ப்ளாங்கெட்டையே, அவனுக்கும் போர்த்தினேன். அவனையும் சரியாக படுக்க வைத்தவள், இப்பொழுது அவன் மார்பினுள் புதைந்து கண்களை மூடிக் கொண்டேன்!

அந்தத் தருணத்தை கண் மூடி ரசித்தேன். அவனுக்கும், எனக்குமான முதல் அணைப்பு! இது நாள் வரை நான் அனுபவித்த என் வேதனைகள், என் பிரச்சினைகள் எல்லாம் போய், நான் கை விட்ட எனது காதலை மீண்டும் கண்டெடுத்த நிம்மதி, ஒரு பெரும் பாதுகாப்பு என் மனதுள் தோன்றியது.

என்னையறியாமல், என் கண்கள் கலங்கியது!

அவன் உடலில் இருந்து வந்த ஆண்மை கலந்த வாசத்தை மெல்ல சுவாசித்தேன்.

கண் மூடியிருந்தாலும், நான் தூங்கவில்லை என்பதை உணர்ந்தவன், மெல்ல காதோரம் இருந்த என் முடிக் கற்றைகளை சரி செய்தான். என் முன் நெற்றியை வருடினான்.

அவனது இன்னொரு கை, என்னை மெல்ல அணைத்திருந்தது.

இப்ப பரவாயில்லையா? இன்னும் குளிருதா?

நான் பதில் சொல்லவில்லை!

அவனது கை, மெல்ல என் கன்னத்தை வருடிக் கொடுத்தது. இன்னொரு கை, முதுகை ஆறுதல் படுத்துவது போல், தடவிக் கொடுத்தது.

மெல்ல அவன் விரல்கள் என் காது மாடல்களை வருடியது!

எனக்கு கூசியது! அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டேன் பேசாமல். இன்னமும் என் கண்கள் மூடித்தான் இருந்தது.

அப்படியே வருடிக் கொடுத்த கை, மெல்ல அவளது பின்னங்கழுத்துக்குச் சென்றது. மெல்ல அவளது பின்னங்கழுத்தில் வருடிக் கொடுத்தவாறு, விரல் வட்டம் போட்டது.

எனக்கு குறுகுறு என்றிருந்தது. இன்னமும் அவனை இறுக்கிக் கொண்டேன். என் மூச்சுக்காற்று அவனது கன்னங்களைத் தீண்டியது. என் உதடுகள், அவனது கழுத்தில் உரசியது.

அவனால் நம்ப முடியவில்லை போலும். எப்படி திடீரென்று, அவனைத் தேடி வந்திருக்கிறேன் என்று திகைத்தான்.

லாவண்யா.

1 Comment

  1. Sejal mail pannu valavanmadhan gmail yen mail

Comments are closed.