வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் பதினொன்று 85

அப்புறம்தான், நானா, அந்த டைம்ல வைஷாலிதானே, எல்லாம் பாத்துகிட்டான்னு அவளைக் கேட்டேன். இப்ப அவளைக் கேட்டதுக்கப்புறம்தான் எல்லா விஷயத்தையும் சொன்னா. அதுக்கப்புறம் சொல்ல வந்தவளை, நீ தடுத்ததும் சொன்னா.

நீ ஏன்டி, அப்பவே என்கிட்ட வந்து சொல்லலை?

——-

சொல்லுடி!

எ… எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு வர்றது?

முதல்ல லவ்வைச் சொன்னப்பவும், முடியாதுன்னு சொல்லிட்டு, இப்ப இந்தச் சமயத்துலியும், தப்பே பண்ணாத உன்னை திட்டி, என்னை பாக்க வராதன்னு பேசிட்டு, இப்ப எல்லாம் தெரிஞ்ச பின்னாடி வந்தா அது, என் காதலுக்குதானே அசிங்கம்! எப்டி வர்றது?

உசிரா காதலிக்கிறவனை, நம்பாத நான்லாம் என்ன பொண்ணு? ம்ம்?

நான் இயல்பாக, எந்தளவு அவனைக் காதலிக்கிறேன் என்று சொன்னதும், இன்னும் என்னை அழுத்தமாக இறுக்கிக் கொண்டான். பின் சொன்னான்.

உனக்கு என்னடி குறைச்சல்? என் உசிருடி நீ! அதுக்கா இவ்ளோ யோசிச்ச? இப்பியும், நானா கண்டுபிடிக்காட்டி, நீ சொல்லாம, தனியாவே ஃபீல் பண்ணியிருந்திருப்பீல்ல?

சத்தியமா இல்லை… நீ என்னை நம்பனும். இந்த ஊட்டி ட்ரிப் முடியுறதுக்குள்ள உன்கிட்ட இதை பேசிடனும்னு நினைச்சேன்.

இன்ஃபாக்ட், இன்னிக்கு, நீ ஆரம்பிக்காட்டி, நானே பேசியிருந்திருப்பேன்…. காலையில நீ எனக்கு நகை எடுத்துக் கொடுத்தப்பவே என்னால தாங்க முடியலை. அதுனால எப்புடியும் இன்னிக்கு பேசிடலாம்னுதான், உனக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். நீ, எ… என்னை நம்புறீல்ல?

ஏய்… ச்சீ… உன்னை நம்பாம வேற யாரைடி நம்பப் போறேன். அதான் ரெண்டு நாளா, என்னென்னமோ யோசிச்சிகிட்டு, குழப்பமா இருந்தியா?

அவன் அந்தளவு என்னைக் கவனித்திருப்பதும், அவன் என் மேல் வைத்திருந்த நம்பிக்கையும், என்னை மலைக்க வைத்தது.

அவனை இறுக்கி அணைத்து, ஆம், என்று, அவன் அணைப்புக்குள்ளேயே தலையசைத்தேன்.

இருவரும் காற்று கூட புகாத வண்ணம் மிகவும் இறுக்கமாக அணைத்திருந்தோம். எல்லா உண்மைகளும் தெரிந்த பின், எந்தக் கவலையும் இல்லாமல், மிகவும் சந்தோஷமாக, காதலுடன் கூடிய ஒரு அணைப்பு, எவ்வளவு பெரிய வரம் என்று அந்தத் தருணத்தில் உணர்ந்தேன்.

அவனுடைய மார்பில் என்னை புதைத்துக் கொண்ட பொழுது, சிறு வயதிலிருந்து நான் மிகவும் மிஸ் செய்த என் தாயை அவனிடத்தில் உணர்ந்தேன்.

இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? இவனுக்கு நான் என்ன செய்து விடப் போகின்றேன், இவன் தரும் அன்பை பன்மடங்கு இவனுக்கு திருப்பித் தருவதை விட?

அப்படியே, அவனையும் இழுத்துக் கொண்டு அப்படியே பெட்டில் சரிந்தேன். மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து, அவனது உடலுக்குள் முழுதும் ஒன்றி, அவனை இறுக்கி அணைத்துக் கொண்டேன்.

அப்படியே சிறிது நேரம் இருந்தோம். பின் சிறிது நேரம் கழித்து விலகப் பார்த்தவனை, நான் விடாமல் இன்னும் இறுக்கிக் கொண்டேன்.

ஏய்… விடு!

ம்கூம்…